LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-60

 

7.060.திருவிடைமருதூர் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மருதீசுவரர். 
தேவியார் - நலமுலைநாயகியம்மை. 
614 கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.060.1
என் அப்பனே, திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே, கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால், அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர்; அது போல, அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேனாயினேன்; 'மனமே, நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்' என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், 'அங்கணனே, அரனே' என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 
615 நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை யறிந்தேன்
அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர
உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்ப னேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.
7.060.2
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும்; அவற்றால் இவ்வுடம்பு, அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகிழந் தொழிவதாம்; இவற்றை அறிந்தேனாயினும், நன்மை இல்லாத செயல்களையே பற்றாகத் துணிந்துசெய்து இளைத்தேன். அதனால், கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையனாயினேன்; ஆகவே, இதுபோழ்து நான் உன் திருவடிகளை அடைய உன்னை வேண்டுவேனாயினேன்; அறிவது அறிந்து வாழும் வாழ்க்கையைச் சிறிதும் அறியாத, ஆரவாரச் சொற்களையுடையேனாகிய எனக்கு. நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 
616 புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திட ருற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.
7.060.3
என் தந்தையே, திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே, புல்லின் நுனியில் உள்ள பனித்துளி, வெவ்வியவாகிய கிரணங்களையுடைய பகலவனை எதிர்ப்பட்டாற் போல்வதாகிய இம்மானுட வாழ்க்கை ஒரு பொருளாதல் இல்லை; ஏனெனில், 'இன்றைக்கு இன்பம் உளதாகும்; நாளைக்கு இன்பம் உளதாகும்' என்று நாள்தோறும் நினைந்து ஏமாறினேன்; இனிமேற்றான், எனக்கு என்ன உண்டாக இருக்கின்றது! ஆதலால், முன்பே உன்னுடைய செவ்விய திருவடியைச் சேர விரும்பாது, கொண்டது விடாத மூர்க்கனான நிலையிலே காலமெல்லாம் போய்விட்டன; இப்பொழுதே எனக்கு நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 
617 முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவு மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.
7.060.4
மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடியவனே, திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே, என் தந்தையே திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால், அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின; நன்மை தீமைகளைச் சிந்தித்து, உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேனாயினேன்; உலகியலிலும், இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு சிறிது ஈதலும் செய்திலேன்; எனக்கு, நீ. உய்யும் நெறியை வழங்கியருளாய். 
618 அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
ஐவ ரும்புர வாசற ஆண்டு
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்
கடைமு றைஉனக் கேபொறை யானேன்
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
வேண்டேன் மானுட வாழக்கைஈ தாகில்
இழித்தெ னென்றனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.060.5
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, நன்மைகளையெல்லாம் அழிப்பவராகிய ஓர் ஐவர் என்னை ஆளுதலுடையர்; அவ் வைவரும் என்னை ஆளுதலை நன்றாகச் செய்து, 'இனி இவனாற் பயனில்லை' என்று கழித்து, என்னைத் தங்கள் காற்கீழ்ப் போகட்டுப் போய்விட்ட பின்பு. முடிவில் உனக்கே நான் சுமையாயினேன்; அதன்பின்பே நான் விழிப்படைந்து, உண்மையை உணர்ந்தேன்; மானுடவாழ்க்கைதான் இத்தன்மையதேயென்றால், இனி இதனை யான் விரும்பேன்; இதனை மிக்க இழிவுடையதாக உணர்ந்துவிட்டேன்; எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 
619 குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானங்
