LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-36

 

7.036.திருப்பைஞ்ஞீலி 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர். 
தேவியார் - விசாலாட்சியம்மை. 
361 காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
ஓரி டத்திலே கொள்ளும் நீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர
விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலும்
ஆர ணீய விடங்கரே.
7.036.1
கருமைநிறம் பொருந்திய நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே, நிலவுலகமெல்லாம் உம்மையே வணங்கித் துதித்துத் தொண்டுபுரியும் பெருமையுடைய, திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில்வாழும் அழகரே, நீர் வெண்மையான தலையோட்டினைக் கையிற்கொண்டு ஊரெலாந் திரிந்து என்ன பெறப் போகின்றீர்? இவ் வோரிடத்திற்றானே நீர் வேண்டிய அளவினதாகிய பிச்சையைப் பெற்றுக்கொள்வீர்; அது நிற்க; உமக்கு முத்து வடமாவது, பாம்புதானோ? சொல்லீர். 
362 சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல்
வாய பாம்பது மூசெனும்
பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற்
பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்
மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே.
7.036.2
இறைவரே, மலையின்கண் பிறந்த, 'சந்தனம், வேங்கை, கோங்கு, மிக்க கரிய அகில், சண்பகம்; என்னும் மரங்களை அலைத்துக்கொண்டு வரும், தண்ணிய நீர் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கின்ற, காட்டில் வாழும் அழகரே, நுமது வெள்விடை முழக்கமிட்டுச் சினந்து பார்க்கின்றது, சிவந்த நெருப்புப் போலும் நஞ்சினைக் கொண்ட வாயினையுடைய பாம்பு, 'மூசு' என்னும் ஓசையுண்டாகச் சீறுகின்றது; ஆதலின், நீர் பிச்சைக்கு வரும் போது கையில் பாம்பையேனும் கொண்டுவருதல் வேண்டா. 
363 தூய வர்கண்ணும் வாயும் மேனியுந்
துன்ன ஆடை சுடலையில்
பேயொ டாடலைத் தவிரும் நீரொரு
பித்த ரோஎம் பிரானிரே
பாயும் நீர்க்கிடங் கார்க மலமும்
பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே.
7.036.3
எம்பெருமானிரே, பாயுந் தன்மையுடைய நீரைக் கொண்ட அகழியில் நிறைந்துள்ள தாமரைகளும், அதன் கரையில், மாதவியும், புன்னையும் பொருந்திய' சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள, காட்டில் வாழும் அழகரே, நீர், கண்ணும், வாயும், மேனியும் அழகியராய் இருக்கின்றீர்; ஆயினும், தைத்த கோவணத்தை உடுத்து, சுடலையில் பேயோடு ஆடுதலை ஒழிய மாட்டீர்; நீர் ஒரு பித்தரோ? அவற்றை விட்டொழியும். 
364 செந்த மிழ்த்திறம் வல்லி ரோசெங்கண்
அரவம் முன்கையில் ஆடவே
வந்து நிற்குமி தென்கொ லோபலி
மாற்ற மாட்டோ மிடகிலோம்
பைந்தண் மாமலர் உந்து சோலைகள்
கந்த நாறுபைஞ் ஞீலியீர்
அந்தி வானமும் மேனி யோசொலும்
ஆர ணீய விடங்கரே.
7.036.4
பசிய, தண்ணிய, சிறந்த பூக்களை உதிர்க்கின்ற சோலைகள் நறுமணம் வீசுகின்ற திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளி இருப்பவரே. காட்டில் வாழும் அழகரே, நீர் மகளிர் மனத்தைக் கவர்தற்கு, 'இயல், இசை, நாடகம்' என்னும் முத்தமிழிலும் வல்லிரோ? நும்மேனியும் அந்தி வானம் போல்வதோ? சொல்லீர், அவை நிற்க; நீர், உமது முன்கையில் பாம்பு நின்று படம் எடுத்து ஆடும்படி வந்து நிற்பது என்? இதனால், நாங்கள் கொண்டுவந்த பிச்சையை இடாது போக மாட்டேமும், இடமாட்டேமும் ஆகின்றேம். 
365 நீறு நுந்திரு மேனி நித்திலம்
நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்
திடகி லோம்பலி நடமினோ
பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.
7.036.5
தலைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு, 'யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்றீர்; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது. ஆயினும், கரிய நண்ட கண்களையுடைய பெண் ஒருத்தியோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர்; அதன் மேலும் நீர், கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ? சொல்லீர்; இதனால், உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம்; நடவீர். 
366 குரவம் நாறிய குழலி னார்வளை
கொள்வ தேதொழி லாகிநீர்
இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே
நடந்து போகவும் வல்லிரே
பரவி நாடொறும் பாடு வார்வினை
பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.
7.036.6
