LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-55

 

7.055.திருப்புன்கூர் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார் கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி வருந்துகிறோம், ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய, மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன, அவர்கள் பன்னிரண்டு வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும், மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர். 
தேவியார் - சொக்கநாயகியம்மை. 
560 அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எத்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.
7.055.1
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, முனிவன் ஒருவன் உன்னை அடைக்கலமாக அடைய, அவனைக் காத்தல் நிமித்தமாக, அவன்மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான், உனது அவ்வாற்றலையறிந்து, என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின், என்தந்தையாகிய நீ, 'இவன் என் அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்' என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். 
561 வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிரை மாநிலந் தருகோம
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.
7.055.2
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இவ்வூரிலுள்ளவர், 'உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம்; எங்களை உய்யக்கொள்க' என்று வேண்ட, ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை, அந்நிலைமாறி, எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 
562 ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்த சண்டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே.
7.055.3
பூதகணங்கட்குத் தலைவனே, அழகிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நல்ல நிலங்கள் பன்னிருவேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த, துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்ததனையும், முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து ஆட்ட அதனைப் பொறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலாலாகிய பெருமான்மேற் சென்ற தந்தையது பாதங்கள் துணி பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேற் சூடியுள்ள கொன்றைமாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து, அடியேன், உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 
563 நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் 
கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் 
பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே.
7.055.4
பொன்போலும், திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளி யிருப்பவனே, 'நல்ல தமிழைப் பாட வல்ல ஞானசம்பந்தனும், நாவுக்கரையனும், நாளைப்போவானும், சூதாடுதலை நன்கு கற்ற மூர்க்கனும், நல்ல சாக்கியனும், சிலந்தியும், கண்ணப்பனும், கணம் புல்லனும்' என்ற இவர்கள் குற்றமான செயல்களைச் செய்யவும், அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து, வந்து, அடியேன், உனது ஒலிக்கின்ற கழலை யணிந்த திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். 
564 கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை யுண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.
7.055.5
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்கள், அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி, கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து, அதில் அமுதந் தோன்றாது பெருவிடந் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஓடிவந்து அடைய அவர்கட்கு உதவுதல் கருதி, கருமை நிறைந்த, அக் கடல் விடத்தை உண்டு, அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தே வைத்த பேரருளாளனே, நீ செய்த இந் நல்ல செய்கையையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள் 
565 இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்க மில்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை
யர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.
7.055.6
வளவியசோலையையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இயக்கரும், கின்னரரும், இயமனும், வருணனும், அக்கினியும், இயங்குகின்ற வாயுவும், சூரியனும், சந்திரனும், வசுக்களும், ஏனைய தேவர்களும், அசுரர்களும், மற்றும் அறியாமை நீங்கின புலி, குரங்கு, பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி வழிபட்டுப் பெற்ற அரிய திருவருளை யறிந்து அடியேனும், தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 
566 போ?த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
பொழில்கொளால் நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.
7.055.7
தூயவனே, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளையுடைய முனிவர்களுக்கு, அன்று சோலைகளைச் சூழக்கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும், அருச்சுனனுக்கு அன்று பாசுபதத்தைக் கொடுத்தும் பகீரதன் வேண்டிக்கொள்ள அவன்பொருட்டு, ஆரவாரித்து வீழ்ந்த நீர்வடிவாகிய கங்கையாளை முன்பு உனது சடையில், அடக்கியும் அருள்செய்தாய்; அவற்றை யெல்லாம் அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். 
567 மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.
7.055.8
தேவதேவனே, வளவிய சோலைளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை, நீ, கரிந்த காடே அரங்கமாக, உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும் படி அருள்செய்ததை யறிந்து வந்து. அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். 
568 அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத் 
தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.
7.055.9
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நூலறிவினால் மிக்க ஆறுவகைப் பட்ட சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்திற்றானே, அரிய திருவருளைச் செய்தும், அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை, அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய, உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு, அழகிய வாளோடு, மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 
569 கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானை
உம்ப ராளியை உமையவன் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தம்பி னாற்சொன்ன அருந்தமி ழைந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை யிலரே.
7.055.10
அசைதலையுடைய பெரிய யானையினது தோலை உடையவனும், காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும், செம்பொன்னே போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும், தேவர்களை ஆள்பவனும், உமையவளுக்குத் தலைவனும் ஆகிய, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, வன்றொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பி, அங்ஙனம் விரும்பிய அவ்வன்பானே சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், நீங்குதற்கரிய வினைகளை இல்லாதவராவர்; இது திண்ணம். 
திருச்சிற்றம்பலம்

 

7.055.திருப்புன்கூர் 

பண் - தக்கேசி 

திருச்சிற்றம்பலம் 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார் கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி வருந்துகிறோம், ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய, மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன, அவர்கள் பன்னிரண்டு வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும், மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.

 

சுவாமிபெயர் - சிவலோகநாதர். 

தேவியார் - சொக்கநாயகியம்மை. 

 

 

560 அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத

அவனைக் காப்பது காரண மாக

வந்த காலன்றன் ஆருயி ரதனை

வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்

எத்தை நீயெனை நமன்தமர் நலியில்

இவன்மற் றென்னடி யானென விலக்கும்

சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

7.055.1

 

  வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, முனிவன் ஒருவன் உன்னை அடைக்கலமாக அடைய, அவனைக் காத்தல் நிமித்தமாக, அவன்மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான், உனது அவ்வாற்றலையறிந்து, என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின், என்தந்தையாகிய நீ, 'இவன் என் அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்' என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். 

