LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-57

 

7.057.திருவாழ்கொளிபுத்தூர் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர். 
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை. 
581 தலைக்க லன்தலை மேல்தரித் தானைத்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கையா னையுரி போர்த்துகந் தானைக்
கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
அலைத்தசெங் கண்விடை ஏறவல் லானை
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.1
தலையாகிய அணிகலனைத் தலையில் அணிந்தவனும், தன்னை எனக்கு நினைக்குமாறு தருபவனும், கொலைத் தொழிலையும், கையையும் உடைய யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனும், கூற்றுவனை உதைத்த, ஒலித்தல் பொருந்திய கழலை யணிந்த திருவடியை உடையவனும், எதிர்த்தவரை வருத்தும் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர வல்லவனும் ஆகிய, பயிர்கள் தம் தலைமேற்கொண்ட செந்நெற்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, அவன் ஆணை வழியே அவனுக்கு அடிமையானேனாகிய அடிநாய் போன்ற யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
582 படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.2
படைகளுள் சூலத்தைப் பழக வல்லவனும், தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்படுத்துக் கொள்பவனும், வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சைக்கு விரும்புதலைச் செய்பவனும், காமனது உடலை அமைப்பு அழியச் செய்தவனும், கங்கையைச் சடையில் தங்கும்படி வைத்தவனும், தண்ணிய நீரையுடைய மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும், எல்லாத் தகுதிகளையும் உடையவனும் ஆகிய, நீர்மடைகளில் நீலோற்பல மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
583 வெந்த நீறுமெய் பூசவல் லானை
வேத மால்விடை ஏறவல் லானை
அந்தமா திஅறி தற்கரி யானை
ஆறலைத் தசடை யானைஅம் மானைச்
சிந்தை என்தடு மாற்றறுப் பானைத்
தேவ தேவன்என் சொல்முனி யாதே
வந்தென்உள் ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.3
வெந்த சாம்பலை உடம்பிற் பூச வல்லவனும், வேத மாகிய சிறந்த விடையை ஊர வல்லவனும், முடிவும் முதலும் அறிதற்கு அரியவனும், ஆற்றுநீர் மோதுகின்ற சடையை உடையவனும், பெரியோனும், எனது மனக் கலக்கத்தைக் களைபவனும், தேவர்களுக்குத் தேவனும், யான் இகழ்ந்து சொல்லிய சொல்லை வெறாமல் வந்து என் உள்ளத்தில் புகுந்து நிற்பவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
584 தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்
தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்
படங்கொள்நா கம்மரை யார்த்துகந் தானைப்
பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
நடுங்கஆ னையுரி போர்த்துகந் தானை
நஞ்சம்உண் டுகண் டங்கறுத் தானை
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.4
பெரிய கைகளால் மலர்களை எடுத்துத் தூவிக் கும்பிடுகின்றவர்கள், பிறவிடத்துச் செல்லாது, தன் திருவடியிடத்தே செல்லுமாறு செலுத்த வல்லவனும், படத்தை உடைய பாம்பை அரையில் விரும்பிக் கட்டியுள்ளவனும், முன்னர் விளங்கும் பற்களையுடைய வெள்ளிய தலையில் உண்ணுதல் உடையவனும், தன் தேவியும் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்துள்ளவனும், நஞ்சினை உண்டு கண்டம்கரியதாகியவனும், மாதொரு பாகனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
585 வளைக்கைமுன் கைமலை மங்கை மணாளன்
மார னாருடல் நீறெழச் செற்றுத்
துளைத்தவங் கத்தொடு தூமலர்க் கொன்றை
தோலும்நூ லும்துதைந் தவரை மார்பன்
திளைக்குந் தெவ்வர் திரிபுர மூன்றும்
அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.5
வளையை அணிந்த முன் கையையுடைய மலை மகளுக்கு மணாளனும், மன்மதனது அரிய உடம்பு சாம்பலாய் ஒழியுமாறு அழித்தவனும், துளைசெய்யப்பட்ட எலும்பும், தூய கொன்றை மலரும், தோலும், நூலும் நெருங்கிய, கீற்றுக்களையுடைய மார்பையுடையவனும், வானத்தில் திரிகின்ற மூன்று அரண்களும், அதன்கண் வாழ்ந்து இன்பம் நுகர்கின்ற பகைவர் மூவரும், அவரைச் சார்ந்த அசுரரும், அவர்தம் பெண்டிரும், பிள்ளைகளும் வெந்தொழியுமாறு வளைத்த வில்லையுடையவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
586 திருவின் நாயக னாகிய மாலுக்
கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாஅறி வொண்ணா
மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
செருவில் லேந்திஓர் கேழற்பின் சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.6
திருமகளுக்குக் கணவனாகிய திருமாலுக்குப் பல பொழுதுகளிற் பல திருவருள்களைச் செய்த, தேவர் தலைவனும், உருவம் உடையவனும், அவ்வுருவம் ஒன்றாக அறியப்படாது, அளவற்றனவாய் அறியப்படுங் கடவுளும் அருச்சுனனுக்கு அருள்செய்தற் பொருட்டு போருக்குரியவில் ஒன்றை ஏந்திக்கொண்டு, ஒரு பன்றியின்பின்னே, சிவந்த கண்களையுடைய வேடனாய்ச் சென்றவனும், என்னிடத்திலும் வந்து பொருந்தியுள்ளவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
