|
||||||||
ஏழாம் திருமுறை-42 |
||||||||
7.042.திரு வெஞ்சமாக்கூடல்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விகிர்தேசுவரர்.
தேவியார் - விகிர்தேசுவரி.
425 எறிக்குங்கதிர் வேயுதிர் முத்தம்மோ
டேலம்மில வங்கந்தக் கோலம்இஞ்சி
செறிக்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக் குந்தழை மாமுடப் புன்னைஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங்கலை மாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
7.042.1
மூங்கிலினின்றும் உதிர்ந்த, ஒளிவீசும், முத்துக்களோடு, 'ஏலம், இலவங்கம், தக்கோலம், இஞ்சி' என்பவைகளை, எவ்விடங்களையும் நிரப்புகின்ற நீருள் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, 'தளிர்த்த தழைகளையுடைய மாமரம், வளைந்த புன்னை மரம், குங்கும மரம், குருக்கத்திப்பந்தர்' என்னும் இவைகளின்மேல் குயில்கள் இருந்து கூவுதல் ஒழியாத, அஞ்சுகின்ற கலைமானையுடைய திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
426 குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக்
குடமாமணி சந்தன மும்மகிலும்
துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும்
மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள்
விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
7.042.2
பல குளங்களும், பல குழிகளும் நிறையும்படி, மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும், 'சந்தனமரம், அகில்மரம்' என்னும் இவற்றையும், அசைகின்ற நீருள் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள, வளத்தைக்கொண்ட மதிலும், மாளிகையும் கோபுரமும், மணிமண்டபமும் ஆகிய இவை. மேகத்தில் விளங்குகின்ற சந்திரனை அளாவுகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
427 வரைமான்அனை யார்மயிற் சாயல்நல்லார்
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார்கமு குந்நெடுந் தாட்டெங்குங்
குறுந்தாட்பல வும்விர விக்குளிரும்
விரையார்பொழில் சூழ்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
7.042.3
மலையில் உள்ள மான்போல்பவரும், மயில் போலும் சாயலை யுடையவரும், கூரிய வேல்போலும் கண்களை யுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வழிபட, அவர்கள் தனக்கு அளித்த பொருளை, அலை நிறைந்த நீரில் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள. வரிசையாகப் பொருந்திய கமுக மரங்களும், நீண்ட அடியினையுடைய தென்னை மரங்களும், குறிய அடியினையுடைய பலா மரங்களும் ஒன்றாய்ப் பொருந்துதலால் குளிர்ச்சியை அடைகின்ற, மணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
428 பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
7.042.4
பண்போலும் மொழியினையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, யாவரும் ஒடுங்குங் காட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, இன்பத்தைத் தரும் அரிய அகிலையும், நல்ல கவரியையும் அலைத்துக்கொண்டு வந்து கரையை மோதுகின்ற சிற்றாற்றின் 'கீழ்க்கரைமேல் உள்ள, மண்பொருந்திய மத்தளமும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் பொருந்திய ச்திரன் தவழ்கின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
429 துளைவெண்குழை யுஞ்சுருள் வெண்டோடுந்
தூங்குங்கா திற்றுளங் கும்படியாய்
களையேகம ழும்மலர்க் கொன்றையினாய்
கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண்பிறை யாய்பிறங் குஞ்சடையாய்
பிறவாதவ னேபெறு தற்கரியாய்
வெளைமால்விடை யாய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
7.042.5
துளைக்கப்பட்ட வெள்ளிய குழையும், சுருண்ட வெள்ளிய தோடும் நீண்ட காதினிடத்தில் அசைகின்ற வடிவத்தை யுடையவனே, தேனினது மணத்தை வீசுகின்ற கொன்றை மலரைச் சூடியவனே, அடைந்தவர்க்கு அருள்செய்கின்ற கற்பகம் போல் பவனே, இளைய வெள்ளிய பிறையைச் சூடியவனே, விளங்குகின்ற சடைமுடியை உடையவனே, பிறத்தலைச் செய்யாதவனே, கிடைத்தற்கு அரியவனே வெண்மையான பெரிய விடையை உடையவனே, திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
430 தொழுவார்க்கௌ யாய்துயர் தீரநின்றாய்
சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய்
உழுவாரக்கரி யவ்விடை யேறிஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார்
முழவாரொலி பாடலொ டாடலறா
முதுகாடரங் காநட மாடவல்லாய்
விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
7.042.6
