LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-59

 

7.059.திருவாரூர் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வன்மீகநாதர். 
தேவியார் - அல்லியங்கோதையம்மை. 
603 பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.1
எனக்குப் பொன்னையும், மெய்யுணர்வையும், வழங்குபவனும், அவை வாயிலாக உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும், அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும், பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும், இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும், எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய, அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 
604 கட்ட மும்பிணி யுங்களை வானைக்
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
விரவி னால்விடு தற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
வாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.2
மனத்துன்பத்தையும் உடல்நோயையும் ஒழிக்கின்றவனும், கூற்றுவனை அழித்த காலை உடையவனும், துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும், கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும், வந்த பழிச் சொல்லும், வரக் கடவ பழிச்சொல்லும் வாராது ஒழியும்படி அருள்செய்பவனும், அட்ட மூர்த்தங்களை யுடையவனும் ஆகிய, மலர்கள் தேனோடு மலர்கின்ற சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 
605 கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
கலைக்கெ லாம்பொரு ளாய்உடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
பகலுங் கங்குலு மாகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
யுணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.3
மேகங்களையுடைய மலைமேல் மழையாய் நின்று பொழிபவனும், நூல்களுக்கெல்லாம் பொருளாய் அவற்றுட் பொருந்தி நின்று, காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும், பகலாகியும் இரவாகியும் இருப்பவனும், ஓசையைக் கேட்கின்ற செவியாகியும், சுவையை உணர்கின்ற நாவாகியும், உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும், ஒலிக்கின்ற கடலாகியும், மலையாகியும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 
606 செத்த போதினில் முன்னின்று நம்மைச்
சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தையுண் டேமன முண்டே
மதியுண் டேவிதி யின்பய னுண்டே.
முத்தன் எங்கள்பி ரானென்று வானோர்
தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.4
நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ்வதற்கு முன்னே, நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ! நெஞ்சு உளதன்றோ! அறிவு உளதன்றோ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ! அவற்றால் தேவர்கள், 'இயல்பாகவே பாசம் இல்லாதவன்' என்றும், 'எங்கள் தலைவன்' என்றும் வணங்க நிற்கின்ற, முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும், யாவர்க்கும் தந்தையும், என் தந்தைக்குத் தலைவனும், எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ! 
607 செறிவுண் டேல்மனத் தால்தௌ வுண்டேல்
தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல்
பொறிவண் டியாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை
பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
அறிவுண் டேஉட லத்துயி ருண்டே
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.5
நன்மையைத்தரும் கல்வியும், அதன்பயனாகிய உள்ளத்தௌவும், அதன்பயனாகிய இறைவன் பற்றும் நமக்கு உள்ளன என்றால், அவற்றோடே இறப்பும், மறுபிறப்பும், வாழ்நாளை இடைமுரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால், இவற்றையெல்லாம் அறிகின்ற அறிவும். அவ்வறிவின்வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின், புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற, பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை, பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ! 
608 பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
பொருளுஞ் சுற்றமும் போகமு மாகி
மௌள நின்றவர் செய்வன வெல்லாம்
வாரா மேதவிர்க் கும்விதி யானை
வள்ளல் எந்தமக் கேதுணை யென்று
நாணா ளும்அம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.6
எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு, செல்வமும், படைகளும், இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற, நன்னெறியாய் உள்ளவனாகிய, தேவர்கள் நாள்தோறும், 'வள்ளல்' என்றும், 'எங்களுக்குத் துணை' என்றும் சொல்லித் துதிக்கின்ற, சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணையிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 
609 கரியா னைஉரி கொண்டகை யானைக்
கண்ணின் மேல்ஒரு கண்ணுடை யானை
வரியா னைவருத் தம்களை வானை
மறையா னைக்குறை மாமதி சூடற்
குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்
ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்
கரியா னைஅடி யேற்கௌ யானை
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.7
கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும், இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும், அழகையுடையவனும், அடைந்தாரது வருத்தங்களைப் போக்குபவனும், வேதத்தை உடையவனும், சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும், உலகத்தில் உள்ள உயிர்கட்கெல்லாம் விளக்காய் உள்ளவனும். தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும், அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 
610 வாளா நின்று தொழும்அடி யார்கள்
வானா ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணா ளும்மல ரிட்டுவ ணங்கார்
நம்மையாள் கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி
ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.8
யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப் பெற்று விடுகின்ற செய்தியைக் கேட்டபின்பும், சிலர், அவனை நாள்தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர். அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர். ஆயினும், யான், எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணையாவான் என்று கருதி, அவனையே உறவாகக் கொண்டு, அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன்; அன்றியும், பலரையும் அவனுக்கு ஆளாகுமாறு முன் நின்று அழைக்கின்றேன்; ஆதலின், யான் அவனை மறத்தலும் இயலுமோ! 
611 விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
கடக்கிலேன்நெறி காணவு மாட்டேன்
கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும்
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
சடையா னைஉமை யாளையோர் பாகத்
தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.9
எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று, அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும், கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும், பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான், பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையை யுடையவனும், உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய, அழகிய தாமரைப் பொய்கைகளையுடைய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 
612 ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட
உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்தௌ தன்னைக்
காத லாற்கடற் சூர்தடிந் திட்ட
செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ
ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.059.10
என்னை, வழக்கிட்டு ஆட்கொண்டு அதன்பின் கோயிலுள் சென்று மறைந்த, நண்பகற் போது போலும் ஒளியுடையவனும், நஞ்சையுடைய பாம்பைக் கட்டியுள்ள உடையை உடையவனும், பகலாயும் இரவாயும் உள்ளவனும், தன்னை நினைப்பவரது உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற தேனாய் உள்ளவனும், கரும்பின் சாறும் அதன்கட்டியும் போல்பவனும், தேவர்மீது வைத்த அன்பினால், கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும், வேதத்தில் வல்லவனும் ஆகிய, செல்வத்தையுடைய திருவாரூர் இறைவனை, யான் மறத்தலும் இயலுமோ! 
613 ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்
உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக்
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைம்மறத் தற்கரி யானை
அம்மான் றன்திருப் பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்னடி நாயுரை வல்லார்
அமர லோகத் திருப்பவர் தாமே.
7.059.11
'பரவை' என்பவள் முன்னிலையாக, எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய், தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை, கார் காலத்தில் பூக்கின்ற, மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடையவனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர், அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம். 
திருச்சிற்றம்பலம்