587 எந்தை யைஎந்தை தந்தை பிரானை
ஏதமா யவ்விடர் தீர்க்க வல்லானை
முந்தை யாகிய மூவரின் மிக்க
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைக்
கந்தின்மிக் ககரி யின்மருப் போடு
கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.7
என் தந்தையும், என் தந்தை தந்தைக்கும் தலைவனும், துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும், யாவர்க்கும் முன்னோராகிய மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும், தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய, மண்ணியாறு வழியாக, தறியிடத்தில் நின்று சினம் மிகுகின்ற யானையின் தந்தங்களும், கரிய அகிற் கட்டைகளும், கவரிமானின் மயிர்களும் வந்து வந்து வீழ்கின்ற திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல் பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
588 தேனை யாடிய கொன்றையி னானைத்
தேவர் கைதொழுந் தேவர் பிரானை
ஊன மாயின தீர்க்கவல் லானை
ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்
கான வானையின் கொம்பினைப் பீழ்ந்த
கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய
வான நாடனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.8
தேனில் மூழ்கிய கொன்றைமலர் மாலையை உடையவனும், தேவர்கள் வணங்கும் தலையாய தேவனும் குறையாயவற்றை எல்லாம் போக்க வல்லவனும், ஒற்றை எருதை உடையவனும், நெற்றிக்கண்ணை உடையவனும், காட்டில் வாழும் யானையின் கொம்பை ஒடித்த கள்ளத்தன்மையுடைய சிறுவனுக்கும் காண அரிதான பொருளாய் உள்ளவனும், வானுலகத்தில் வாழ்பவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
589 காளை யாகி வரையெடுத் தான்றன்
கைக ளிற்றவன் மொய்தலை யெல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.9
காளைபோன்று கயிலாயத்தைப் பெயர்த்தவனாகிய இராவணனது கைகள் முரிந்து, நெருங்கிய தலைகளினின்றும் மூளை வெளிப்படுமாறு தனது கால்விரல் ஒன்றை ஊன்றிய கடவுளும், தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய, பாளையையுடைய தென்னை மரத்தினது நெற்றுக்கள் விழ, சிவந்த கண்களையுடைய எருமைகள், நெருங்கிச் சேறுசெய்ய, எங்கும் வாளை மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
590 திருந்த நான்மறை பாடவல் லானைத்
தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்
பொருந்த மால்விடை ஏறவல் லானைப்
பூதிப் பைபுலித் தோலுடை யானை
இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்
மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.10
நான்கு வேதங்களையும் செவ்வனே பாட வல்லவனும், தேவர்க்கும் அறிதற்கு அரியவனும், பெரிய விடையினை ஏற்புடைத்தாமாறு ஏற வல்லவனும், திருநீற்றுப் பையும், புலித் தோலுமாகிய இவற்றையுடையவனும், இருந்து உண்கின்ற சாக்கியரும், நின்று உண்கின்ற சமணரும் இகழ நிற்பவனும், அரிய உயிர்கட்கெல்லாம் அமுதம் போல்பவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
591 மெய்யனை மெய்யில் நின்றுணர் வானை
மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்
புனித னைப்புலித் தோலுடை யானைச்
செய்ய னைவெளி யதிரு நீற்றில்
திகழு மேனியன் மான்மறி யேந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.057.11
என்றும் ஓர் அழிவில்லாதவனும், மெய்ம்மையில் நின்று உணரப்படுபவனும், அம் மெய்ம்மையை இல்லாதவர்க்கெல்லாம் உணரப்படாதவனும், முப்புரங்களை எரித்தவனும், குற்றமில்லாதவனும், புலித்தோலாகிய உடையை உடையவனும், சிவந்த நிறம் உடையதாய், வெள்ளிய திருநீற்றினால் விளங்குகின்ற திருமேனியை உடையவனும், மான்கன்றை ஏந்துகின்ற, கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடையனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 
592 வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேன்என்
றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
சடையன் காதலன் வனப்பகை யப்பன்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
நங்கை சிங்கடி தந்தைப யந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேற்
பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே.
7.057.12
வன்றொண்டனும், சடையனார் மகனும், வனப்பகை, சிங்கடி என்னும் நங்கையர்க்குத் தந்தையும், விளைவு மிகுகின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனும், இறைவனை உளங்குளிர்ந்து பாடும் தமிழையுடையவனும் ஆகிய நம்பியாரூரன், 'வளமை மிக்க சோலைகளையுடைய திருவாழ் கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதனை நினைப்பேன்' என்று சொல்லிப் பாடிய, பயன் மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களிடத் தினின்றும், அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து நீங்கும். 
திருச்சிற்றம்பலம்

