|
||||||||
ஏழாம் திருமுறை-83 |
||||||||
7.083.திருவாரூர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
842 அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே. 7.083.1
முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே, என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை, அடியேன், இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு, அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
843 நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து
தென்றன் மணங்கமழுந் தென்திரு வாரூர்புக்
கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே. 7.083.2
செய்யப்பட்டு நிற்கின்ற வினைகளது கொடுமை களெல்லாம் நீங்குமாறு, காலை மாலை இருபொழுதினும், நெருங்கிய மலர்களைத் தூவி, சுற்றிலும் வலமாக வந்து எனது மனம் குளிர்தற்கு, தென்றற் காற்று நறுமணங் கமழ வருகின்ற அழகிய திருவாரூரினுட் சென்று எந்தை பிரானாரை, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
844 முன்னை முதற்பிறவி மூதறி யாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச்
செந்நெல் வயற்கழனித் தென்திரு வாரூர்புக்
கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொ லெய்துவதே. 7.083.3
தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில், பெரிய அறியாமை காரணமாக, வருங்காலத்திற் பெற நினைத்த நினைவுகளும், அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு, செந்நெற்களை விளைவிக்கின்ற, நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய, அழகிய திருவாரூரினுட் சென்று, எனது உயிருக்கு இனிய அமுதம் போல்பவனை, யான் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
845 நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆரூயிரைக்
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித் தென்திரு வாரூர்புக்
கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே. 7.083.4
நல்ல எண்ணம் நீங்குதலால், அரிய உயிர்களை அவை உடம்போடு கூடி வாழும் நாட்களிலே கொல்லுதற்கு எண்ணுகின்ற எண்ணங்களும், மற்றும் பல குற்றங்களும் அடியோடு அகன்றொழியுமாறு, உயர்ந்த நெல்விளைகின்ற வயல்களையுடைய அழகிய திருவாரூரின் எல்லையை மிதித்து, அந்நகரினுட் சென்று, எனது உயிர்க்கு இனிய அமுதம் போல்பவனாகிய இறைவனை, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
846 கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய்
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்
கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே. 7.083.5
நஞ்சு போலும் நிறத்தையுடைய மாமரத்தைக் கடலின் நடுவண் அழித்தவனாகிய முருகனுக்குத் தந்தையும், எல்லாவற்றினும் முன்னதாக, சுடப்பட்ட சாம்பலை உடம்பின்கண் பூசிய ஒளிவடிவினனும், கொல்லும் தன்மை வாய்ந்த புலியினது தோலாகிய உடையை உடுத்தவனும், உலகிற்கு முதல்வனும், வலிய தலை ஓட்டின் கண், மகளிர் இடுகின்ற பிச்சையை ஏற்பவனும் ஆகிய எம் பெருமானை, திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
847 சூழொளி நீநிலந்தீத் தாழ்வளி ஆகாசம்
வாழுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்
ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்
கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே. 7.083.6
பல உயிர்களும் வாழ்கின்ற நிலமும், தாழ வீழும் நீரும், ஒளியையுடைய தீயும், யாண்டும் இயங்கும் காற்றும், உயர்ந்துள்ள ஆகாயமும், வெவ்விய கதிர்களை யுடையோனாகி பகலவனும், வளவிய தமிழில் வல்லவர்கள் வகுத்த ஏழிசையாகிய ஏழுநரம்பின் ஓசையும் என்னும் இவை எல்லாமாய் நிற்பவனும், ஏழுலகமாகிய இவைகளைத் தன் வழிப் படுத்து ஆள்பவனும் ஆகிய எம் பெருமானை, திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
848 கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமரர்
செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்புக்
கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே. 7.083.7
இளங்கொம்புபோலும் நுண்ணிய இடையினையுடைய உமையது கூற்றினை யுடையவனும், திரு நீறாகிய நறுமணப் பூச்சினை அணிந்தவனும், எல்லா உயிர்கட்கும் சேமநிதிபோல் பவனும் தன்னோடு ஒப்புமையுடைய தேவர்கட்குச் செம்பொன்னும், நவமணியும் போல்பவனும் எனக்கு உரிய பொன்னும் மணியுமாய் இருப்பவனும் ஆகிய எம் பெருமானை, அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