நாள்தோறும் பாடிப் பரவுவாரது வினைகளைப் பற்றறச் செய்யும் திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், குராமலரின் மணத்தை வீசுகின்ற கூந்தலையுடைய மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்வதே தொழிலாய், இங்குள்ள இல்லங்களை இரவிலும் வந்து அறிகின்றீர்; அதனால், நள்ளிரவில் இங்குநின்றும் நடந்துபோகவும் வல்லீரோ? அதுவன்றிப் பாம்பு ஆட்டவும் வல்லீரோ? சொல்லீர். 
367 ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர்
என்பெ லாமணிந் தென்செய்வீர்
காடு நும்பதி ஓடு கையது
காதல் செய்பவர் பெறுவதென்
பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.
7.036.7
காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான், பாடுதலையுடைய வண்டுகள் இசையை முழுக்குகின்ற சோலைகளையுடைய திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சையிடுமின்' என்று சொல்லி வந்து நிற்கின்றீர்; நீர், இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடுகின்றீர்; அதனோடு ஒழியாது, எலும்புகளையெல்லாம் அணிந்து என்ன பெறப்போகின்றீர்? அதுவன்றி, நும் ஊரோ, காடு; நும் கையில் இருப்பதோ, ஓடு; இவ்வாறாயின் உம்மைக் காதலிப்பவர் பெறும் பொருள் யாது? இந்நிலையில் நீர், ஆடல் பாடல்களிலும் வல்லீரோ? சொல்லீர். 
368 மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங்
கங்கை யாளொடு திங்களும்
மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு
வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அத்தி யீருரி போர்த்தி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.
7.036.8
காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான் அடியார்களும், சித்தர்களும் பத்திமிகுதியால் திருப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்று சொல்லிவந்து நிற்கின்றீர்; 'ஊமத்தை, கொன்றை' என்னும் இவற்றின் சிறந்த மலர்களும், வன்னியின் இலையும், கங்கையும், பிறையும், அவற்றொடு நெருங்கிய வெண்டலையும், கொக்கிறகும், வெள்ளெருக்கும் உம் சடையிலே உள்ளன; அவைகளேயன்றி, யானையை உரித்த தோலையும் மேனிமேல் போர்த்துக் கொள்வீரோ? சொல்லீர். 
369 தக்கை தண்ணுமை தாளம் வீணை
தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்க ரைகுட முழுவி னோடிசை
கூடிப் பாடிநின் றாடுவீர்
பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.
7.036.9
காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான், எப்பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்று சொல்லி வந்து நிற்கின்றீர். நீர், 'தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு குடமுழா' என்னும் இவற்றொடு கூடி, பல இசைகளைப் பாடிக்கொண்டு முன்வந்து நின்று ஆடுவீர்; ஆயினும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டீரோ? சொல்லீர். 
370 கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு
கழுத்தொர் பாம்பவை பின்புதாழ்
மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர்
வேதம் ஓதுதிர் கீதமும்
பைய வேவிடங் காக நின்றுபைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும்
ஆர ணீய விடங்கரே.
7.036.10
தலைவரே, காட்டில் வாழும் அழகரே, உமக்குக்கையில் ஒரு பாம்பு; அரையில், கட்டிய ஒரு பாம்பு; கழுத்தில் ஒரு பாம்பு; அவையெல்லாம் பின்புறமும் ஊர்கின்ற மேனி முழுவதும் நீற்றினால் பூசியுள்ளீர்; அதனோடு வேதம் ஓதுகின்றீர்; இவற்றோடு இசையும் உம்மிடத்தில் மெல்ல அழகியதாய்த் தோன்ற வந்து நின்று, 'யான் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்கின்றீர்; பிச்சை எடுக்கும் இக்கோலம் எத்தன்மையதோ? சொல்லீர். 
371 அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரை
மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர்
வேண்டிக் காதல் மொழிந்தசொல்
மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன்
றொண்டன் வாய்மொழி பாடல்பத்
துன்னி இன்னிசை பாடு வார்உமை
கேள்வன் சேவடி சேர்வரே.
7.036.11
அன்னங்கள் தங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள, காட்டில் வாழும் அழகராகிய இறைவரை, தோன்றி மறைகின்ற நுண்ணிய இடையினையுடைய மங்கையர் பலர் காதலித்து அக் காதலை வெளிப்படுத்திய சொற்களையுடைய, நிலைபெற்ற பழைய புகழினையுடைய திருநாவலூரில் தோன்றினவனாகிய வன்றொண்டனது வாய்மொழியான இப்பாடல்கள் பத்தினையும், மனத்தில் புகக்கொண்டு, இனிய இசையாற் பாடுபவர், உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது செவ்விய திருவடியை அடைவர். 
திருச்சிற்றம்பலம்