 

7.057.திருவாழ்கொளிபுத்தூர் 

பண் - தக்கேசி 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர். 

தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை. 

 

 

581 தலைக்க லன்தலை மேல்தரித் தானைத்

தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்

கொலைக்கையா னையுரி போர்த்துகந் தானைக்

கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை

அலைத்தசெங் கண்விடை ஏறவல் லானை

ஆணை யால்அடி யேன்அடி நாயேன்

மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.1

 

  தலையாகிய அணிகலனைத் தலையில் அணிந்தவனும், தன்னை எனக்கு நினைக்குமாறு தருபவனும், கொலைத் தொழிலையும், கையையும் உடைய யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனும், கூற்றுவனை உதைத்த, ஒலித்தல் பொருந்திய கழலை யணிந்த திருவடியை உடையவனும், எதிர்த்தவரை வருத்தும் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர வல்லவனும் ஆகிய, பயிர்கள் தம் தலைமேற்கொண்ட செந்நெற்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, அவன் ஆணை வழியே அவனுக்கு அடிமையானேனாகிய அடிநாய் போன்ற யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

582 படைக்கட் சூலம் பயிலவல் லானைப்

பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்

கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்

காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்

சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்

தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை

மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.2

 

  படைகளுள் சூலத்தைப் பழக வல்லவனும், தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்படுத்துக் கொள்பவனும், வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சைக்கு விரும்புதலைச் செய்பவனும், காமனது உடலை அமைப்பு அழியச் செய்தவனும், கங்கையைச் சடையில் தங்கும்படி வைத்தவனும், தண்ணிய நீரையுடைய மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும், எல்லாத் தகுதிகளையும் உடையவனும் ஆகிய, நீர்மடைகளில் நீலோற்பல மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

583 வெந்த நீறுமெய் பூசவல் லானை

வேத மால்விடை ஏறவல் லானை

அந்தமா திஅறி தற்கரி யானை

ஆறலைத் தசடை யானைஅம் மானைச்

சிந்தை என்தடு மாற்றறுப் பானைத்

தேவ தேவன்என் சொல்முனி யாதே

வந்தென்உள் ளம்புகும் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.3

 

  வெந்த சாம்பலை உடம்பிற் பூச வல்லவனும், வேத மாகிய சிறந்த விடையை ஊர வல்லவனும், முடிவும் முதலும் அறிதற்கு அரியவனும், ஆற்றுநீர் மோதுகின்ற சடையை உடையவனும், பெரியோனும், எனது மனக் கலக்கத்தைக் களைபவனும், தேவர்களுக்குத் தேவனும், யான் இகழ்ந்து சொல்லிய சொல்லை வெறாமல் வந்து என் உள்ளத்தில் புகுந்து நிற்பவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

