LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-87

 

7.087.திருப்பனையூர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சவுந்தரேசர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
882 மாட மாளிகை கோபு ரததொடு 
மண்ட பம்வள ரும்வ ளர்பொழில்
பாடல் வண்டறையும் பழ னத்திருப் பனையூர்த்
தோடு பெய்தொரு காதி னிற்குழை 
தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்
றாடு மாறுவல்லா ரவ ரேய ழகியரே.
7.087.1
உயர்ந்த மேல்மாடங்களும், சிறந்த மாளிகைகளும், கோபுரங்களும், மண்டபங்களும் நாளும் நாளும் பெருகுகின்ற, ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற, நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, ஒருகாதிற் குழை தூங்க, மறறொரு காதினில் தோட்டினை இட்டு, அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையவர். 
883 நாறு செங்கழு நீர்ம லர்
நல்ல மல்லிகை சண்ப கத்தொடு
சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூ
நீறு பூசிநெய் யாடித் தம்மை
நினைப்பவர் தம்ம னத்த ராகிநின்
றாறு சூடவல்லா ரவ ரேய ழகியரே.
7.087.2
மணம் வீசுகின்ற செங்கழுநீர் மலரையும், நல்ல மல்லிகை மலரையும், சண்பக மலரையும், சேறு செய்யப்பட்ட கழனியாகிய வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நீற்றைப் பூசி நெய்யில் மூழ்கி, தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவராய் நிற்பவரும், நீரை முடியில் தாங்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 
884 செங்கண் மேதிகள் சேடெ றிந்து
தடம்ப டிதலிற் சேலி னத்தொடு
பைங்காண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த்
திங்கள் சூடிய செல்வ னாரடி
யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில்
அங்கிருந் துறைவா ரவ ரேய ழகியரே.
7.087.3
சிவந்த கண்களையுடைய எருமைகள், வயலைச் சேறாக்கிக் குளங்களில் சென்று வீழ்தலினால், அங்குள்ள கயல்மீனின் கூட்டமும், பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்களை யுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, சந்திரனைச் சூடிய செல்வனார், தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்க்கின்றவராகிவிடுவாராயின், அத்தலத்தில் நீங்காது தங்கி வாழ்கின்ற அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.' 
885 வாளை பாய மலங்கி ளங்கயல்
வரிவ ராலுக ளுங்க ழனியுள்
பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த்
தோளும் ஆகமும் தோன்ற நட்டமிட்
டாடு வாரடித் தொண்டர் தங்களை
ஆளு மாறுவல்லா ரவ ரேய ழகியரே.
7.087.4
வாளை மீன்கள் துள்ள, மலங்கும், இளமையான கயலும், வரிகளையுடைய வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கம் எங்கும், பாளையையுடைய கமுக மரங்கள் சூழ்ந்துள்ள திருப்பனையூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற, திரண்ட தோள்களும், அகன்ற மார்பும் பொலிவுற நடனத்தை அமைத்து ஆடுபவரும், தம் அடிக்குத் தொண்டராயுள்ளாரை ஆளுமாறு வல்லவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 
886 கொங்கை யார்பல ருங்கு டைந்ந்
தாட நீர்க்குவ ளைம லர்தரப்
பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர்
மங்கை பாகமும் மாலொர் பாகமுந்
தாமுடையவர் மான்ம ழுவினொ
டங்கைத் தீயுகப்பா ரவ ரேய ழகியரே.
7.087.5
மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால், குளத்து நீரில் குவளைப் பூக்கள் மலர, அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , உமையையுடைய ஒரு பாகத்தையும், திருமாலை உடைய ஒரு பாகத்தையும் உடையவரும், அகங்கையில், 'மான், மழு, தீ' என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 
887 காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர்
தாம்ப ரவிய கருணை யங்கடற்
பாவி ரிபுலவர் பயி லுந்தி ருப்பனையூர்
மாவிரிமட நோக்கி அஞ்ச
மதக ரியுரி போர்த்து கந்தவர்
ஆவி லைந்துகப்பா ரவ ரேய ழகியரே.
7.087.6
பக்கம் எங்கும் காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய், பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, மான் தோல்வியுறுகின்ற பார்வையை யுடையவளாகிய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பொருந்திய யானை யினது தோலை விரும்பிப் போர்த்தவரும், பசுவிற் றோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையார். 
888 மரங்கள் மேல்மயி லால மண்டப
மாடமா ளிகை கோபு ரத்தின்மேல்
திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த்
துரங்கன் வாள்பிளந் தானுந் தூமலர்த்
தோன்ற லும்மறி யாமை தோன்றிநின்
றரங்கி லாடவல்லா ரவ ரேய ழகியரே.
7.087.7
மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட, மண்டபம், மாடம், மாளிகை, கோபுரம் இவைகளின்மேல், தோல் சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, குதிரை உருவங்கொண்டு வந்த, 'கேசி' என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும், தூய மலரின்கண் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று, மன்றில் நடனம் ஆட வல்லாராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 
889 மண்ணி லாமுழ வம்ம திர்தர
மாட மாளிகை கோபு ரத்தின்மேல்
பண்ணி யாழ்முரலும் பழ னத்திரு ருப்பனையூர்
வெண்ணி லாச்சடை மேவிய
விண்ண வரொடு மண்ண வர்தொழ
அண்ண லாகிநின்றா ரவ ரேய ழகியரே.
7.087.8
மாடம், மாளிகை, கோபுரம் இவைகளில், மண் பொருந்திய மத்தளம் அதிர, யாழ்கள் பண்களை இசைக்கின்ற, நல்ல வயல்கள் சூழந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்தப்பட்ட, விண்ணவரும் 
890 குரக்கி னங்குதி கொள்ளத் தேனுகக்
குண்டு தன்னயற் கெண்டை பாய்தரப்
பரக்குந் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொ டைந்தலை
தோளி ருபது தான்நெ ரிதர
அரக்கனை யடர்த்தா ரவ ரேய ழகியரே.
7.087.9
குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும்படி குரங்கின் கூட்டம் குதிக்க, அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும் படி பரந்திருக்கின்ற, குளிர்ந்த வயல்களாகிய பழனத்தையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, இரக்கமில்லாதவராய், அரக்கனாகிய இராவணன், அவனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் நொயும்படி, தமது காலால் நெருக்கியவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 
891 வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர்
மாத வர்வள ரும்வ ளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயி லுந்திருப் பனையூர்
வஞ்சி யும்வளர் நாவ லூரன்
வனப்ப கையவ ளப்பன் வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பா ரவ ரேய ழகியரே.
7.087.10
வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது பங்கை உடையவராய், பெரிய தவத்தவர்க்ள மிகுகின்ற, வளர்கின்ற சோலைகளையுடைய செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடிகளை யுடையவராகிய மகளிர், ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நொச்சியே யன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டனது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 
திருச்சிற்றம்பலம்

