LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-98

 

7.098.திருநன்னிலத்துப்பெருங்கோயில் 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
995 தண்ணியல் வெம்மையினான் தலை 
யிற்கடை தோறும்பலி
பண்ணியன் மென்மொழியா ரிடங் 
கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணியநான்மறையோர் முறையா 
லடிபோற் றிசைப்ப
ண்ணிய நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே.
7.098.1
புண்ணியத்தைச் செய்கின்ற, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், முறைப்படி தனது, திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி, பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தண்ணிய இயல்பினையும், வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன்; வாயில்கள்தோறும் சென்று, பண்போலும் இயல்பினையுடைய இனிய மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற 'பாண்டரங்கம்' என்னும் கூத்தினை யுடையவன். 
996 வலங்கிளர் மாதவஞ்செய் மலை 
மங்கையொர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங்கச் சடை 
யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில்தண் பனி 
வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே.
7.098.2
பயன் மிகுந்த, பசிய சோலைகள், குளிர்ந்த, வெள்ளிய சந்திரனைத் தடவுதலால் அழகு மிகுகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வெற்றி மிக்க, பெரிய தவத்தைச் செய்த மலைமகளை ஒருபாகத்தில் உடையவனாய், வெள்ளம் மிகுந்த கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றிலே தங்கும்படி தடுத்து வைத்துள்ளான். 
997 கச்சியன் இன்கருப்பூர் விருப் 
பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண்ணி உல 
கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலையான் நுரை 
தீர்புன லால்தொழுவார்
நச்சிய நன்னிலத்துப் 
பெருங் கோயில் நயந்தவனே.
7.098.3
நொச்சியின் பச்சிலையும், நுரை இல்லாத தூய நீரும் கொண்டு வழிபடுவோர் விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான். கச்சிப்பதியில் எழுந்தருளியிருப்பவன்; இனிய கரும்பின்கண் செல்லுகின்ற விருப்பம்போலும் விருப்பம் செல்லுதற்கு இடமானவன்; தன்னை நினைந்து உருகுபவரது தலைமேல் இருப்பவன்; பிச்சையேற்று உண்பவன்; உலகங்கள் எல்லாவற்றையும் உடையவன். 
998 பாடிய நான்மறையான் படு 
பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத்தான் அடி 
போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலர் 
தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே.
7.098.4
தலைமேற் குவித்த கையை உடைய பலர், மிக்க அன்புடையவர்களாய். 'திருவடி போற்றி' என்று, பொருந்திய தோதிரங்களைச் சொல்லி அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவன், தன்னால் பாடப்பட்ட நான்கு வேதங்களை யுடையவன்; இறந்த பல பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற, சிறந்த நடனத்தையுடையவன். 
999 பிலந்தரு வாயினொடு 
பெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு 
பிள வாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள்கோன் 
நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே.
7.098.5
நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் போன்ற வாயையும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்பு, மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன். 
1000 வெண்பொடி மேனியினான் கரு 
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிர 
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின் 
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே.
7.098.6
நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை உணர்ந்தவர்களாகிய அந்தணர்கள், பல மந்திரங்களையும் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கும், நட்பாம் தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வெண்பொடியைப் பூசிய மேனியை உடையவன்; நீல மணிபோலும் கரிய கண்டத்தை யுடையவன்; கங்கையாகிய பெண் பொருந்தியுள்ள சடையை உடையவன்; பிரமதேவனது தலையை, பெருமை கெட அறுத்தவன். 
1001 தொடைமலி கொன்றைதுறுஞ் சடை 
யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய்யிற் பகட் 
டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கமலம் மலர் 
மேன்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே.
7.098.7
இளமையான அன்னப் பறவைகள், நீர்மடைகளில் நிறைந்துள்ள, வளவிய தாமரை மலர்மேல் தங்கிப் பின் அப்பாற் சென்று நடத்தல் நிறைந்த திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், மாலையாக நிறைந்த கொன்றைமலர் பொருந்திய சடையை உடையவன்; ஒளிவீசுகின்ற வெள்ளிய மழுவாகிய ஆளும் படைக்கலம் நிறைந்த கையை உடையவன்; திருமேனியில் யானையினது உரித்த தோலாகிய போர்வையை உடையவன். 
1002 குளிர்தரு திங்கள்கங்கை குர 
வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமேல் உடை 
யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங்கை தட 
மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே.
7.098.8
நறுமணம் பொருந்திய, தளிர்களைத் தருகின்ற கோங்கு, வேங்கை, வளைவையுடைய குருக்கத்தி, சண்பகம் முதலிய பூமர வகைகள் பலவும் குளிர்ச்சியைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது ஒளிவீசுகின்ற, புல்லிய சடையின்மேல், குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரன், கங்கை, பாம்பு, குராமலர், கூவிள இலை முதலிய இவைகளை உடையவன்; இடபத்தை ஊர்கின்றவன்; 
1003 கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங் 
கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்தி அருச் 
சுனற்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழவில் தகு 
சைவர்த வத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே.
7.098.9
உலகத்தவர் மிக்குள்ள தண்ணிய விழாக்களையுடைய, தகுதிவாய்ந்த சைவர்களாகிய, தவத்திற் சிறந்த நம்மவர் மிக்கு வாழ்கின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், நிலப் பிளப்புக்கள் மிகுந்த கொடிய கற்சுரத்தில், கொடிய பன்றியின்பின்னே வேடுவனாய்ச் சென்று அருச்சுனனோடு போராடுதலைப் பொருந்தி, அவனுக்குத் திருவருள் செய்த தலைவனாவான். 
1004 கருவரை போல்அரக்கன் கயி 
லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லால்அடர்த்தின் னருள் 
செய்த வுமாபதிதான்
திரைபொரு பொன்னிநன்னீர்த் துறை 
வன்திகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத்துப் பெருங் 
கோயில் நயந்தவனே.
7.098.10
அலை மோதுகின்ற காவிரியாற்றினது நல்ல நீர்த்துறையை உடையவனும், சோழர்கோமகனும் ஆகிய அரசன் செய்த, திருநன்னிலத்துப் பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், அரக்கனாகிய இராவணன், கயிலாய மலையின்கீழ், கரியமலைபோலக் கிடந்து கதறும்படி ஒரு விரலால் நெருக்கிப் பின்பு அவனுக்கு அருள்புரிந்த உமை கணவனாகும். 
1005 கோடுயர் வெங்களிற்றுத் திகழ் 
கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங் 
கோயில்ந யந்தவனைச்
சேடியல் சிங்கிதந்தை சடை 
யன்திரு வாரூரன்
பாடிய பத்தும்வல்லார் புகு 
வார்பர லோகத்துளே.
7.098.11
தந்தங்கள் உயர்ந்து காணப்படுகின்ற வெவ்விய யானையின்மேல் விளங்குகின்ற கோச்செங்கட்சோழ நாயனார் செய்த, யாவரும் விரும்புகின்ற, திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அழகு பொருந்திய சிங்கடிக்குத் தந்தையும், சடையனார்க்கு மகனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள், பரலோகத்துள் புகுவார்கள். 
திருச்சிற்றம்பலம்

