|
||||||||
ஏழாம் திருமுறை-74 |
||||||||
7.074.திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
751 மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.
7.074.1
மின்னலை உண்டாக்குகின்ற கரிய மேகங்கள் மழையைப் பொழிந்தபின், அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற, அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது, அகன்ற கரையின்கண் பலவிடத்தும் எழுந்தருளியிருப்பவரும், திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும், வீற்றிருப்பவராகிய தலைவரும், தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும், என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது!
752 கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை யுள்ளன பற்றறுத் தானை.
7.074.2
கூடத் தக்கனவாய் உள்ள யாறுகளோடு கூடியும், அவை வேறு காணப்படாதவாறு கோத்தும், கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும், மலைநெற் கதிர்களையும் சிதறியும், இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முரித்தும், கரைகளை மலை தகர்ந்தாற் போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும், எனது பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமான, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான், பாடும் வகையை அறிகின்றிலேன்!
753
கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்
புல்கியுந் தாழ்ந்தும்போந் துதவஞ் செய்யும்
போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்
தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை.
7.074.3
கொல்லுகின்ற பெரிய யானையின் தந்தங்களையும், மணம் பொருந்திய கொழுமையான கனிகளாகிய வளவிய பயனையும் வாரிக்கொண்டு, அவற்றின் தொகுதியைப் பொருந்தி வந்து வலம் செய்தும், வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாளரும், வீட்டுநெறியாளரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைத் தொடர்ந்து வருத்திய மிக்க பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலுங் கடையேனும் ஆகிய யான் புகழுமாற்றை அறிகின்றிலேன்!
754 பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
அருவினை யுள்ளன ஆசறுத் தானை.
7.074.4
அருவிகள், பொரிந்த சந்தனக் கட்டைகளையும், அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள, பின்பு, கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும், வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு, தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன்!
755 பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
உற்றநோய் இற்றையே உறவொழித் தானை.
7.074.5
பொழியப்பட்டுப் பாய்கின்ற மும்மதங்களையுடைய யானையது தந்தங்களையும், பொன்னைப்போல மலர்கின்ற, வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் தள்ளிக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி, எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு, இவ்விடத்தில் சுழித்துக்கொண்டு பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைப்பற்றிய நோயை இன்றே முற்றும் நீக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய் போலும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன்.
756 புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.
7.074.6
புகழப்படுகின்ற சிறந்த சந்தனக் கட்டைகளையும், அகிற் கட்டைகளையும், பொன்னும் மணியுமாகிய இவைகளையும் வாரிக்கொண்டும், நல்ல மலர்களைத் தள்ளிக் கொண்டும், தன்னால் அகழப்படுகின்ற, பெரிய, அரிய கரைகள் செல்வம்படுமாறு பெருகி, முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி, கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றம் உடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான், இகழுமாற்றை நினையமாட்டேன்!
757 வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும்
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
உலகறி பழவினை அறவொழித் தானை.
7.074.7
அளவில்லாத மாம்பழங்களையும், வாழைப்பழங்களையும் வீழ்த்தியும், கிளைகளோடு சாய்த்தும், மராமரத்தை முரித்தும், கரைகள் அரிக்கப்படுகின்ற கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு, மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து, ஒளி விளங்குகின்ற முத்துக்கள் இருபக்கங்களும் தெறிக்க, விரைய ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனது, உலகறிந்த பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் துதிக்குமாற்றை அறிகின்றிலேன்!
758 ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்
புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை.
7.074.8
அணியவான ஊர்களில் உள்ளவர்களும், பெரிதாகிய நாடு முழுதும் உள்ளவர்களும், மனம் விரும்பி நினைக்குமாறு, பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து, அழகிய கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக் குடியிலும் திரிய, நீர் நிறைந்த, பெரிய, கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக்கொண்டு கவரி மானினது சிறந்த மயிரைச் சுமந்து, ஒளியையுடைய பளிங்குக் கற்களை உடைத்து, நானிலங்களில் உள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற, பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனக்கு வரும் பிறப்பில் வரக் கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே களைந் தொழித்தவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய் போலும் கடையேனும் ஆகிய யான், துய்க்குமாற்றை அறிகின்றிலேன்!
759 புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
இலங்குமா முத்தினோ டினமணி இடறி
இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.
7.074.9
வயல்கள் வளம்படவும், அதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கவும், நீர்பெருகி பொற்கட்டிகளைச் சுமந்துகொண்டு, ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும், மற்றும் பலவகை மணிகளையும் எறிந்து, இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முரித்து ஈர்த்துக் கரையைத் தாக்கி, எவ்விடத்தில் உள்ளவர்களும் ஆரவாரம் செய்து ஒலிக்க, கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனக்கு வரும்பிறப்பில் வரக்கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே நீக்கியவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன்!
760 மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி யன்றிமற் றறியான்
அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே.
7.074.10
மங்கை ஒருத்தியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தும், இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற, பகைத்தலையுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடையவனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாதவனாகியும், அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடியவனாகிய நம்பியாரூரன், கங்கை போலப் பொருந்திய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருக்துருத்தியிலும், திருவேள்விக் குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை, தங்கள் கையால் தொழுது, தங்கள் நாவிற் கொள்பவர்கள், தவநெறிக் கண் சென்று, பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
7.074.திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் பண் - காந்தாரம் திருச்சிற்றம்பலம்
751 மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை. 7.074.1
மின்னலை உண்டாக்குகின்ற கரிய மேகங்கள் மழையைப் பொழிந்தபின், அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற, அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது, அகன்ற கரையின்கண் பலவிடத்தும் எழுந்தருளியிருப்பவரும், திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும், வீற்றிருப்பவராகிய தலைவரும், தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும், என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது!
