LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-100

 

7.100.திருநொடித்தான்மலை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம் 
1017 தானெனை முன்படைத்தான் அத 
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி 
னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த 
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் 
தான்மலை உத்தமனே.
7.100.1
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான்; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு, அந்தோ, நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன்! செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 
1018 ஆனை உரித்தபகை அடி 
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி 
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ் 
செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித் 
தான்மலை உத்தமனே.
7.100.2
யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி, அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன்; அவ்வளவிற்கே, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம் முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு, ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான்; அஃது, அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ! 
1019 மந்திரம் ஒன்றறியேன் மனை 
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி 
சேசெயுந் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில் அழ 
கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித் 
தான்மலை உத்தமனே.
7.100.3
நெஞ்சே, அடியேன், மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களைப் புனைந்து கொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ! 
1020 வாழ்வை உகந்தநெஞ்சே மட 
வார் தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென்னை அது 
மாற்றி அமரரெல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்ட 
னேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித் 
தான்மலை உத்தமனே.
7.100.4
உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், அந்நிலையினின்றும் நீக்கி, தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 
1021 மண்ணுல கிற்பிறந்து நும்மை 
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல் தொண்ட 
னேன்இன்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர்கள் விரும் 
பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித் 
தான்மலை உத்தமனே.
7.100.5
'மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார், பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரையளவைப் பொருளை, அடியேன் இன்று நேரிற்கண்டேன்' என்று தன்பால் வந்து சொல்லுமாறு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தேவரும் கண்டு விருப்பங்கொள்ள, என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 
1022 அஞ்சினை ஒன்றிநின்று அலர் 
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மனமே வைகி 
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட 
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந்தான் நொடித் 
தான்மலை உத்தமனே.
7.100.6
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், ஐம்புலன்களைப் பொருந்தி நின்று, பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என் மனத்தின்கண்ணே வீற்றிருந்து, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண்முன்னே, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட, வெவ்விய சினத்தையுடைய யானையூர்தியை அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 
1023 நிலைகெட விண்ணதிர நிலம் 
எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி 
யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர் 
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித் 
தான்மலை உத்தமனே.
7.100.7
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி, தனது திரு மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன், பூக்களைக் கொண்டு, யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு, உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 
1024 அரவொலி ஆகமங்கள் அறி 
வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெ 
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி 
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந்தான் நொடித் 
தான்மலை உத்தமனே.
7.100.8
'அரகர' என்னும் ஒலியும், ஆகமங்களின் ஒலியும்,அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்து வந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த, 'வாணன்' என்னும் கணத்தலைவன் வந்து, முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 
1025 இந்திரன் மால்பிரமன் னெழி 
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த 
யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் 
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித் 
தான்மலை உத்தமனே.
7.100.9
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானை யூர்தியை அளித்தருளி, அங்கு, மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள், 'இவன் யார்' என்று வினவ, "இவன் நம் தோழன்; 'ஆரூரன்' என்னும் பெயரினன்" என்று திருவாய் மலர்ந்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 
1026 ஊழிதொ றூழிமுற்றும் உயர் 
பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின் சுவை 
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந் 
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை 
யப்பர்க் கறிவிப்பதே.
7.100.10
ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திரு நாவலூரில் தோன்றியவனாகிய யான், இசை நூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழை யுடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினை யுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப் பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும். 
திருச்சிற்றம்பலம்

 

7.100.திருநொடித்தான்மலை

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம் 

 

1017 தானெனை முன்படைத்தான் அத 

றிந்துதன் பொன்னடிக்கே

நானென பாடலந்தோ நாயி 

னேனைப் பொருட்படுத்து

வானெனைவந் தெதிர்கொள்ள மத்த 

யானை அருள்புரிந்து

ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் 

தான்மலை உத்தமனே.

7.100.1

 

  திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான்; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு, அந்தோ, நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன்! செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 

 

 

1018 ஆனை உரித்தபகை அடி 

யேனொடு மீளக்கொலோ

ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி 

யானை நினைந்திருந்தேன்

வானை மதித்தமரர் வலஞ் 

செய்தெனை யேறவைக்க

ஆனை அருள்புரிந்தான் நொடித் 

தான்மலை உத்தமனே.

7.100.2

 

  யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி, அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன்; அவ்வளவிற்கே, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம் முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு, ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான்; அஃது, அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ! 