849 ஆறணி நீள்முடிமேல் ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித் தென்திரு வாரூர்புக்
கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே. 7.083.8
கங்கையைத் தாங்கிய நீண்ட சடையின்மேல், பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைச் சூடுகின்றவனும் பருந்து சூழும் வெள்ளிய தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும், நஞ்சினையுடைய பாம்பை அணிபவனும் ஆகிய இடபக் கொடியைக் கொண்ட எம் பெருமானை, சேற்றைக் கொண்ட குளிர்ந்த கழனிகளையுடைய அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
850 மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்
திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே. 7.083.9
மண்ணுலகத்தை உண்டு உமிழ்ந்த திருமாலும், சிறந்த தாமரை மலர்மேல் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அணுகுதற்கரிய இறைவனை, இறைவியோடும் மறவாது நினைக்குமாறும் கண்டு கண் குளிருமாறும், திண்ணிய, பெரிய மதில் சூழ்ந்த, அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
851 மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலா கோன்ஊரன்
பன்னெடுஞ் சொன்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே. 7.083.10
மின்னல்போலும், நீண்ட சிவந்த சடையையுடைய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருவாரூரை, திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பி யாரூரன், நல்ல, நெடிய பேரன்பினால், பல, சிறந்த சொற்களாகிய மலர்களால் அணிசெய்து சாத்திய பாமாலைகள் பத்தினையும் அங்ஙனமே சாத்த வல்லவர்கள் புண்ணியம் உடையவர்களாய், பொன்னை முதற் கருவியாக உடைய விண்ணுலகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
7.083.திருவாரூர் பண் - புறநீர்மை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வன்மீகநாதர். தேவியார் - அல்லியங்கோதையம்மை.
842 அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக் கெந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே. 7.083.1
முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே, என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை, அடியேன், இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு, அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
843 நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும் துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து தென்றன் மணங்கமழுந் தென்திரு வாரூர்புக் கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே. 7.083.2
செய்யப்பட்டு நிற்கின்ற வினைகளது கொடுமை களெல்லாம் நீங்குமாறு, காலை மாலை இருபொழுதினும், நெருங்கிய மலர்களைத் தூவி, சுற்றிலும் வலமாக வந்து எனது மனம் குளிர்தற்கு, தென்றற் காற்று நறுமணங் கமழ வருகின்ற அழகிய திருவாரூரினுட் சென்று எந்தை பிரானாரை, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
844 முன்னை முதற்பிறவி மூதறி யாமையினால் பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச் செந்நெல் வயற்கழனித் தென்திரு வாரூர்புக் கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொ லெய்துவதே. 7.083.3
தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில், பெரிய அறியாமை காரணமாக, வருங்காலத்திற் பெற நினைத்த நினைவுகளும், அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு, செந்நெற்களை விளைவிக்கின்ற, நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய, அழகிய திருவாரூரினுட் சென்று, எனது உயிருக்கு இனிய அமுதம் போல்பவனை, யான் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
845 நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆரூயிரைக் கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்றொழியச் செல்வ வயற்கழனித் தென்திரு வாரூர்புக் கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே. 7.083.4
