ஷமிதாப் படத்தின் ஒரு வரி கதை :
இன்றைய திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களின் வெற்றிக்கு பின்னல் ஒருவரோ அல்லது பலரின் உழைப்பு வெளிச்சத்துக்கு வராமல் புறக்கணிக்கப்படுவதை நகைச்சுவையுடன் சொல்லும் படம் தான் ஷமிதாப்...
இகாத்புரி என்னும் சிறிய கிராமத்தில் வசித்து வரும் இளைஞரான தனுஷ்(டேனிஷ்) பிறவியிலேயே வாய் பேச முடியாத ஒரு ஊமை. அவருக்கு தான், பாலிவுட்டில் ஒரு பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்பதே லட்சியம்.
தனுஷின் பாலிவுட் ஸ்டார் கனவு நிறைவேறுவதற்கு, உதவி இயக்குனரான அக்ஷரா ஹாசன் உதவி செய்கிறார். தனுஷ்க்கு டப்பிங் குரல் கொடுத்து அவரை பெரிய நடிகராக்க முயற்சி செய்யும் அக்ஷர அதற்காக தனுஷுக்கு பொருத்தமான குரல் வளம் கொண்டவரை தேடுகிறார்.
இந்நிலையில் பெரிய ஸ்டாராக வரவேண்டும் என்ற கனவு பலிக்காத கவலையில் முடாக் குடிகாரனாக மாறி ஒரு கல்லறைத் தோட்டத்தில் வசிக்கும் அமிதாப் பச்சனை(அமிதாப் சின்ஹா) சந்திக்கும் அக்ஷரா, தனுஷுக்கு குரல் கொடுக்குமாறு கேட்கிறார்... அவரும் சம்மதிக்க.. தனுஷ் பாலிவுட்டில் ஒரு பெரிய ஸ்டார் ஆகிறார். தனுஷின் வளர்ச்சி அமிதாப்பின் மனதில் பொறாமையை வளர்க்கிறது. இதனால் இருவரும் பிரிய நேர்கிறது.
இந்த சிக்கலான சூழ்நிலையை தாண்டி இருவரும் அக்ஷரா உதவியுடன் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பதுதான் ஷமிதாப் படத்தின் முழு கதை.
படத்தின் முதல் பாதி சுவாரசியமாக இருந்தாலும்... இரண்டாம் பாதி கொஞ்சம் போர் அடிக்கிறது.
அமிதாப் பச்சனும், தனுஷும் தனக்குரிய வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள். தனுஷுக்கு கண்டிப்பாக பாலிவுட்டில் ஒரு நிரந்திர இடம் இருக்கப்போகிறது என்பதை இந்த படம் பிரதிபலிக்கிறது.
அக்ஷராவுக்கு இது முதல் படம் என்றாலும், நடிப்பில் மிளிர்கிறார் ... படத்தின் மூன்றாவது ஹீரோ என்று அக்ஷரா ஹாசன் என்று சொல்லுமளவிற்கு, அவரது நடிப்பு இந்த படத்தில் அமைந்துள்ளது. பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றுமொரு பலம் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் ஷமிதாப்.. காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்....
|