கடிய வாயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.
7.060.6
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, யான், அழகிய, நுண்ணிய இடையினையுடைய மகளிரோடு கூடி மயங்கி நின்று, தீவினையும் நல்வினையுமாகிய இருவினைகளை மிகுதியாகச் செய்தும், மெய்ந்நூல்கள் பலவற்றிற் புகுந்து ஞானத்தை யுணராதும் மிகவுங் கொடுமையான செயல்களைச் செய்தேன்; அதனால், பற்றத் தக்கதொரு பற்றுக்கோடு இலனாயினேன்; இவ்வாறு பலவாகிய பாவங்களைச் செய்து பாவியாகிய யான், எதன் பொருட்டு உயிர்வாழ்கின்றேன்! எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 
620 கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
குற்றஞ் செற்ற மிவைமுத லாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்
வேண்டில் ஐம்புலன் என்வச மல்ல
நடுக்க முற்றதோர் மூப்புவந் தெய்த
நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
இடுக்க ணுற்றனன் உய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.
7.060.7
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, ஈகை வழியாகப் புகழைத் தரத்தக்க பொருளை, உலோபமும், பகைமையும் காரணமாகப் பிறருக்குயான் கொடுக்க மாட்டேன்; ஆசையும், கோபமும் ஆகிய இவைகளை ஒழிக்கமாட்டேன்; ஐம்புலன்கள்மேற் செல்கின்ற ஆசைகளை விடநினைத்தால், யான் அவற்றின் வயத்தேனல்லது, அவை என் வயத்தன அல்ல; அதனால், உடல் நடுங்குதல் பொருந்தியதாகிய, 'மூப்பு' என்பதொன்று வந்து அடைய, அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு சென்று நரகத்தில் இடுதலை நினைத்து அஞ்சித் துன்புறுவேனாயினேன்; எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கி யருளாய். 
621 ஐவ கைஅரை யர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்
அவ்வ கைஅவர் வேண்டுவ தானால்
அவர வர்வழி யொழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
தீவ ணாசிவ னேஎரி யாடீ
எவ்வ கைஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.
7.060.8
சிவலோகத்திற்குத் தலைவனே, நெருப்புப் போலும் நிறம் உடையவனே, சிவபெருமானே, தீயோடு நின்று ஆடுபவனே, திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, ஐவர் வேறுபட்ட தன்மையையுடைய அரசராய் என்னை ஆட்சி கொண்டு ஒருகாலும் விட்டு நீங்காதிருக்கின்றனர். அவ்வாறு ஆவர், தாம் தாம் வேறு வேறுவகையில் என்னை ஆள விரும்பினால், யான் அவர் வழியே அவர் வேண்டுமாற்றிலெல்லாம் சென்று நடந்து, செய்வது இன்னது என்று அறிகின்றிலேன்; எனக்கு உய்யும் நெறியாவது எந்நெறி? அதனை வழங்கியருளாய். 
622 ஏழை மானுட வின்பினை நோக்கி
இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்
வாழை தான்பழுக் குந்நமக் கென்று
வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்
போத மும்பொரு ளொன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.
7.060.9
திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, அறிவில்லாத, மானுட இன்பத்தைக் கருதி, முன்னர்ப்பழத்தைத் தந்த வாழை, இனியும் நமக்கு அவ்வாறே தரும் என்று கருதுவாரைப் போல, இளமையுடையராய் இன்பம் தந்த மகளிர் என்றும் இவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும் மயக்கமாகிய வலையுள் அகப்பட்டு, அதனானே, வஞ்சனையையுடைய வலிய வினையென்னும் வலையிலும் அகப்பட்டு, அறிவு முதிராத பொது மக்கள் செல்லும் வழியிடத்து நின்று, அறிவின் இயல்பையும், அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின் இயல்பையும் சிறிதும் அறியாத எளியேனுக்கு, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 
623 அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
ஐவ னஞ்சுமந் தார்ந்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையு மின்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே.
7.060.10
அரைக்கப்படுகின்ற சந்தனக் கட்டையையும், அகிற் கட்டையையும் இருமருங்கும் தள்ளிக்கொண்டு, மலை நெல்லைத் தாளோடு மேல்இட்டுக்கொண்டு, நிறைந்து ஒலிக்கின்ற காவிரியாற்றின் தென்கரைமேல் உள்ள திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனாகிய பெருமானைப் பாடிய, நம்பி யாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை, மனத்தால் விரும்பிப் பாட வல்லவர்கள், நரைத்தலும், மூத்தலும், இறத்தலும் இன்றி அவ்விறைவனது செவ்விய திருவடிகளை அடைவர்; இது திண்ணம். 
திருச்சிற்றம்பலம்

