இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாட்களில் இவர் புறப்பாடாவார். பதஞ்சலி மகரிஷிக்கு
இங்கு தனிச்சன்னதி உள்ளது. பெருமாள் ராமாவதாரம் எடுத்தபோது, லட்சுமணராக அவதாரம் செய்தவர் பதஞ்சலியே ஆவார். இவரது நட்சத்திரம் பூசம் என்பதால்,
இந்நாளில் விசேஷ பூஜை நடக்கிறது. மார்கழி திருவாதிரையன்று நடராஜருடன் பதஞ்சலி மகரிஷியும் புறப்பாடாவார். யோக சூத்திரத்தை எழுதியவர் பதஞ்சலி
என்பதால், யோகாசன கலையில் தேற விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இக்கோயிலிலுள்ள சில தூண்களில் யோகாசன முறைகள் சிற்பமாக
வடிக்கப்பட்டுள்ளன. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை
வணங்குகின்றனர்.சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறமாக அமைந்த கோயில் இது. கோயிலுக்குள் நுழைந்ததும் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது.
இத்தீர்த்தத்தின் இடப்புறம் ராஜசண்டிகேஸ்வரர் இருக்கிறார்.
இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாட்களில் இவர் புறப்பாடாவார். பதஞ்சலி மகரிஷிக்கு இங்கு தனிச்சன்னதி உள்ளது. பெருமாள் ராமாவதாரம் எடுத்தபோது, லட்சுமணராக அவதாரம் செய்தவர் பதஞ்சலியே ஆவார். இவரது நட்சத்திரம் பூசம் என்பதால், இந்நாளில் விசேஷ பூஜை நடக்கிறது. மார்கழி திருவாதிரையன்று நடராஜருடன் பதஞ்சலி மகரிஷியும் புறப்பாடாவார்.
யோக சூத்திரத்தை எழுதியவர் பதஞ்சலி என்பதால், யோகாசன கலையில் தேற விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இக்கோயிலிலுள்ள சில தூண்களில் யோகாசன முறைகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை வணங்குகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறமாக அமைந்த கோயில் இது. கோயிலுக்குள் நுழைந்ததும் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தின் இடப்புறம் ராஜசண்டிகேஸ்வரர் இருக்கிறார். |