 

7.036.திருப்பைஞ்ஞீலி 

பண் - கொல்லி 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர். 

தேவியார் - விசாலாட்சியம்மை. 

 

 

361 காரு லாவிய நஞ்சை யுண்டிருள்

கண்டர் வெண்டலை யோடுகொண்

டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி

ஓரி டத்திலே கொள்ளும் நீர்

பாரெ லாம்பணிந் தும்மை யேபர

விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்

ஆர மாவது நாக மோசொலும்

ஆர ணீய விடங்கரே.

7.036.1

 

  கருமைநிறம் பொருந்திய நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே, நிலவுலகமெல்லாம் உம்மையே வணங்கித் துதித்துத் தொண்டுபுரியும் பெருமையுடைய, திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில்வாழும் அழகரே, நீர் வெண்மையான தலையோட்டினைக் கையிற்கொண்டு ஊரெலாந் திரிந்து என்ன பெறப் போகின்றீர்? இவ் வோரிடத்திற்றானே நீர் வேண்டிய அளவினதாகிய பிச்சையைப் பெற்றுக்கொள்வீர்; அது நிற்க; உமக்கு முத்து வடமாவது, பாம்புதானோ? சொல்லீர். 

 

 

362 சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல்

வாய பாம்பது மூசெனும்

பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற்

பாம்பு வேண்டா பிரானிரே

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்

மன்னு காரகில் சண்பகம்

அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்

ஆர ணீய விடங்கரே.

7.036.2

 

  இறைவரே, மலையின்கண் பிறந்த, 'சந்தனம், வேங்கை, கோங்கு, மிக்க கரிய அகில், சண்பகம்; என்னும் மரங்களை அலைத்துக்கொண்டு வரும், தண்ணிய நீர் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கின்ற, காட்டில் வாழும் அழகரே, நுமது வெள்விடை முழக்கமிட்டுச் சினந்து பார்க்கின்றது, சிவந்த நெருப்புப் போலும் நஞ்சினைக் கொண்ட வாயினையுடைய பாம்பு, 'மூசு' என்னும் ஓசையுண்டாகச் சீறுகின்றது; ஆதலின், நீர் பிச்சைக்கு வரும் போது கையில் பாம்பையேனும் கொண்டுவருதல் வேண்டா. 

 

 

363 தூய வர்கண்ணும் வாயும் மேனியுந்

துன்ன ஆடை சுடலையில்

பேயொ டாடலைத் தவிரும் நீரொரு

பித்த ரோஎம் பிரானிரே

பாயும் நீர்க்கிடங் கார்க மலமும்

பைந்தண் மாதவி புன்னையும்

ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்

ஆர ணீய விடங்கரே.