 

7.098.திருநன்னிலத்துப்பெருங்கோயில் 

பண் - பஞ்சமம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

995 தண்ணியல் வெம்மையினான் தலை 

யிற்கடை தோறும்பலி

பண்ணியன் மென்மொழியா ரிடங் 

கொண்டுழல் பண்டரங்கன்

புண்ணியநான்மறையோர் முறையா 

லடிபோற் றிசைப்ப

ண்ணிய நன்னிலத்துப் பெருங் 

கோயில் நயந்தவனே.

7.098.1

 

  புண்ணியத்தைச் செய்கின்ற, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், முறைப்படி தனது, திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி, பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தண்ணிய இயல்பினையும், வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன்; வாயில்கள்தோறும் சென்று, பண்போலும் இயல்பினையுடைய இனிய மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற 'பாண்டரங்கம்' என்னும் கூத்தினை யுடையவன். 

 

 

996 வலங்கிளர் மாதவஞ்செய் மலை 

மங்கையொர் பங்கினனாய்ச்

சலங்கிளர் கங்கைதங்கச் சடை 

யொன்றிடை யேதரித்தான்

பலங்கிளர் பைம்பொழில்தண் பனி 

வெண்மதி யைத்தடவ

நலங்கிளர் நன்னிலத்துப் பெருங் 

கோயில் நயந்தவனே.

