மலையாள ஆக்சன் கிங் எனப் போற்றப்படும், சுரேஷ்கோபி தற்போது, ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
ஐ படத்தில் நடித்த அனுபவம் குறித்து, சுரேஷ்கோபி கூறியதாவது, படபிடிப்பு தளங்களில் இயக்குனர் ஷங்கரின் அபரிவிதமான திறமையைக்கண்டு வியந்து போனேன். இன்றைய டெக்னாலஜியோடு போட்டி போடும் ஆற்றல்தான் ஷங்கரை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது என்று கூறும் சுரேஷ்கோபி, எனது பார்வையில் அவர்தான் இந்தியாவின் ஸ்பீல்பெர்காக தெரிகிறார் என்று ஷங்கரின் திறமைகளை புகழ்ந்து பேசி வருகிறாராம்.
|