7.036.3

 

  எம்பெருமானிரே, பாயுந் தன்மையுடைய நீரைக் கொண்ட அகழியில் நிறைந்துள்ள தாமரைகளும், அதன் கரையில், மாதவியும், புன்னையும் பொருந்திய' சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள, காட்டில் வாழும் அழகரே, நீர், கண்ணும், வாயும், மேனியும் அழகியராய் இருக்கின்றீர்; ஆயினும், தைத்த கோவணத்தை உடுத்து, சுடலையில் பேயோடு ஆடுதலை ஒழிய மாட்டீர்; நீர் ஒரு பித்தரோ? அவற்றை விட்டொழியும். 

 

 

364 செந்த மிழ்த்திறம் வல்லி ரோசெங்கண்

அரவம் முன்கையில் ஆடவே

வந்து நிற்குமி தென்கொ லோபலி

மாற்ற மாட்டோ மிடகிலோம்

பைந்தண் மாமலர் உந்து சோலைகள்

கந்த நாறுபைஞ் ஞீலியீர்

அந்தி வானமும் மேனி யோசொலும்

ஆர ணீய விடங்கரே.

7.036.4

 

  பசிய, தண்ணிய, சிறந்த பூக்களை உதிர்க்கின்ற சோலைகள் நறுமணம் வீசுகின்ற திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளி இருப்பவரே. காட்டில் வாழும் அழகரே, நீர் மகளிர் மனத்தைக் கவர்தற்கு, 'இயல், இசை, நாடகம்' என்னும் முத்தமிழிலும் வல்லிரோ? நும்மேனியும் அந்தி வானம் போல்வதோ? சொல்லீர், அவை நிற்க; நீர், உமது முன்கையில் பாம்பு நின்று படம் எடுத்து ஆடும்படி வந்து நிற்பது என்? இதனால், நாங்கள் கொண்டுவந்த பிச்சையை இடாது போக மாட்டேமும், இடமாட்டேமும் ஆகின்றேம். 

 

 

365 நீறு நுந்திரு மேனி நித்திலம்

நீல்நெ டுங்கண்ணி னாளொடும்

கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்

திடகி லோம்பலி நடமினோ

பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்

ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்

ஆறு தாங்கிய சடைய ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

7.036.5

 

  தலைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு, 'யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்றீர்; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது. ஆயினும், கரிய நண்ட கண்களையுடைய பெண் ஒருத்தியோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர்; அதன் மேலும் நீர், கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ? சொல்லீர்; இதனால், உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம்; நடவீர். 

 

 

366 குரவம் நாறிய குழலி னார்வளை

கொள்வ தேதொழி லாகிநீர்

இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே

நடந்து போகவும் வல்லிரே

பரவி நாடொறும் பாடு வார்வினை

பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்

அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

7.036.6

 

  நாள்தோறும் பாடிப் பரவுவாரது வினைகளைப் பற்றறச் செய்யும் திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், குராமலரின் மணத்தை வீசுகின்ற கூந்தலையுடைய மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்வதே தொழிலாய், இங்குள்ள இல்லங்களை இரவிலும் வந்து அறிகின்றீர்; அதனால், நள்ளிரவில் இங்குநின்றும் நடந்துபோகவும் வல்லீரோ? அதுவன்றிப் பாம்பு ஆட்டவும் வல்லீரோ? சொல்லீர். 

 

 

367 ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர்

என்பெ லாமணிந் தென்செய்வீர்

காடு நும்பதி ஓடு கையது

காதல் செய்பவர் பெறுவதென்

பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ்

ஞீலி யேனென்று நிற்றிரால்

ஆடல் பாடலும் வல்லி ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

7.036.7

 

  காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான், பாடுதலையுடைய வண்டுகள் இசையை முழுக்குகின்ற சோலைகளையுடைய திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சையிடுமின்' என்று சொல்லி வந்து நிற்கின்றீர்; நீர், இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடுகின்றீர்; அதனோடு ஒழியாது, எலும்புகளையெல்லாம் அணிந்து என்ன பெறப்போகின்றீர்? அதுவன்றி, நும் ஊரோ, காடு; நும் கையில் இருப்பதோ, ஓடு; இவ்வாறாயின் உம்மைக் காதலிப்பவர் பெறும் பொருள் யாது? இந்நிலையில் நீர், ஆடல் பாடல்களிலும் வல்லீரோ? சொல்லீர். 