7.098.2

 

  பயன் மிகுந்த, பசிய சோலைகள், குளிர்ந்த, வெள்ளிய சந்திரனைத் தடவுதலால் அழகு மிகுகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வெற்றி மிக்க, பெரிய தவத்தைச் செய்த மலைமகளை ஒருபாகத்தில் உடையவனாய், வெள்ளம் மிகுந்த கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றிலே தங்கும்படி தடுத்து வைத்துள்ளான். 

 

 

997 கச்சியன் இன்கருப்பூர் விருப் 

பன்கரு திக்கசிவார்

உச்சியன் பிச்சையுண்ணி உல 

கங்களெல் லாமுடையான்

நொச்சியம் பச்சிலையான் நுரை 

தீர்புன லால்தொழுவார்

நச்சிய நன்னிலத்துப் 

பெருங் கோயில் நயந்தவனே.

7.098.3

 

  நொச்சியின் பச்சிலையும், நுரை இல்லாத தூய நீரும் கொண்டு வழிபடுவோர் விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான். கச்சிப்பதியில் எழுந்தருளியிருப்பவன்; இனிய கரும்பின்கண் செல்லுகின்ற விருப்பம்போலும் விருப்பம் செல்லுதற்கு இடமானவன்; தன்னை நினைந்து உருகுபவரது தலைமேல் இருப்பவன்; பிச்சையேற்று உண்பவன்; உலகங்கள் எல்லாவற்றையும் உடையவன். 

 

 

998 பாடிய நான்மறையான் படு 

பல்பிணக் காடரங்கா

ஆடிய மாநடத்தான் அடி 

போற்றியென் றன்பினராய்ச்

சூடிய செங்கையினார் பலர் 

தோத்திரம் வாய்த்தசொல்லி

நாடிய நன்னிலத்துப் பெருங் 

கோயில் நயந்தவனே.

7.098.4

 

  தலைமேற் குவித்த கையை உடைய பலர், மிக்க அன்புடையவர்களாய். 'திருவடி போற்றி' என்று, பொருந்திய தோதிரங்களைச் சொல்லி அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவன், தன்னால் பாடப்பட்ட நான்கு வேதங்களை யுடையவன்; இறந்த பல பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற, சிறந்த நடனத்தையுடையவன். 

 

 

999 பிலந்தரு வாயினொடு 

பெரி தும்வலி மிக்குடைய

சலந்தரன் ஆகம்இரு 

பிள வாக்கிய சக்கரம்முன்

நிலந்தரு மாமகள்கோன் 

நெடு மாற்கருள் செய்தபிரான்

நலந்தரு நன்னிலத்துப் பெருங் 

கோயில் நயந்தவனே.

7.098.5

 

  நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் போன்ற வாயையும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்பு, மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன். 

 

 

1000 வெண்பொடி மேனியினான் கரு 

நீல மணிமிடற்றான்

பெண்படி செஞ்சடையான் பிர 

மன்சிரம் பீடழித்தான்

பண்புடை நான்மறையோர் பயின் 

றேத்திப்பல் கால்வணங்கும்

நண்புடை நன்னிலத்துப் பெருங் 

கோயில் நயந்தவனே.

7.098.6

 

  நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை உணர்ந்தவர்களாகிய அந்தணர்கள், பல மந்திரங்களையும் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கும், நட்பாம் தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வெண்பொடியைப் பூசிய மேனியை உடையவன்; நீல மணிபோலும் கரிய கண்டத்தை யுடையவன்; கங்கையாகிய பெண் பொருந்தியுள்ள சடையை உடையவன்; பிரமதேவனது தலையை, பெருமை கெட அறுத்தவன். 

 

 

1001 தொடைமலி கொன்றைதுறுஞ் சடை 

யன்சுடர் வெண்மழுவாட்

படைமலி கையன்மெய்யிற் பகட் 

டீருரிப் போர்வையினான்

மடைமலி வண்கமலம் மலர் 

மேன்மட வன்னம்மன்னி

நடைமலி நன்னிலத்துப் பெருங் 

கோயில் நயந்தவனே.