752 கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி மாடுமா கோங்கமே மருதமே பொருது மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப் பழவினை யுள்ளன பற்றறுத் தானை. 7.074.2
கூடத் தக்கனவாய் உள்ள யாறுகளோடு கூடியும், அவை வேறு காணப்படாதவாறு கோத்தும், கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும், மலைநெற் கதிர்களையும் சிதறியும், இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முரித்தும், கரைகளை மலை தகர்ந்தாற் போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும், எனது பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமான, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான், பாடும் வகையை அறிகின்றிலேன்!
753 கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப் புல்கியுந் தாழ்ந்தும்போந் துதவஞ் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத் தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை. 7.074.3
கொல்லுகின்ற பெரிய யானையின் தந்தங்களையும், மணம் பொருந்திய கொழுமையான கனிகளாகிய வளவிய பயனையும் வாரிக்கொண்டு, அவற்றின் தொகுதியைப் பொருந்தி வந்து வலம் செய்தும், வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாளரும், வீட்டுநெறியாளரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைத் தொடர்ந்து வருத்திய மிக்க பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலுங் கடையேனும் ஆகிய யான் புகழுமாற்றை அறிகின்றிலேன்!
754 பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக் கறியுமா மிளகொடு கதலியும் உந்திக் கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய் எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை அருவினை யுள்ளன ஆசறுத் தானை. 7.074.4
அருவிகள், பொரிந்த சந்தனக் கட்டைகளையும், அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள, பின்பு, கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும், வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு, தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன்!
755 பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை உற்றநோய் இற்றையே உறவொழித் தானை. 7.074.5
பொழியப்பட்டுப் பாய்கின்ற மும்மதங்களையுடைய யானையது தந்தங்களையும், பொன்னைப்போல மலர்கின்ற, வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் தள்ளிக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி, எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு, இவ்விடத்தில் சுழித்துக்கொண்டு பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைப்பற்றிய நோயை இன்றே முற்றும் நீக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய் போலும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன்.
756 புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித் திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை. 7.074.6
புகழப்படுகின்ற சிறந்த சந்தனக் கட்டைகளையும், அகிற் கட்டைகளையும், பொன்னும் மணியுமாகிய இவைகளையும் வாரிக்கொண்டும், நல்ல மலர்களைத் தள்ளிக் கொண்டும், தன்னால் அகழப்படுகின்ற, பெரிய, அரிய கரைகள் செல்வம்படுமாறு பெருகி, முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி, கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றம் உடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான், இகழுமாற்றை நினையமாட்டேன்!
757 வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும் கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய் விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை உலகறி பழவினை அறவொழித் தானை. 7.074.7
அளவில்லாத மாம்பழங்களையும், வாழைப்பழங்களையும் வீழ்த்தியும், கிளைகளோடு சாய்த்தும், மராமரத்தை முரித்தும், கரைகள் அரிக்கப்படுகின்ற கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு, மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து, ஒளி விளங்குகின்ற முத்துக்கள் இருபக்கங்களும் தெறிக்க, விரைய ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனது, உலகறிந்த பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் துதிக்குமாற்றை அறிகின்றிலேன்!
758 ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப் புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக் காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித் தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை. 7.074.8
அணியவான ஊர்களில் உள்ளவர்களும், பெரிதாகிய நாடு முழுதும் உள்ளவர்களும், மனம் விரும்பி நினைக்குமாறு, பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து, அழகிய கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக் குடியிலும் திரிய, நீர் நிறைந்த, பெரிய, கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக்கொண்டு கவரி மானினது சிறந்த மயிரைச் சுமந்து, ஒளியையுடைய பளிங்குக் கற்களை உடைத்து, நானிலங்களில் உள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற, பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனக்கு வரும் பிறப்பில் வரக் கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே களைந் தொழித்தவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய் போலும் கடையேனும் ஆகிய யான், துய்க்குமாற்றை அறிகின்றிலேன்!
759 புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப் பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப இலங்குமா முத்தினோ டினமணி இடறி இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக் கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை மேலைநோய் இம்மையே வீடுவித் தானை. 7.074.9
வயல்கள் வளம்படவும், அதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கவும், நீர்பெருகி பொற்கட்டிகளைச் சுமந்துகொண்டு, ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும், மற்றும் பலவகை மணிகளையும் எறிந்து, இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முரித்து ஈர்த்துக் கரையைத் தாக்கி, எவ்விடத்தில் உள்ளவர்களும் ஆரவாரம் செய்து ஒலிக்க, கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனக்கு வரும்பிறப்பில் வரக்கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே நீக்கியவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன்!
760 மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற அங்கையான் கழலடி யன்றிமற் றறியான் அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன் கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல் தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே. 7.074.10
மங்கை ஒருத்தியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தும், இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற, பகைத்தலையுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடையவனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாதவனாகியும், அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடியவனாகிய நம்பியாரூரன், கங்கை போலப் பொருந்திய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருக்துருத்தியிலும், திருவேள்விக் குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை, தங்கள் கையால் தொழுது, தங்கள் நாவிற் கொள்பவர்கள், தவநெறிக் கண் சென்று, பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 24 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|