இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.தாமிரபரணி நதியின்
தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவன், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். கோயிலுக்கு அருகிலேயே தாமிரபரணி ஓடுகிறது. கிழக்கு நோக்கி
அருளும் சிவனை, "அம்மநாதர்' என்றும், "அம்மையப்பர்' என்றும் அழைக்கிறார்கள். இவரது சன்னதிக்கு வலப்புறம் ஆவுடைநாயகி அருளுகிறாள்.இவளுக்கு
கோமதியம்பாள் என்றும் பெயருண்டு. இந்த அமைப்பை சிவன், அம்பாளின் திருமணக்கோலம் என்பர். இக்கோயிலை நந்தனார் தரிசித்திருக்க வேண்டும். இவரது
சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரம்
அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.பலா மரம் இத்தலத்தின் தலவிருட்சம்.இக்கோயிலை கட்டிய சகோதரிகள்
நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், முன்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இருக்கிறது. அருகில் மற்றொரு தூணில் லிங்கபூஜை செய்யும் உரோமசரைக்
காணலாம்.
இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவன், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். கோயிலுக்கு அருகிலேயே தாமிரபரணி ஓடுகிறது. கிழக்கு நோக்கி அருளும் சிவனை, "அம்மநாதர்' என்றும், "அம்மையப்பர்' என்றும் அழைக்கிறார்கள்.
இவரது சன்னதிக்கு வலப்புறம் ஆவுடைநாயகி அருளுகிறாள். இவளுக்கு கோமதியம்பாள் என்றும் பெயருண்டு. இந்த அமைப்பை சிவன், அம்பாளின் திருமணக்கோலம் என்பர். இக்கோயிலை நந்தனார் தரிசித்திருக்க வேண்டும். இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது.
கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். பலா மரம் இத்தலத்தின் தலவிருட்சம். இக்கோயிலை கட்டிய சகோதரிகள் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், முன்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இருக்கிறது. அருகில் மற்றொரு தூணில் லிங்கபூஜை செய்யும் உரோமசரைக் காணலாம். |