 

 

561 வையக முற்று மாமழை மறந்து

வயலில் நீரிரை மாநிலந் தருகோம

உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன

ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்

பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்

பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்

செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

7.055.2

 

  வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இவ்வூரிலுள்ளவர், 'உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம்; எங்களை உய்யக்கொள்க' என்று வேண்ட, ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை, அந்நிலைமாறி, எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 

 

 

562 ஏத நன்னிலம் ஈரறு வேலி

ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்துக்

கோத னங்களின் பால்கறந் தாட்டக்

கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற

தாதை தாளற எறிந்த சண்டிக்குன்

சடைமி சைமலர் அருள்செயக் கண்டு

பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்

பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

7.055.3

 

  பூதகணங்கட்குத் தலைவனே, அழகிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நல்ல நிலங்கள் பன்னிருவேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த, துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்ததனையும், முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து ஆட்ட அதனைப் பொறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலாலாகிய பெருமான்மேற் சென்ற தந்தையது பாதங்கள் துணி பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேற் சூடியுள்ள கொன்றைமாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து, அடியேன், உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 

 

 

563 நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்

நாவினுக் கரையன் நாளைப்போ வானும்

கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி

கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்

குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் 

கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்

பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் 

பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே.

7.055.4

 

  பொன்போலும், திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளி யிருப்பவனே, 'நல்ல தமிழைப் பாட வல்ல ஞானசம்பந்தனும், நாவுக்கரையனும், நாளைப்போவானும், சூதாடுதலை நன்கு கற்ற மூர்க்கனும், நல்ல சாக்கியனும், சிலந்தியும், கண்ணப்பனும், கணம் புல்லனும்' என்ற இவர்கள் குற்றமான செயல்களைச் செய்யவும், அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து, வந்து, அடியேன், உனது ஒலிக்கின்ற கழலை யணிந்த திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். 

 

 

564 கோல மால்வரை மத்தென நாட்டிக்

கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த

ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய

அமரர் கட்கருள் புரிவது கருதி

நீல மார்கடல் விடந்தனை யுண்டு

கண்டத் தேவைத்த பித்தநீ செய்த

சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

7.055.5

 

  வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்கள், அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி, கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து, அதில் அமுதந் தோன்றாது பெருவிடந் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஓடிவந்து அடைய அவர்கட்கு உதவுதல் கருதி, கருமை நிறைந்த, அக் கடல் விடத்தை உண்டு, அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தே வைத்த பேரருளாளனே, நீ செய்த இந் நல்ல செய்கையையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள் 

 

 

565 இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்

இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்

மயக்க மில்புலி வானரம் நாகம்

வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்

அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை

யர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு

திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

7.055.6

 

  வளவியசோலையையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இயக்கரும், கின்னரரும், இயமனும், வருணனும், அக்கினியும், இயங்குகின்ற வாயுவும், சூரியனும், சந்திரனும், வசுக்களும், ஏனைய தேவர்களும், அசுரர்களும், மற்றும் அறியாமை நீங்கின புலி, குரங்கு, பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி வழிபட்டுப் பெற்ற அரிய திருவருளை யறிந்து அடியேனும், தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 

 

 

566 போ?த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்

பொழில்கொளால் நிழற் கீழறம் புரிந்து

பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்

தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட

ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை

நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த

தீர்த்த னேநின்றன் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

7.055.7

 

  தூயவனே, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளையுடைய முனிவர்களுக்கு, அன்று சோலைகளைச் சூழக்கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும், அருச்சுனனுக்கு அன்று பாசுபதத்தைக் கொடுத்தும் பகீரதன் வேண்டிக்கொள்ள அவன்பொருட்டு, ஆரவாரித்து வீழ்ந்த நீர்வடிவாகிய கங்கையாளை முன்பு உனது சடையில், அடக்கியும் அருள்செய்தாய்; அவற்றை யெல்லாம் அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். 

 

 

567 மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்

இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவ லாளர்என் றேவிய பின்னை

ஒருவன் நீகரி காடரங் காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ

மணிமு ழாமுழக் கவருள் செய்த

தேவ தேவநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

7.055.8

 

  தேவதேவனே, வளவிய சோலைளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை, நீ, கரிந்த காடே அரங்கமாக, உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும் படி அருள்செய்ததை யறிந்து வந்து. அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள். 

 

 

568 அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத் 

தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து

எறியு மாகடல் இலங்கையர் கோனைத்

துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்

குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்

கோல வாளொடு நாளது கொடுத்த

செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

7.055.9

 

  வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நூலறிவினால் மிக்க ஆறுவகைப் பட்ட சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்திற்றானே, அரிய திருவருளைச் செய்தும், அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை, அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய, உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு, அழகிய வாளோடு, மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். 

 

 

569 கம்ப மால்களிற் றின்னுரி யானைக்

காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்

செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானை

உம்ப ராளியை உமையவன் கோனை

ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்

தம்பி னாற்சொன்ன அருந்தமி ழைந்தோ

டைந்தும் வல்லவர் அருவினை யிலரே.

7.055.10

 

  அசைதலையுடைய பெரிய யானையினது தோலை உடையவனும், காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும், செம்பொன்னே போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும், தேவர்களை ஆள்பவனும், உமையவளுக்குத் தலைவனும் ஆகிய, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, வன்றொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பி, அங்ஙனம் விரும்பிய அவ்வன்பானே சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், நீங்குதற்கரிய வினைகளை இல்லாதவராவர்; இது திண்ணம். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.