 

7.087.திருப்பனையூர் 

பண் - சீகாமரம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - சவுந்தரேசர். 

தேவியார் - பெரியநாயகியம்மை. 

 

 

882 மாட மாளிகை கோபு ரததொடு 

மண்ட பம்வள ரும்வ ளர்பொழில்

பாடல் வண்டறையும் பழ னத்திருப் பனையூர்த்

தோடு பெய்தொரு காதி னிற்குழை 

தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்

றாடு மாறுவல்லா ரவ ரேய ழகியரே.

7.087.1

 

  உயர்ந்த மேல்மாடங்களும், சிறந்த மாளிகைகளும், கோபுரங்களும், மண்டபங்களும் நாளும் நாளும் பெருகுகின்ற, ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற, நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, ஒருகாதிற் குழை தூங்க, மறறொரு காதினில் தோட்டினை இட்டு, அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையவர். 

 

 

883 நாறு செங்கழு நீர்ம லர்

நல்ல மல்லிகை சண்ப கத்தொடு

சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூ

நீறு பூசிநெய் யாடித் தம்மை

நினைப்பவர் தம்ம னத்த ராகிநின்

றாறு சூடவல்லா ரவ ரேய ழகியரே.

7.087.2

 

  மணம் வீசுகின்ற செங்கழுநீர் மலரையும், நல்ல மல்லிகை மலரையும், சண்பக மலரையும், சேறு செய்யப்பட்ட கழனியாகிய வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நீற்றைப் பூசி நெய்யில் மூழ்கி, தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவராய் நிற்பவரும், நீரை முடியில் தாங்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 

 

 

884 செங்கண் மேதிகள் சேடெ றிந்து

தடம்ப டிதலிற் சேலி னத்தொடு

பைங்காண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த்

திங்கள் சூடிய செல்வ னாரடி

யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில்

அங்கிருந் துறைவா ரவ ரேய ழகியரே.

7.087.3

 

  சிவந்த கண்களையுடைய எருமைகள், வயலைச் சேறாக்கிக் குளங்களில் சென்று வீழ்தலினால், அங்குள்ள கயல்மீனின் கூட்டமும், பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்களை யுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, சந்திரனைச் சூடிய செல்வனார், தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்க்கின்றவராகிவிடுவாராயின், அத்தலத்தில் நீங்காது தங்கி வாழ்கின்ற அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.' 

 

 

885 வாளை பாய மலங்கி ளங்கயல்

வரிவ ராலுக ளுங்க ழனியுள்

பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த்

தோளும் ஆகமும் தோன்ற நட்டமிட்

டாடு வாரடித் தொண்டர் தங்களை

ஆளு மாறுவல்லா ரவ ரேய ழகியரே.