584 தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்

தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்

படங்கொள்நா கம்மரை யார்த்துகந் தானைப்

பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை

நடுங்கஆ னையுரி போர்த்துகந் தானை

நஞ்சம்உண் டுகண் டங்கறுத் தானை

மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.4

 

  பெரிய கைகளால் மலர்களை எடுத்துத் தூவிக் கும்பிடுகின்றவர்கள், பிறவிடத்துச் செல்லாது, தன் திருவடியிடத்தே செல்லுமாறு செலுத்த வல்லவனும், படத்தை உடைய பாம்பை அரையில் விரும்பிக் கட்டியுள்ளவனும், முன்னர் விளங்கும் பற்களையுடைய வெள்ளிய தலையில் உண்ணுதல் உடையவனும், தன் தேவியும் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்துள்ளவனும், நஞ்சினை உண்டு கண்டம்கரியதாகியவனும், மாதொரு பாகனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

585 வளைக்கைமுன் கைமலை மங்கை மணாளன்

மார னாருடல் நீறெழச் செற்றுத்

துளைத்தவங் கத்தொடு தூமலர்க் கொன்றை

தோலும்நூ லும்துதைந் தவரை மார்பன்

திளைக்குந் தெவ்வர் திரிபுர மூன்றும்

அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ

வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.5

 

  வளையை அணிந்த முன் கையையுடைய மலை மகளுக்கு மணாளனும், மன்மதனது அரிய உடம்பு சாம்பலாய் ஒழியுமாறு அழித்தவனும், துளைசெய்யப்பட்ட எலும்பும், தூய கொன்றை மலரும், தோலும், நூலும் நெருங்கிய, கீற்றுக்களையுடைய மார்பையுடையவனும், வானத்தில் திரிகின்ற மூன்று அரண்களும், அதன்கண் வாழ்ந்து இன்பம் நுகர்கின்ற பகைவர் மூவரும், அவரைச் சார்ந்த அசுரரும், அவர்தம் பெண்டிரும், பிள்ளைகளும் வெந்தொழியுமாறு வளைத்த வில்லையுடையவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

586 திருவின் நாயக னாகிய மாலுக்

கருள்கள் செய்திடும் தேவர் பிரானை

உருவி னானைஒன் றாஅறி வொண்ணா

மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்

செருவில் லேந்திஓர் கேழற்பின் சென்று

செங்கண் வேடனாய் என்னொடும் வந்து

மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.6

 

  திருமகளுக்குக் கணவனாகிய திருமாலுக்குப் பல பொழுதுகளிற் பல திருவருள்களைச் செய்த, தேவர் தலைவனும், உருவம் உடையவனும், அவ்வுருவம் ஒன்றாக அறியப்படாது, அளவற்றனவாய் அறியப்படுங் கடவுளும் அருச்சுனனுக்கு அருள்செய்தற் பொருட்டு போருக்குரியவில் ஒன்றை ஏந்திக்கொண்டு, ஒரு பன்றியின்பின்னே, சிவந்த கண்களையுடைய வேடனாய்ச் சென்றவனும், என்னிடத்திலும் வந்து பொருந்தியுள்ளவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

587 எந்தை யைஎந்தை தந்தை பிரானை

ஏதமா யவ்விடர் தீர்க்க வல்லானை

முந்தை யாகிய மூவரின் மிக்க

மூர்த்தி யைமுதல் காண்பரி யானைக்

கந்தின்மிக் ககரி யின்மருப் போடு

கார கில்கவ ரிம்மயிர் மண்ணி

வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.7

 

  என் தந்தையும், என் தந்தை தந்தைக்கும் தலைவனும், துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும், யாவர்க்கும் முன்னோராகிய மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும், தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய, மண்ணியாறு வழியாக, தறியிடத்தில் நின்று சினம் மிகுகின்ற யானையின் தந்தங்களும், கரிய அகிற் கட்டைகளும், கவரிமானின் மயிர்களும் வந்து வந்து வீழ்கின்ற திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல் பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