 

7.060.திருவிடைமருதூர் 

பண் - தக்கேசி 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - மருதீசுவரர். 

தேவியார் - நலமுலைநாயகியம்மை. 

 

 

614 கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்

கைப்பர் பாழ்புக மற்றது போலப்

பழுது நானுழன் றுள்தடு மாறிப்

படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்

அழுது நீயிருந் தென்செய்தி மனனே

அங்க ணாஅர னேயென மாட்டா

இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்

இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.060.1

 

  என் அப்பனே, திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே, கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால், அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர்; அது போல, அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேனாயினேன்; 'மனமே, நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்' என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், 'அங்கணனே, அரனே' என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 

 

 

615 நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே

நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்

அரைத்த மஞ்சள தாவதை யறிந்தேன்

அஞ்சி னேன்நம னாரவர் தம்மை

உரைப்பன் நானுன சேவடி சேர

உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத

இரைப்ப னேனுக்கொர் உய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

7.060.2

 

  திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும்; அவற்றால் இவ்வுடம்பு, அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகிழந் தொழிவதாம்; இவற்றை அறிந்தேனாயினும், நன்மை இல்லாத செயல்களையே பற்றாகத் துணிந்துசெய்து இளைத்தேன். அதனால், கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையனாயினேன்; ஆகவே, இதுபோழ்து நான் உன் திருவடிகளை அடைய உன்னை வேண்டுவேனாயினேன்; அறிவது அறிந்து வாழும் வாழ்க்கையைச் சிறிதும் அறியாத, ஆரவாரச் சொற்களையுடையேனாகிய எனக்கு. நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 

 

 

616 புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்

போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்

என்னெ னக்கினி இற்றைக்கு நாளை

என்றி ருந்திட ருற்றனன் எந்தாய்

முன்ன மேஉன சேவடி சேரா

மூர்க்க னாகிக் கழிந்தன காலம்

இன்னம் என்றனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

7.060.3

 

  என் தந்தையே, திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே, புல்லின் நுனியில் உள்ள பனித்துளி, வெவ்வியவாகிய கிரணங்களையுடைய பகலவனை எதிர்ப்பட்டாற் போல்வதாகிய இம்மானுட வாழ்க்கை ஒரு பொருளாதல் இல்லை; ஏனெனில், 'இன்றைக்கு இன்பம் உளதாகும்; நாளைக்கு இன்பம் உளதாகும்' என்று நாள்தோறும் நினைந்து ஏமாறினேன்; இனிமேற்றான், எனக்கு என்ன உண்டாக இருக்கின்றது! ஆதலால், முன்பே உன்னுடைய செவ்விய திருவடியைச் சேர விரும்பாது, கொண்டது விடாத மூர்க்கனான நிலையிலே காலமெல்லாம் போய்விட்டன; இப்பொழுதே எனக்கு நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 

 

 

617 முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய

மூர்க்க னாகிக் கழிந்தன காலம்

சிந்தித் தேமனம் வைக்கவு மாட்டேன்

சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்

அந்தி வெண்பிறை சூடும்எம் மானே

ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா

எந்தை நீஎனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

7.060.4

 

  மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடியவனே, திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே, என் தந்தையே திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால், அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின; நன்மை தீமைகளைச் சிந்தித்து, உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேனாயினேன்; உலகியலிலும், இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு சிறிது ஈதலும் செய்திலேன்; எனக்கு, நீ. உய்யும் நெறியை வழங்கியருளாய். 

 

 

618 அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்

ஐவ ரும்புர வாசற ஆண்டு

கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்

கடைமு றைஉனக் கேபொறை யானேன்

விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை

வேண்டேன் மானுட வாழக்கைஈ தாகில்

இழித்தெ னென்றனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.060.5

 

  திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, நன்மைகளையெல்லாம் அழிப்பவராகிய ஓர் ஐவர் என்னை ஆளுதலுடையர்; அவ் வைவரும் என்னை ஆளுதலை நன்றாகச் செய்து, 'இனி இவனாற் பயனில்லை' என்று கழித்து, என்னைத் தங்கள் காற்கீழ்ப் போகட்டுப் போய்விட்ட பின்பு. முடிவில் உனக்கே நான் சுமையாயினேன்; அதன்பின்பே நான் விழிப்படைந்து, உண்மையை உணர்ந்தேன்; மானுடவாழ்க்கைதான் இத்தன்மையதேயென்றால், இனி இதனை யான் விரும்பேன்; இதனை மிக்க இழிவுடையதாக உணர்ந்துவிட்டேன்; எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 

 

 

619 குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்

கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்

கற்றி லேன்கலை கள்பல ஞானங்

கடிய வாயின கொடுமைகள் செய்தேன்

பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்

பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்

எற்று ளேன்எனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

7.060.6

 

  திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, யான், அழகிய, நுண்ணிய இடையினையுடைய மகளிரோடு கூடி மயங்கி நின்று, தீவினையும் நல்வினையுமாகிய இருவினைகளை மிகுதியாகச் செய்தும், மெய்ந்நூல்கள் பலவற்றிற் புகுந்து ஞானத்தை யுணராதும் மிகவுங் கொடுமையான செயல்களைச் செய்தேன்; அதனால், பற்றத் தக்கதொரு பற்றுக்கோடு இலனாயினேன்; இவ்வாறு பலவாகிய பாவங்களைச் செய்து பாவியாகிய யான், எதன் பொருட்டு உயிர்வாழ்கின்றேன்! எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 