 

 

368 மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங்

கங்கை யாளொடு திங்களும்

மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு

வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம்

பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ்

ஞீலி யேனென்று நிற்றிரால்

அத்தி யீருரி போர்த்தி ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

7.036.8

 

  காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான் அடியார்களும், சித்தர்களும் பத்திமிகுதியால் திருப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்று சொல்லிவந்து நிற்கின்றீர்; 'ஊமத்தை, கொன்றை' என்னும் இவற்றின் சிறந்த மலர்களும், வன்னியின் இலையும், கங்கையும், பிறையும், அவற்றொடு நெருங்கிய வெண்டலையும், கொக்கிறகும், வெள்ளெருக்கும் உம் சடையிலே உள்ளன; அவைகளேயன்றி, யானையை உரித்த தோலையும் மேனிமேல் போர்த்துக் கொள்வீரோ? சொல்லீர். 

 

 

369 தக்கை தண்ணுமை தாளம் வீணை

தகுணிச் சங்கிணை சல்லரி

கொக்க ரைகுட முழுவி னோடிசை

கூடிப் பாடிநின் றாடுவீர்

பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்

ஞீலி யேனென்று நிற்றிரால்

அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

7.036.9

 

  காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான், எப்பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்று சொல்லி வந்து நிற்கின்றீர். நீர், 'தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு குடமுழா' என்னும் இவற்றொடு கூடி, பல இசைகளைப் பாடிக்கொண்டு முன்வந்து நின்று ஆடுவீர்; ஆயினும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டீரோ? சொல்லீர். 

 

 

370 கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு

கழுத்தொர் பாம்பவை பின்புதாழ்

மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர்

வேதம் ஓதுதிர் கீதமும்

பைய வேவிடங் காக நின்றுபைஞ்

ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்

ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும்

ஆர ணீய விடங்கரே.

7.036.10

 

  தலைவரே, காட்டில் வாழும் அழகரே, உமக்குக்கையில் ஒரு பாம்பு; அரையில், கட்டிய ஒரு பாம்பு; கழுத்தில் ஒரு பாம்பு; அவையெல்லாம் பின்புறமும் ஊர்கின்ற மேனி முழுவதும் நீற்றினால் பூசியுள்ளீர்; அதனோடு வேதம் ஓதுகின்றீர்; இவற்றோடு இசையும் உம்மிடத்தில் மெல்ல அழகியதாய்த் தோன்ற வந்து நின்று, 'யான் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்கின்றீர்; பிச்சை எடுக்கும் இக்கோலம் எத்தன்மையதோ? சொல்லீர். 

 

 

371 அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியில்

ஆர ணீய விடங்கரை

மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர்

வேண்டிக் காதல் மொழிந்தசொல்

மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன்

றொண்டன் வாய்மொழி பாடல்பத்

துன்னி இன்னிசை பாடு வார்உமை

கேள்வன் சேவடி சேர்வரே.

7.036.11

 

  அன்னங்கள் தங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள, காட்டில் வாழும் அழகராகிய இறைவரை, தோன்றி மறைகின்ற நுண்ணிய இடையினையுடைய மங்கையர் பலர் காதலித்து அக் காதலை வெளிப்படுத்திய சொற்களையுடைய, நிலைபெற்ற பழைய புகழினையுடைய திருநாவலூரில் தோன்றினவனாகிய வன்றொண்டனது வாய்மொழியான இப்பாடல்கள் பத்தினையும், மனத்தில் புகக்கொண்டு, இனிய இசையாற் பாடுபவர், உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது செவ்விய திருவடியை அடைவர். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.