LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தனது உதவியாளரின் படத்தை வாங்கி வெளியிடும் ஷங்கர் !!

சிவாஜி, எந்திரன் போன்ற படங்களில், இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிவர் கார்த்திக் ஜி.கிரிஷ்.


இவர் தற்போது, கப்பல் என்ற படத்தை இயக்கி வருகிறார். 


இந்த படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், வி.டி.வி கணேஷ், அர்ஜுனன் ஆகியோர் நடித்துள்ளனர். 


மூடர் கூடம், ஒரு கன்னியும் மூன்று கலைவாணியும் போன்ற படங்களுக்கு இசை அமைத்த, நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். 


ஐ ஸ்டூடியோ எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் 8 நண்பர்கள் இணைந்து இதனை தயாரித்துள்ளார்கள். 


படம் முடிந்தது ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 


இதுகுறித்து கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறுகையில், 


படம் முடிந்ததும் அதனை எனது குருநாதர் ஷங்கர் சாருக்கு போட்டுக்காட்ட ஆசையாக இருந்தது,. ஆனால் அவர் ஐ படத்தில் பிசியாக இருந்ததால் முடியவில்லை. இருந்தாலும் பாட்டையாவது போட்டுக் காட்டலாம் என்று முடிவு செய்து அவரிடம் நேரம் வாங்கி போட்டுக்காட்டினேன். 


பாடல்கள் அவருக்கு பிடித்துப்போக படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்தார். உடனேயே படத்தையும் போட்டுக் காட்டினேன். 


படத்தை பார்த்த அவர் "நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன். ரியாலிட்டி காமெடியா வந்திருக்கு. படம் பிசினசாயிடுச்சா?"ன்னு கேட்டார். ஒருத்தர் வாங்க விருப்பத்தோடு இருக்கார்னு சொன்னேன். "நான் வாங்கிக்கட்டுமா?" என்றார். சந்தோஷம் தாங்க முடியவில்லை. 


எதுவுமே பேசாமல் அவர் கையில் படத்தை கொடுத்துவிட்டேன். என்றார் கிரிஷ்.


அப்புறம் என்ன ஷங்கர் சாரே சூப்பரா இருக்குனு சொல்லிட்டார்.... படத்துக்கு இனிமேல் செம ரெஸ்பான்ஸ் தான்.... 

by Swathi   on 11 Sep 2014  0 Comments
Tags: கார்த்திக் ஜி.கிரிஷ்                    
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.