உன்னைத் தொழுகின்றவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே, அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய், நின்றவனே, வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவனே, உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே, பகைவரது திரிபுரத்தில் நெருப்பை மூளுமாறு ஏவியவனே, பேய்களின் ஓசையாகிய அழகுநிறைந்த மத்தளஒலியும், பாட்டும், குதிப்பும் நீங்காத புறங்காடே அரங்காக நடனமாட வல்லவனே, விழாக்கள் நிறைந்த தெருக்களையுடைய திருவெஞ்ச மாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
431 கடமாகளி யானை யுரித்தவனே
கரிகாடிட மாஅனல் வீசிநின்று
நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய்
நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே
படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண்
பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும்
விடவார் அர வாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
7.042.7
மதநீரையுடைய பெரிய மயக்கங்கொண்ட யானையை உரித்தவனே, கரிந்த காடே இடமாக நெருப்பை வீசிநின்று நடனமாட வல்லவனே, வெள்ளிய இடபத்தை விரும்பியவனே, நல்லோனே, கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, புள்ளிகளையுடைய ஆயிரம் படங்கள் பொருந்திய, பருத்த, பசிய கண்களையுடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்ற, நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே, திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
432 காடும்மலை யுந்நாஅ டும்மிடறிக்
கதிர்மாமணி சந்தன மும்மகிலும்
சேடன்னுறை யும்மிடந் தான்விரும்பித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
பாடல்முழ வுங்குழ லும்மியம்பப்
பணைத்தோளியர் பாடலொ டாடலறா
வேடர்விரும் பும்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
7.042.8
ஒளியையுடைய சிறந்த மணிகளையும், சந்தனத்தையும், அகிலையும், 'முல்லை, குறிஞ்சி, மருதம்' என்னும் நிலங்களில் சிதறி, 'சேடன்' என்னும் அரவரசன் வாழ்கின்ற பாதலத்தை அடைய விரும்பி நிலத்தை அகழ்ந்து, கரையைப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, தம் பாடலுக்கு இயைந்த மத்தளமும், குழலும் ஒலிக்க, பருத்த தோள்களையுடைய மாதர்கள் பாடுதலோடு, ஆடுதலைச் செய்தல் ஒழியாத கூத்தர் விரும்பும் திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
433 கொங்கார்மலர்க் கொன்றையந் தாரவனே
கொடுகொட்டியொர் வீணை யுடையவனே
பொங்காடர வும்புன லுஞ்சடைமேற்
பொதியும்புனி தாபுனஞ் சூழ்ந்தழகார்
துங்கார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார்வயல் சூழ்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
7.042.9
தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே, கொடுகொட்டியையும் வீணையொன்றையும் உடையவனே, சீற்றம் மிக்க, ஆடுகின்ற பாம்பும் தண்ணீரும் சடையில் நிறைந்துள்ள தூயவனே, காடுகளைச் சூழ்ந்து அழகுமிகுகின்ற, உயர்வு பொருந்திய நீருள், காடுபடு பொருள்கள் பலவற்றை இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, விரும்பத்தக்க நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
434 வஞ்சிநுண்ணிடை யார்மயிற் சாயலன்னார்
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே
னையும்வேண்டுதி யேஎன்று தான்விரும்பி
வஞ்சியாதளிக் கும்வயல் நாவலர்கோன்
வனப்பகை யப்பன்வன்ன் றொண்டன்சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார்
சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே.
7.042.10
'வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையையுடையவரும், மயில்போலும் சாயலை யுடையவரும், கூர்மை பொருந்திய வேல்போலும் கண்களையுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வணங்குகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்' என்று, விளைவுகளை வஞ்சியாதளிக்கின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனும், வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டன் விரும்பிப் பாடிய செவ்விய சொற்களாலாகிய இத்தமிழ்மாலைகள் பத்தினையும் பாட வல்லவர் சிவலோகத்தில் வீற்றிருத்தல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
7.042.திரு வெஞ்சமாக்கூடல் பண் - கொல்லிக்கௌவாணம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - விகிர்தேசுவரர். தேவியார் - விகிர்தேசுவரி.