 

 

1019 மந்திரம் ஒன்றறியேன் மனை 

வாழ்க்கை மகிழ்ந்தடியேன்

சுந்தர வேடங்களால் துரி 

சேசெயுந் தொண்டன்எனை

அந்தர மால்விசும்பில் அழ 

கானை யருள்புரிந்த

துந்தர மோநெஞ்சமே நொடித் 

தான்மலை உத்தமனே.

7.100.3

 

  நெஞ்சே, அடியேன், மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களைப் புனைந்து கொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ! 

 

 

1020 வாழ்வை உகந்தநெஞ்சே மட 

வார் தங்கள் வல்வினைப்பட்

டாழ முகந்தவென்னை அது 

மாற்றி அமரரெல்லாம்

சூழ அருள்புரிந்து தொண்ட 

னேன் பரமல்லதொரு

வேழம் அருள்புரிந்தான் நொடித் 

தான்மலை உத்தமனே.

7.100.4

 

  உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், அந்நிலையினின்றும் நீக்கி, தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 

 

 

1021 மண்ணுல கிற்பிறந்து நும்மை 

வாழ்த்தும் வழியடியார்

பொன்னுல கம்பெறுதல் தொண்ட 

னேன்இன்று கண்டொழிந்தேன்

விண்ணுல கத்தவர்கள் விரும் 

பவெள்ளை யானையின்மேல்

என்னுடல் காட்டுவித்தான் நொடித் 

தான்மலை உத்தமனே.

7.100.5

 

  'மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார், பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரையளவைப் பொருளை, அடியேன் இன்று நேரிற்கண்டேன்' என்று தன்பால் வந்து சொல்லுமாறு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தேவரும் கண்டு விருப்பங்கொள்ள, என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 

 

 

1022 அஞ்சினை ஒன்றிநின்று அலர் 

கொண்டடி சேர்வறியா

வஞ்சனை யென்மனமே வைகி 

வானநன் னாடர்முன்னே

துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட 

னேன்பர மல்லதொரு

வெஞ்சின ஆனைதந்தான் நொடித் 

தான்மலை உத்தமனே.

7.100.6

 

  திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், ஐம்புலன்களைப் பொருந்தி நின்று, பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என் மனத்தின்கண்ணே வீற்றிருந்து, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண்முன்னே, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட, வெவ்விய சினத்தையுடைய யானையூர்தியை அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 

 

 

1023 நிலைகெட விண்ணதிர நிலம் 

எங்கும் அதிர்ந்தசைய

மலையிடை யானைஏறி வழி 

யேவரு வேனெதிரே

அலைகட லால்அரையன் அலர் 

கொண்டுமுன் வந்திறைஞ்ச

உலையணை யாதவண்ணம் நொடித் 

தான்மலை உத்தமனே.

7.100.7

 

  திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி, தனது திரு மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன், பூக்களைக் கொண்டு, யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு, உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 

 

 

1024 அரவொலி ஆகமங்கள் அறி 

வார்அறி தோத்திரங்கள்

விரவிய வேதஒலி விண்ணெ 

லாம்வந் தெதிர்ந்திசைப்ப

வரமலி வாணன்வந்து வழி 

தந்தெனக் கேறுவதோர்

சிரமலி யானைதந்தான் நொடித் 

தான்மலை உத்தமனே.

7.100.8

 

  'அரகர' என்னும் ஒலியும், ஆகமங்களின் ஒலியும்,அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்து வந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த, 'வாணன்' என்னும் கணத்தலைவன் வந்து, முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 

 

 

1025 இந்திரன் மால்பிரமன் னெழி 

லார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த 

யானை யருள்புரிந்து

மந்திர மாமுனிவர் இவன் 

ஆர்என எம்பெருமான்

நந்தமர் ஊரனென்றான் நொடித் 

தான்மலை உத்தமனே.

7.100.9

 

  திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானை யூர்தியை அளித்தருளி, அங்கு, மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள், 'இவன் யார்' என்று வினவ, "இவன் நம் தோழன்; 'ஆரூரன்' என்னும் பெயரினன்" என்று திருவாய் மலர்ந்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்! 

 

 

1026 ஊழிதொ றூழிமுற்றும் உயர் 

பொன்நொடித் தான்மலையைச்

சூழிசை யின்கரும்பின் சுவை 

நாவல ஊரன்சொன்ன

ஏழிசை இன்றமிழால் இசைந் 

தேத்திய பத்தினையும்

ஆழி கடலரையா அஞ்சை 

யப்பர்க் கறிவிப்பதே.

7.100.10

 

  ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திரு நாவலூரில் தோன்றியவனாகிய யான், இசை நூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழை யுடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினை யுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப் பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.