588 தேனை யாடிய கொன்றையி னானைத்

தேவர் கைதொழுந் தேவர் பிரானை

ஊன மாயின தீர்க்கவல் லானை

ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்

கான வானையின் கொம்பினைப் பீழ்ந்த

கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய

வான நாடனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.8

 

  தேனில் மூழ்கிய கொன்றைமலர் மாலையை உடையவனும், தேவர்கள் வணங்கும் தலையாய தேவனும் குறையாயவற்றை எல்லாம் போக்க வல்லவனும், ஒற்றை எருதை உடையவனும், நெற்றிக்கண்ணை உடையவனும், காட்டில் வாழும் யானையின் கொம்பை ஒடித்த கள்ளத்தன்மையுடைய சிறுவனுக்கும் காண அரிதான பொருளாய் உள்ளவனும், வானுலகத்தில் வாழ்பவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

589 காளை யாகி வரையெடுத் தான்றன்

கைக ளிற்றவன் மொய்தலை யெல்லாம்

மூளை போத ஒருவிரல் வைத்த

மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்

பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்

செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்

வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.9

 

  காளைபோன்று கயிலாயத்தைப் பெயர்த்தவனாகிய இராவணனது கைகள் முரிந்து, நெருங்கிய தலைகளினின்றும் மூளை வெளிப்படுமாறு தனது கால்விரல் ஒன்றை ஊன்றிய கடவுளும், தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய, பாளையையுடைய தென்னை மரத்தினது நெற்றுக்கள் விழ, சிவந்த கண்களையுடைய எருமைகள், நெருங்கிச் சேறுசெய்ய, எங்கும் வாளை மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

590 திருந்த நான்மறை பாடவல் லானைத்

தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்

பொருந்த மால்விடை ஏறவல் லானைப்

பூதிப் பைபுலித் தோலுடை யானை

இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்

ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்

மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.10

 

  நான்கு வேதங்களையும் செவ்வனே பாட வல்லவனும், தேவர்க்கும் அறிதற்கு அரியவனும், பெரிய விடையினை ஏற்புடைத்தாமாறு ஏற வல்லவனும், திருநீற்றுப் பையும், புலித் தோலுமாகிய இவற்றையுடையவனும், இருந்து உண்கின்ற சாக்கியரும், நின்று உண்கின்ற சமணரும் இகழ நிற்பவனும், அரிய உயிர்கட்கெல்லாம் அமுதம் போல்பவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

591 மெய்யனை மெய்யில் நின்றுணர் வானை

மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்

பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்

புனித னைப்புலித் தோலுடை யானைச்

செய்ய னைவெளி யதிரு நீற்றில்

திகழு மேனியன் மான்மறி யேந்தும்

மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7.057.11

 

  என்றும் ஓர் அழிவில்லாதவனும், மெய்ம்மையில் நின்று உணரப்படுபவனும், அம் மெய்ம்மையை இல்லாதவர்க்கெல்லாம் உணரப்படாதவனும், முப்புரங்களை எரித்தவனும், குற்றமில்லாதவனும், புலித்தோலாகிய உடையை உடையவனும், சிவந்த நிறம் உடையதாய், வெள்ளிய திருநீற்றினால் விளங்குகின்ற திருமேனியை உடையவனும், மான்கன்றை ஏந்துகின்ற, கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடையனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். 

 

 

592 வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேன்என்

றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்

சடையன் காதலன் வனப்பகை யப்பன்

நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்

நங்கை சிங்கடி தந்தைப யந்த

பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேற்

பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே.

7.057.12

 

  வன்றொண்டனும், சடையனார் மகனும், வனப்பகை, சிங்கடி என்னும் நங்கையர்க்குத் தந்தையும், விளைவு மிகுகின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனும், இறைவனை உளங்குளிர்ந்து பாடும் தமிழையுடையவனும் ஆகிய நம்பியாரூரன், 'வளமை மிக்க சோலைகளையுடைய திருவாழ் கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதனை நினைப்பேன்' என்று சொல்லிப் பாடிய, பயன் மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களிடத் தினின்றும், அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து நீங்கும். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.