தே.மு.தி.க கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளையமகனுக்கு அப்பாவைப்போல சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் அவர் உடல் அதற்கு ஏற்ற மாதிரி இல்லாமல் வெயிட்போட்டிருந்தது. அதனால் கடந்த சில ஆண்டுகளாகவே சண்முக பாண்டியன் ஜிம்மிலேயே காலத்தை கழித்து உடம்பை குறைத்தார்.
அப்பா விஜயகாந்த், அம்மா பிரேமலதா, மாமா எல்.கே.சுதீஷ் மூவரும் சண்முகபாண்டியனுக்காக கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். புதுமுக டைரக்டர்கள், முன்னணி டைரக்டர்கள் பலரும் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறுதியாக கே.பி.பி.நவீன் என்பவர் கதையை ஓகே சொல்லிவிட்டார்கள். டி.இ.சந்தோஷ்குமார் ராஜன் என்பவரை இயக்குனராக தேர்வு செய்திருக்கிறார்கள். படத்தின் பெயர் சகாப்தம். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். கேப்டன் சினி கிரியேஷனன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். வருகிற 12ந் தேதி சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் படத்தின் துவக்க விழா நடக்கிறது. காமெடி ஆக்ஷன் கலந்த லவ் ஸ்டோரி என்கிறார்கள். படத்திற்கு ஹீரோயினும், இசை அமைப்பாளர் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது.
|