நல்ல எண்ணம் நீங்குதலால், அரிய உயிர்களை அவை உடம்போடு கூடி வாழும் நாட்களிலே கொல்லுதற்கு எண்ணுகின்ற எண்ணங்களும், மற்றும் பல குற்றங்களும் அடியோடு அகன்றொழியுமாறு, உயர்ந்த நெல்விளைகின்ற வயல்களையுடைய அழகிய திருவாரூரின் எல்லையை மிதித்து, அந்நகரினுட் சென்று, எனது உயிர்க்கு இனிய அமுதம் போல்பவனாகிய இறைவனை, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
846 கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன் சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய் அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக் கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே. 7.083.5
நஞ்சு போலும் நிறத்தையுடைய மாமரத்தைக் கடலின் நடுவண் அழித்தவனாகிய முருகனுக்குத் தந்தையும், எல்லாவற்றினும் முன்னதாக, சுடப்பட்ட சாம்பலை உடம்பின்கண் பூசிய ஒளிவடிவினனும், கொல்லும் தன்மை வாய்ந்த புலியினது தோலாகிய உடையை உடுத்தவனும், உலகிற்கு முதல்வனும், வலிய தலை ஓட்டின் கண், மகளிர் இடுகின்ற பிச்சையை ஏற்பவனும் ஆகிய எம் பெருமானை, திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
847 சூழொளி நீநிலந்தீத் தாழ்வளி ஆகாசம் வாழுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக் கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே. 7.083.6
பல உயிர்களும் வாழ்கின்ற நிலமும், தாழ வீழும் நீரும், ஒளியையுடைய தீயும், யாண்டும் இயங்கும் காற்றும், உயர்ந்துள்ள ஆகாயமும், வெவ்விய கதிர்களை யுடையோனாகி பகலவனும், வளவிய தமிழில் வல்லவர்கள் வகுத்த ஏழிசையாகிய ஏழுநரம்பின் ஓசையும் என்னும் இவை எல்லாமாய் நிற்பவனும், ஏழுலகமாகிய இவைகளைத் தன் வழிப் படுத்து ஆள்பவனும் ஆகிய எம் பெருமானை, திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
848 கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமரர் செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்புக் கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே. 7.083.7
இளங்கொம்புபோலும் நுண்ணிய இடையினையுடைய உமையது கூற்றினை யுடையவனும், திரு நீறாகிய நறுமணப் பூச்சினை அணிந்தவனும், எல்லா உயிர்கட்கும் சேமநிதிபோல் பவனும் தன்னோடு ஒப்புமையுடைய தேவர்கட்குச் செம்பொன்னும், நவமணியும் போல்பவனும் எனக்கு உரிய பொன்னும் மணியுமாய் இருப்பவனும் ஆகிய எம் பெருமானை, அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
849 ஆறணி நீள்முடிமேல் ஆடர வஞ்சூடிப் பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன் சேறணி தண்கழனித் தென்திரு வாரூர்புக் கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே. 7.083.8
கங்கையைத் தாங்கிய நீண்ட சடையின்மேல், பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைச் சூடுகின்றவனும் பருந்து சூழும் வெள்ளிய தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும், நஞ்சினையுடைய பாம்பை அணிபவனும் ஆகிய இடபக் கொடியைக் கொண்ட எம் பெருமானை, சேற்றைக் கொண்ட குளிர்ந்த கழனிகளையுடைய அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
850 மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும் திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக் கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே. 7.083.9
மண்ணுலகத்தை உண்டு உமிழ்ந்த திருமாலும், சிறந்த தாமரை மலர்மேல் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அணுகுதற்கரிய இறைவனை, இறைவியோடும் மறவாது நினைக்குமாறும் கண்டு கண் குளிருமாறும், திண்ணிய, பெரிய மதில் சூழ்ந்த, அழகிய திருவாரூரினுட் சென்று, அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!
851 மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை நன்னெடுங் காதன்மையால் நாவலா கோன்ஊரன் பன்னெடுஞ் சொன்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார் பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே. 7.083.10
மின்னல்போலும், நீண்ட சிவந்த சடையையுடைய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருவாரூரை, திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பி யாரூரன், நல்ல, நெடிய பேரன்பினால், பல, சிறந்த சொற்களாகிய மலர்களால் அணிசெய்து சாத்திய பாமாலைகள் பத்தினையும் அங்ஙனமே சாத்த வல்லவர்கள் புண்ணியம் உடையவர்களாய், பொன்னை முதற் கருவியாக உடைய விண்ணுலகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 24 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|