425 எறிக்குங்கதிர் வேயுதிர் முத்தம்மோ டேலம்மில வங்கந்தக் கோலம்இஞ்சி செறிக்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் முறிக் குந்தழை மாமுடப் புன்னைஞாழல் குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா வெறிக்குங்கலை மாவெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. 7.042.1
மூங்கிலினின்றும் உதிர்ந்த, ஒளிவீசும், முத்துக்களோடு, 'ஏலம், இலவங்கம், தக்கோலம், இஞ்சி' என்பவைகளை, எவ்விடங்களையும் நிரப்புகின்ற நீருள் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, 'தளிர்த்த தழைகளையுடைய மாமரம், வளைந்த புன்னை மரம், குங்கும மரம், குருக்கத்திப்பந்தர்' என்னும் இவைகளின்மேல் குயில்கள் இருந்து கூவுதல் ஒழியாத, அஞ்சுகின்ற கலைமானையுடைய திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
426 குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக் குடமாமணி சந்தன மும்மகிலும் துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும் மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள் விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. 7.042.2
பல குளங்களும், பல குழிகளும் நிறையும்படி, மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும், 'சந்தனமரம், அகில்மரம்' என்னும் இவற்றையும், அசைகின்ற நீருள் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள, வளத்தைக்கொண்ட மதிலும், மாளிகையும் கோபுரமும், மணிமண்டபமும் ஆகிய இவை. மேகத்தில் விளங்குகின்ற சந்திரனை அளாவுகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
427 வரைமான்அனை யார்மயிற் சாயல்நல்லார் வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சத் திரையார்புன லுட்பெய்து கொண்டுமண்டித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் நிரையார்கமு குந்நெடுந் தாட்டெங்குங் குறுந்தாட்பல வும்விர விக்குளிரும் விரையார்பொழில் சூழ்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. 7.042.3
மலையில் உள்ள மான்போல்பவரும், மயில் போலும் சாயலை யுடையவரும், கூரிய வேல்போலும் கண்களை யுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வழிபட, அவர்கள் தனக்கு அளித்த பொருளை, அலை நிறைந்த நீரில் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள. வரிசையாகப் பொருந்திய கமுக மரங்களும், நீண்ட அடியினையுடைய தென்னை மரங்களும், குறிய அடியினையுடைய பலா மரங்களும் ஒன்றாய்ப் பொருந்துதலால் குளிர்ச்சியை அடைகின்ற, மணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
428 பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய் படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய் தண்ணார்அகி லுந்நல சாமரையும் அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப மடவார்நட மாடு மணியரங்கில் விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. 7.042.4
பண்போலும் மொழியினையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, யாவரும் ஒடுங்குங் காட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, இன்பத்தைத் தரும் அரிய அகிலையும், நல்ல கவரியையும் அலைத்துக்கொண்டு வந்து கரையை மோதுகின்ற சிற்றாற்றின் 'கீழ்க்கரைமேல் உள்ள, மண்பொருந்திய மத்தளமும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் பொருந்திய ச்திரன் தவழ்கின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
429 துளைவெண்குழை யுஞ்சுருள் வெண்டோடுந் தூங்குங்கா திற்றுளங் கும்படியாய் களையேகம ழும்மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே பிளைவெண்பிறை யாய்பிறங் குஞ்சடையாய் பிறவாதவ னேபெறு தற்கரியாய் வெளைமால்விடை யாய்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. 7.042.5
துளைக்கப்பட்ட வெள்ளிய குழையும், சுருண்ட வெள்ளிய தோடும் நீண்ட காதினிடத்தில் அசைகின்ற வடிவத்தை யுடையவனே, தேனினது மணத்தை வீசுகின்ற கொன்றை மலரைச் சூடியவனே, அடைந்தவர்க்கு அருள்செய்கின்ற கற்பகம் போல் பவனே, இளைய வெள்ளிய பிறையைச் சூடியவனே, விளங்குகின்ற சடைமுடியை உடையவனே, பிறத்தலைச் செய்யாதவனே, கிடைத்தற்கு அரியவனே வெண்மையான பெரிய விடையை உடையவனே, திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
430 தொழுவார்க்கௌ யாய்துயர் தீரநின்றாய் சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய் உழுவாரக்கரி யவ்விடை யேறிஒன்னார் புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார் முழவாரொலி பாடலொ டாடலறா முதுகாடரங் காநட மாடவல்லாய் விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. 7.042.6