 

 

620 கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்

குற்றஞ் செற்ற மிவைமுத லாக

விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்

வேண்டில் ஐம்புலன் என்வச மல்ல

நடுக்க முற்றதோர் மூப்புவந் தெய்த

நமன்த மர்நர கத்திடல் அஞ்சி

இடுக்க ணுற்றனன் உய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

7.060.7

 

  திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, ஈகை வழியாகப் புகழைத் தரத்தக்க பொருளை, உலோபமும், பகைமையும் காரணமாகப் பிறருக்குயான் கொடுக்க மாட்டேன்; ஆசையும், கோபமும் ஆகிய இவைகளை ஒழிக்கமாட்டேன்; ஐம்புலன்கள்மேற் செல்கின்ற ஆசைகளை விடநினைத்தால், யான் அவற்றின் வயத்தேனல்லது, அவை என் வயத்தன அல்ல; அதனால், உடல் நடுங்குதல் பொருந்தியதாகிய, 'மூப்பு' என்பதொன்று வந்து அடைய, அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு சென்று நரகத்தில் இடுதலை நினைத்து அஞ்சித் துன்புறுவேனாயினேன்; எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கி யருளாய். 

 

 

621 ஐவ கைஅரை யர்அவர் ஆகி

ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்

அவ்வ கைஅவர் வேண்டுவ தானால்

அவர வர்வழி யொழுகிநான் வந்து

செய்வ கையறி யேன்சிவ லோகா

தீவ ணாசிவ னேஎரி யாடீ

எவ்வ கைஎனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

7.060.8

 

  சிவலோகத்திற்குத் தலைவனே, நெருப்புப் போலும் நிறம் உடையவனே, சிவபெருமானே, தீயோடு நின்று ஆடுபவனே, திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, ஐவர் வேறுபட்ட தன்மையையுடைய அரசராய் என்னை ஆட்சி கொண்டு ஒருகாலும் விட்டு நீங்காதிருக்கின்றனர். அவ்வாறு ஆவர், தாம் தாம் வேறு வேறுவகையில் என்னை ஆள விரும்பினால், யான் அவர் வழியே அவர் வேண்டுமாற்றிலெல்லாம் சென்று நடந்து, செய்வது இன்னது என்று அறிகின்றிலேன்; எனக்கு உய்யும் நெறியாவது எந்நெறி? அதனை வழங்கியருளாய். 

 

 

622 ஏழை மானுட வின்பினை நோக்கி

இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்

வாழை தான்பழுக் குந்நமக் கென்று

வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்

கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்

போத மும்பொரு ளொன்றறி யாத

ஏழை யேனுக்கோர் உய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

7.060.9

 

  திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, அறிவில்லாத, மானுட இன்பத்தைக் கருதி, முன்னர்ப்பழத்தைத் தந்த வாழை, இனியும் நமக்கு அவ்வாறே தரும் என்று கருதுவாரைப் போல, இளமையுடையராய் இன்பம் தந்த மகளிர் என்றும் இவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும் மயக்கமாகிய வலையுள் அகப்பட்டு, அதனானே, வஞ்சனையையுடைய வலிய வினையென்னும் வலையிலும் அகப்பட்டு, அறிவு முதிராத பொது மக்கள் செல்லும் வழியிடத்து நின்று, அறிவின் இயல்பையும், அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின் இயல்பையும் சிறிதும் அறியாத எளியேனுக்கு, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். 

 

 

623 அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி

ஐவ னஞ்சுமந் தார்ந்திரு பாலும்

இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்

இடைம ருதுறை எந்தைபி ரானை

உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை

உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்

நரைப்பு மூப்பொடு நடலையு மின்றி

நாதன் சேவடி நண்ணுவர் தாமே.

7.060.10

 

  அரைக்கப்படுகின்ற சந்தனக் கட்டையையும், அகிற் கட்டையையும் இருமருங்கும் தள்ளிக்கொண்டு, மலை நெல்லைத் தாளோடு மேல்இட்டுக்கொண்டு, நிறைந்து ஒலிக்கின்ற காவிரியாற்றின் தென்கரைமேல் உள்ள திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனாகிய பெருமானைப் பாடிய, நம்பி யாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை, மனத்தால் விரும்பிப் பாட வல்லவர்கள், நரைத்தலும், மூத்தலும், இறத்தலும் இன்றி அவ்விறைவனது செவ்விய திருவடிகளை அடைவர்; இது திண்ணம். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.