இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரியன் வழிபட்ட தலமாதலால் மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10
மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது. இத்தலம் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி நின்றகோலத்தில் நான்கு
கரங்களை உடைய அபயவரதத்துடன் அருள்பாலிக்கிறார். உள்ளே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜர்,
விஷ்ணு துர்க்கை, பைரவர், பலவகை விநாயகர், அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிகள் உள்ளது.சண்டேஸ்வரர் சன்னதி தனி கோயிலாக
உள்ளது. கோஷ்ட மூர்த்திகளாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன்
மேற்கொண்ட வடுக கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில், இடப்பால் பிரமன் சந்நிதிக்கு செல்லும் வாயிலில் சுவரையொட்டி கதவோரமாக சிறிய
சிலாரூபமாக உள்ளது. நவக்கிரக சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக தீபங்கள் வைக்கும் அமைப்பில் மேடை அமைத்து கட்டப்பட்டுள்ளது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரியன் வழிபட்ட தலமாதலால் மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது. இத்தலம் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி நின்றகோலத்தில் நான்கு கரங்களை உடைய அபயவரதத்துடன் அருள்பாலிக்கிறார்.
விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜர், விஷ்ணு துர்க்கை, பைரவர், பலவகை விநாயகர், அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிகள் உள்ளது. சண்டேஸ்வரர் சன்னதி தனி கோயிலாக உள்ளது. கோஷ்ட மூர்த்திகளாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.
பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுக கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில், இடப்பால் பிரமன் சந்நிதிக்கு செல்லும் வாயிலில் சுவரையொட்டி கதவோரமாக சிறிய சிலாரூபமாக உள்ளது. நவக்கிரக சந்நிதியில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக தீபங்கள் வைக்கும் அமைப்பில் மேடை அமைத்து கட்டப்பட்டுள்ளது. |