7.087.4

 

  வாளை மீன்கள் துள்ள, மலங்கும், இளமையான கயலும், வரிகளையுடைய வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கம் எங்கும், பாளையையுடைய கமுக மரங்கள் சூழ்ந்துள்ள திருப்பனையூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற, திரண்ட தோள்களும், அகன்ற மார்பும் பொலிவுற நடனத்தை அமைத்து ஆடுபவரும், தம் அடிக்குத் தொண்டராயுள்ளாரை ஆளுமாறு வல்லவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 

 

 

886 கொங்கை யார்பல ருங்கு டைந்ந்

தாட நீர்க்குவ ளைம லர்தரப்

பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர்

மங்கை பாகமும் மாலொர் பாகமுந்

தாமுடையவர் மான்ம ழுவினொ

டங்கைத் தீயுகப்பா ரவ ரேய ழகியரே.

7.087.5

 

  மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால், குளத்து நீரில் குவளைப் பூக்கள் மலர, அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , உமையையுடைய ஒரு பாகத்தையும், திருமாலை உடைய ஒரு பாகத்தையும் உடையவரும், அகங்கையில், 'மான், மழு, தீ' என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 

 

 

887 காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர்

தாம்ப ரவிய கருணை யங்கடற்

பாவி ரிபுலவர் பயி லுந்தி ருப்பனையூர்

மாவிரிமட நோக்கி அஞ்ச

மதக ரியுரி போர்த்து கந்தவர்

ஆவி லைந்துகப்பா ரவ ரேய ழகியரே.

7.087.6

 

  பக்கம் எங்கும் காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய், பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, மான் தோல்வியுறுகின்ற பார்வையை யுடையவளாகிய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பொருந்திய யானை யினது தோலை விரும்பிப் போர்த்தவரும், பசுவிற் றோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையார். 

 

 

888 மரங்கள் மேல்மயி லால மண்டப

மாடமா ளிகை கோபு ரத்தின்மேல்

திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த்

துரங்கன் வாள்பிளந் தானுந் தூமலர்த்

தோன்ற லும்மறி யாமை தோன்றிநின்

றரங்கி லாடவல்லா ரவ ரேய ழகியரே.

7.087.7

 

  மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட, மண்டபம், மாடம், மாளிகை, கோபுரம் இவைகளின்மேல், தோல் சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, குதிரை உருவங்கொண்டு வந்த, 'கேசி' என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும், தூய மலரின்கண் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று, மன்றில் நடனம் ஆட வல்லாராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 

 

 

889 மண்ணி லாமுழ வம்ம திர்தர

மாட மாளிகை கோபு ரத்தின்மேல்

பண்ணி யாழ்முரலும் பழ னத்திரு ருப்பனையூர்

வெண்ணி லாச்சடை மேவிய

விண்ண வரொடு மண்ண வர்தொழ

அண்ண லாகிநின்றா ரவ ரேய ழகியரே.

7.087.8

 

  மாடம், மாளிகை, கோபுரம் இவைகளில், மண் பொருந்திய மத்தளம் அதிர, யாழ்கள் பண்களை இசைக்கின்ற, நல்ல வயல்கள் சூழந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்தப்பட்ட, விண்ணவரும் 

 

 

890 குரக்கி னங்குதி கொள்ளத் தேனுகக்

குண்டு தன்னயற் கெண்டை பாய்தரப்

பரக்குந் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர்

இரக்கம் இல்லவர் ஐந்தொ டைந்தலை

தோளி ருபது தான்நெ ரிதர

அரக்கனை யடர்த்தா ரவ ரேய ழகியரே.

7.087.9

 

  குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும்படி குரங்கின் கூட்டம் குதிக்க, அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும் படி பரந்திருக்கின்ற, குளிர்ந்த வயல்களாகிய பழனத்தையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, இரக்கமில்லாதவராய், அரக்கனாகிய இராவணன், அவனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் நொயும்படி, தமது காலால் நெருக்கியவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 

 

 

891 வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர்

மாத வர்வள ரும்வ ளர்பொழில்

பஞ்சின் மெல்லடியார் பயி லுந்திருப் பனையூர்

வஞ்சி யும்வளர் நாவ லூரன்

வனப்ப கையவ ளப்பன் வன்றொண்டன்

செஞ்சொற் கேட்டுகப்பா ரவ ரேய ழகியரே.

7.087.10

 

  வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது பங்கை உடையவராய், பெரிய தவத்தவர்க்ள மிகுகின்ற, வளர்கின்ற சோலைகளையுடைய செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடிகளை யுடையவராகிய மகளிர், ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நொச்சியே யன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டனது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.