LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

சேவைக்கு ஒரு சிலை

சென்னை நகரை ஒட்டி மனை வாங்கி வீடு கட்டி வாழ வேண்டும் என்பது ஒருவருடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது . பத்திரிக்கையில் அப்போது ஒரு விளம்பரம் வந்தது . அம்போ ரியல் எஸ்டேட் , முப்பது நிமிட பயணம் , நகரை ஒட்டிய வீட்டு மனை , குடிநீர் , மின்சார வசதி , பள்ளி , கல்லூரி , வெளியூர் பஸ் வசதி , மனை வாங்குவோருக்கு குலுக்கல்முறையில் ஹீரோ ஹோண்டா , மாருதிக்கார் - இந்த விளம்பரம் அவரை ஈர்த்தது .

ஒரு ஞாயிறன்று அந்த ரியல் எஸ்டேட் வேனில் ஏறி மனையைப் பார்க்கச்சென்றார் . வண்டி விழுப்புரம் , கடலூர் பண்ருட்டி , திண்டிவனம் , நெய்வேலி , கும்பகோணம் என போய்க்கொண்டே இருந்தது . கடைசியில் தஞ்சாவூர் தாண்டி , புதுக்கோட்டை பகுதியில் ஒரு அந்திரான வனப்பகுதி போன்ற திடலில் அரோகரா நகர் பகுதியைக் காட்டினார் . சார் இதுரொம்ப தூரமாச்சே ” என்று இவர் கேட்க . என்ன சார் தூரம் இது பக்கத்துலே தான் விமான நிலையம் வரப்போகுது . ப்ளைட்ல ஏறினா 30 நிமிடத்துலே சென்னை வந்துடலாம் ” என்றார் ரியல் எஸ்டேட்காரர் .

இப்படிப்பட்ட மோசடிக்காரர்கள் வாழும் உலகில் தன்னலம் சிறிதும் இன்றிப் பிறர் நலத்துக்காவே சேவை செய்த காமராசருக்குச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது .

1961 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம்தேதி பெருந்தலைவர் திருவுருவச் சிலையை நேருஜி திறந்து வைத்தார் . விழாவிற்கு தலைமை வகித்த சென்னை நகர மேயர் , தன்னலமற்ற தியாகத் தலைவர் , மக்களின் மன இருளைப்போக்க கல்வி எனும் விளக்கேற்றியவர் ” என்று பாராட்டினார் .

சிலையைத்திறக்க வந்த நேரு , உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை அமைப்பதை நான் விரும்புவதில்லை . மறைந்த பிறகு மரியாதை செலுத்துவதே சிறந்தது என நினைப்பவன் நான் . ஆனால் காமராசர் செயலில் தன்னை மறந்து ஈடுபடும் ஆற்றலுடையவர் . மக்களிடமிருந்து தோன்றிய தலைவர் எனது நண்பர் என்ற முறையில் அவரது சிலையை திறந்து வைக்கிறேன் ” என்று கூறினார் .

48 ஆண்டுகளுக்கு முன் நேருஜி சென்னை வந்தபோது சத்தியமூர்த்தியின் வீட்டில் தங்கினார் . அலைந்த களைப்பில் இரவில் படுத்துத் தூங்க முயன்றார் . ஆனால் அவரைக் கண் மூடவிடாமல் வராண்டாவில் தூங்கக் கொண்டிருந்த இளைஞனின் குறட்டை சத்தம் கெடுத்தது . கோபம் கொண்ட நேருஜி சத்தியமூர்த்தி இதோ இந்த பையனை சென்னையை விட்டே வெளியேற்று , அல்லது எனது படுக்கையைத் தூக்கி கடற்கரையில் போடு ” என்றார் . அன்று அவ்வாறு குறட்டை விட்டுத் தூங்கிய காமராசரை வெளியேறச்சொன்ன நேருஜிதான் அவரது திருவுருவச் சிலையைப் பின்னாளில் மகிழ்ச்சியோடு திறந்து வைத்தார் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.