7.098.7

 

  இளமையான அன்னப் பறவைகள், நீர்மடைகளில் நிறைந்துள்ள, வளவிய தாமரை மலர்மேல் தங்கிப் பின் அப்பாற் சென்று நடத்தல் நிறைந்த திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், மாலையாக நிறைந்த கொன்றைமலர் பொருந்திய சடையை உடையவன்; ஒளிவீசுகின்ற வெள்ளிய மழுவாகிய ஆளும் படைக்கலம் நிறைந்த கையை உடையவன்; திருமேனியில் யானையினது உரித்த தோலாகிய போர்வையை உடையவன். 

 

 

1002 குளிர்தரு திங்கள்கங்கை குர 

வோடரக் கூவிளமும்

மிளிர்தரு புன்சடைமேல் உடை 

யான்விடை யான்விரைசேர்

தளிர்தரு கோங்குவேங்கை தட 

மாதவி சண்பகமும்

நளிர்தரு நன்னிலத்துப் பெருங் 

கோயில் நயந்தவனே.

7.098.8

 

  நறுமணம் பொருந்திய, தளிர்களைத் தருகின்ற கோங்கு, வேங்கை, வளைவையுடைய குருக்கத்தி, சண்பகம் முதலிய பூமர வகைகள் பலவும் குளிர்ச்சியைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது ஒளிவீசுகின்ற, புல்லிய சடையின்மேல், குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரன், கங்கை, பாம்பு, குராமலர், கூவிள இலை முதலிய இவைகளை உடையவன்; இடபத்தை ஊர்கின்றவன்; 

 

 

1003 கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங் 

கேழற்பின் கானவனாய்

அமர்பயில் வெய்தி அருச் 

சுனற்கருள் செய்தபிரான்

தமர்பயில் தண்விழவில் தகு 

சைவர்த வத்தின்மிக்க

நமர்பயில் நன்னிலத்துப் பெருங் 

கோயில் நயந்தவனே.

7.098.9

 

  உலகத்தவர் மிக்குள்ள தண்ணிய விழாக்களையுடைய, தகுதிவாய்ந்த சைவர்களாகிய, தவத்திற் சிறந்த நம்மவர் மிக்கு வாழ்கின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், நிலப் பிளப்புக்கள் மிகுந்த கொடிய கற்சுரத்தில், கொடிய பன்றியின்பின்னே வேடுவனாய்ச் சென்று அருச்சுனனோடு போராடுதலைப் பொருந்தி, அவனுக்குத் திருவருள் செய்த தலைவனாவான். 

 

 

1004 கருவரை போல்அரக்கன் கயி 

லைம்மலைக் கீழ்க்கதற

ஒருவிர லால்அடர்த்தின் னருள் 

செய்த வுமாபதிதான்

திரைபொரு பொன்னிநன்னீர்த் துறை 

வன்திகழ் செம்பியர்கோன்

நரபதி நன்னிலத்துப் பெருங் 

கோயில் நயந்தவனே.

7.098.10

 

  அலை மோதுகின்ற காவிரியாற்றினது நல்ல நீர்த்துறையை உடையவனும், சோழர்கோமகனும் ஆகிய அரசன் செய்த, திருநன்னிலத்துப் பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், அரக்கனாகிய இராவணன், கயிலாய மலையின்கீழ், கரியமலைபோலக் கிடந்து கதறும்படி ஒரு விரலால் நெருக்கிப் பின்பு அவனுக்கு அருள்புரிந்த உமை கணவனாகும். 

 

 

1005 கோடுயர் வெங்களிற்றுத் திகழ் 

கோச்செங்க ணான்செய்கோயில்

நாடிய நன்னிலத்துப் பெருங் 

கோயில்ந யந்தவனைச்

சேடியல் சிங்கிதந்தை சடை 

யன்திரு வாரூரன்

பாடிய பத்தும்வல்லார் புகு 

வார்பர லோகத்துளே.

7.098.11

 

  தந்தங்கள் உயர்ந்து காணப்படுகின்ற வெவ்விய யானையின்மேல் விளங்குகின்ற கோச்செங்கட்சோழ நாயனார் செய்த, யாவரும் விரும்புகின்ற, திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அழகு பொருந்திய சிங்கடிக்குத் தந்தையும், சடையனார்க்கு மகனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள், பரலோகத்துள் புகுவார்கள். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.