 

7.059.திருவாரூர் 

பண் - தக்கேசி 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - வன்மீகநாதர். 

தேவியார் - அல்லியங்கோதையம்மை. 

 

 

603 பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்

போக மும்திரு வும்புணர்ப் பானைப்

பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்

பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை

இன்ன தன்மையன் என்றறி வொண்ணா

எம்மா னைஎளி வந்தபி ரானை

அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.1

 

  எனக்குப் பொன்னையும், மெய்யுணர்வையும், வழங்குபவனும், அவை வாயிலாக உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும், அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும், பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும், இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும், எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய, அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 

 

 

604 கட்ட மும்பிணி யுங்களை வானைக்

காலற் சீறிய காலுடை யானை

விட்ட வேட்கைவெந் நோய்களை வானை

விரவி னால்விடு தற்கரி யானைப்

பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை

வாரா மேதவி ரப்பணிப் பானை

அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.2

 

  மனத்துன்பத்தையும் உடல்நோயையும் ஒழிக்கின்றவனும், கூற்றுவனை அழித்த காலை உடையவனும், துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும், கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும், வந்த பழிச் சொல்லும், வரக் கடவ பழிச்சொல்லும் வாராது ஒழியும்படி அருள்செய்பவனும், அட்ட மூர்த்தங்களை யுடையவனும் ஆகிய, மலர்கள் தேனோடு மலர்கின்ற சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 

 

 

605 கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்

கலைக்கெ லாம்பொரு ளாய்உடன் கூடிப்

பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்

பகலுங் கங்குலு மாகிநின் றானை

ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை

யுணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை

ஆர்க்கின் றகட லைமலை தன்னை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.3

 

  மேகங்களையுடைய மலைமேல் மழையாய் நின்று பொழிபவனும், நூல்களுக்கெல்லாம் பொருளாய் அவற்றுட் பொருந்தி நின்று, காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும், பகலாகியும் இரவாகியும் இருப்பவனும், ஓசையைக் கேட்கின்ற செவியாகியும், சுவையை உணர்கின்ற நாவாகியும், உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும், ஒலிக்கின்ற கடலாகியும், மலையாகியும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 

 

 

606 செத்த போதினில் முன்னின்று நம்மைச்

சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்

வைத்த சிந்தையுண் டேமன முண்டே

மதியுண் டேவிதி யின்பய னுண்டே.

முத்தன் எங்கள்பி ரானென்று வானோர்

தொழநின் றதிமில் ஏறுடை யானை

அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.4

 

  நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ்வதற்கு முன்னே, நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ! நெஞ்சு உளதன்றோ! அறிவு உளதன்றோ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ! அவற்றால் தேவர்கள், 'இயல்பாகவே பாசம் இல்லாதவன்' என்றும், 'எங்கள் தலைவன்' என்றும் வணங்க நிற்கின்ற, முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும், யாவர்க்கும் தந்தையும், என் தந்தைக்குத் தலைவனும், எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ! 