உன்னைத் தொழுகின்றவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே, அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய், நின்றவனே, வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவனே, உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே, பகைவரது திரிபுரத்தில் நெருப்பை மூளுமாறு ஏவியவனே, பேய்களின் ஓசையாகிய அழகுநிறைந்த மத்தளஒலியும், பாட்டும், குதிப்பும் நீங்காத புறங்காடே அரங்காக நடனமாட வல்லவனே, விழாக்கள் நிறைந்த தெருக்களையுடைய திருவெஞ்ச மாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
431 கடமாகளி யானை யுரித்தவனே கரிகாடிட மாஅனல் வீசிநின்று நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய் நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண் பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும் விடவார் அர வாவெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. 7.042.7
மதநீரையுடைய பெரிய மயக்கங்கொண்ட யானையை உரித்தவனே, கரிந்த காடே இடமாக நெருப்பை வீசிநின்று நடனமாட வல்லவனே, வெள்ளிய இடபத்தை விரும்பியவனே, நல்லோனே, கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, புள்ளிகளையுடைய ஆயிரம் படங்கள் பொருந்திய, பருத்த, பசிய கண்களையுடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்ற, நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே, திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
432 காடும்மலை யுந்நாஅ டும்மிடறிக் கதிர்மாமணி சந்தன மும்மகிலும் சேடன்னுறை யும்மிடந் தான்விரும்பித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் பாடல்முழ வுங்குழ லும்மியம்பப் பணைத்தோளியர் பாடலொ டாடலறா வேடர்விரும் பும்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. 7.042.8
ஒளியையுடைய சிறந்த மணிகளையும், சந்தனத்தையும், அகிலையும், 'முல்லை, குறிஞ்சி, மருதம்' என்னும் நிலங்களில் சிதறி, 'சேடன்' என்னும் அரவரசன் வாழ்கின்ற பாதலத்தை அடைய விரும்பி நிலத்தை அகழ்ந்து, கரையைப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, தம் பாடலுக்கு இயைந்த மத்தளமும், குழலும் ஒலிக்க, பருத்த தோள்களையுடைய மாதர்கள் பாடுதலோடு, ஆடுதலைச் செய்தல் ஒழியாத கூத்தர் விரும்பும் திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
433 கொங்கார்மலர்க் கொன்றையந் தாரவனே கொடுகொட்டியொர் வீணை யுடையவனே பொங்காடர வும்புன லுஞ்சடைமேற் பொதியும்புனி தாபுனஞ் சூழ்ந்தழகார் துங்கார்புன லுட்பெய்து கொண்டுமண்டித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் வெங்கார்வயல் சூழ்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. 7.042.9
தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே, கொடுகொட்டியையும் வீணையொன்றையும் உடையவனே, சீற்றம் மிக்க, ஆடுகின்ற பாம்பும் தண்ணீரும் சடையில் நிறைந்துள்ள தூயவனே, காடுகளைச் சூழ்ந்து அழகுமிகுகின்ற, உயர்வு பொருந்திய நீருள், காடுபடு பொருள்கள் பலவற்றை இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, விரும்பத்தக்க நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
434 வஞ்சிநுண்ணிடை யார்மயிற் சாயலன்னார் வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சும் வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே னையும்வேண்டுதி யேஎன்று தான்விரும்பி வஞ்சியாதளிக் கும்வயல் நாவலர்கோன் வனப்பகை யப்பன்வன்ன் றொண்டன்சொன்ன செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார் சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே. 7.042.10
'வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையையுடையவரும், மயில்போலும் சாயலை யுடையவரும், கூர்மை பொருந்திய வேல்போலும் கண்களையுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வணங்குகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்' என்று, விளைவுகளை வஞ்சியாதளிக்கின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனும், வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டன் விரும்பிப் பாடிய செவ்விய சொற்களாலாகிய இத்தமிழ்மாலைகள் பத்தினையும் பாட வல்லவர் சிவலோகத்தில் வீற்றிருத்தல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 24 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|