 

 

607 செறிவுண் டேல்மனத் தால்தௌ வுண்டேல்

தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்

மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்

வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல்

பொறிவண் டியாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை

பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை

அறிவுண் டேஉட லத்துயி ருண்டே

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.5

 

  நன்மையைத்தரும் கல்வியும், அதன்பயனாகிய உள்ளத்தௌவும், அதன்பயனாகிய இறைவன் பற்றும் நமக்கு உள்ளன என்றால், அவற்றோடே இறப்பும், மறுபிறப்பும், வாழ்நாளை இடைமுரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால், இவற்றையெல்லாம் அறிகின்ற அறிவும். அவ்வறிவின்வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின், புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற, பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை, பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ! 

 

 

608 பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று

பொருளுஞ் சுற்றமும் போகமு மாகி

மௌள நின்றவர் செய்வன வெல்லாம்

வாரா மேதவிர்க் கும்விதி யானை

வள்ளல் எந்தமக் கேதுணை யென்று

நாணா ளும்அம ரர்தொழு தேத்தும்

அள்ள லங்கழ னிப்பழ னத்தணி

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.6

 

  எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு, செல்வமும், படைகளும், இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற, நன்னெறியாய் உள்ளவனாகிய, தேவர்கள் நாள்தோறும், 'வள்ளல்' என்றும், 'எங்களுக்குத் துணை' என்றும் சொல்லித் துதிக்கின்ற, சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணையிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 

 

 

609 கரியா னைஉரி கொண்டகை யானைக்

கண்ணின் மேல்ஒரு கண்ணுடை யானை

வரியா னைவருத் தம்களை வானை

மறையா னைக்குறை மாமதி சூடற்

குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்

ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்

கரியா னைஅடி யேற்கௌ யானை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.7

 

  கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும், இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும், அழகையுடையவனும், அடைந்தாரது வருத்தங்களைப் போக்குபவனும், வேதத்தை உடையவனும், சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும், உலகத்தில் உள்ள உயிர்கட்கெல்லாம் விளக்காய் உள்ளவனும். தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும், அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 

 

 

610 வாளா நின்று தொழும்அடி யார்கள்

வானா ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்

நாணா ளும்மல ரிட்டுவ ணங்கார்

நம்மையாள் கின்ற தன்மையை ஓரார்

கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்

கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி

ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.8

 

யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப் பெற்று விடுகின்ற செய்தியைக் கேட்டபின்பும், சிலர், அவனை நாள்தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர். அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர். ஆயினும், யான், எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணையாவான் என்று கருதி, அவனையே உறவாகக் கொண்டு, அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன்; அன்றியும், பலரையும் அவனுக்கு ஆளாகுமாறு முன் நின்று அழைக்கின்றேன்; ஆதலின், யான் அவனை மறத்தலும் இயலுமோ! 

 

 

611 விடக்கை யேபெருக் கிப்பல நாளும்

வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்

கடக்கிலேன்நெறி காணவு மாட்டேன்

கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும்

இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்

சடையா னைஉமை யாளையோர் பாகத்

தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.9

 

  எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று, அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும், கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும், பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான், பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையை யுடையவனும், உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய, அழகிய தாமரைப் பொய்கைகளையுடைய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! 

 

 

612 ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட

உச்சிப் போதனை நச்சர வார்த்த

பட்டி யைப்பக லையிருள் தன்னைப்

பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக்

கட்டி யைக்கரும் பின்தௌ தன்னைக்

காத லாற்கடற் சூர்தடிந் திட்ட

செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.059.10

 

  என்னை, வழக்கிட்டு ஆட்கொண்டு அதன்பின் கோயிலுள் சென்று மறைந்த, நண்பகற் போது போலும் ஒளியுடையவனும், நஞ்சையுடைய பாம்பைக் கட்டியுள்ள உடையை உடையவனும், பகலாயும் இரவாயும் உள்ளவனும், தன்னை நினைப்பவரது உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற தேனாய் உள்ளவனும், கரும்பின் சாறும் அதன்கட்டியும் போல்பவனும், தேவர்மீது வைத்த அன்பினால், கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும், வேதத்தில் வல்லவனும் ஆகிய, செல்வத்தையுடைய திருவாரூர் இறைவனை, யான் மறத்தலும் இயலுமோ! 

 

 

613 ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்

உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக்

காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை

முடியன் காரிகை காரண மாக

ஆரூ ரைம்மறத் தற்கரி யானை

அம்மான் றன்திருப் பேர்கொண்ட தொண்டன்

ஆரூ ரன்னடி நாயுரை வல்லார்

அமர லோகத் திருப்பவர் தாமே.

7.059.11

 

  'பரவை' என்பவள் முன்னிலையாக, எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய், தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை, கார் காலத்தில் பூக்கின்ற, மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடையவனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர், அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.