பொதுவாக பைரவர், கையில் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள "ஆனந்த பைரவர்' சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.
கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, மார்கழி தேய்பிறை அஷ்டமியில் "பைரவர் ஜென்மாஷ்டமி' விழா நடக்கிறது. சம்பகசஷ்டியின்போது ஆறு நாட்கள் ஹோமம்
நடக்கிறது.நவக்கிரக மண்டபம் உள்ளது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, நால்வர் மற்றும்
அறுபத்துமூவர் உள்ளனர். காவல் தெய்வமான முனீஸ்வரர், வட்டமான பீட வடிவில் இருக்கிறார்.சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள்,
விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோயிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில்
சண்டிகேஸ்வரருக்கு பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம். பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்திலுள்ள யோக
தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சிதருகிறார். இவரது தலையில் கிரீடம் அணிந்துள்ளது வித்தியாசமான அம்சம்.தினமும் இக்கோயிலில் காலை
பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, அதன்பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால்,
இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்
பொதுவாக பைரவர், கையில் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள "ஆனந்த பைரவர்' சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, மார்கழி தேய்பிறை அஷ்டமியில் "பைரவர் ஜென்மாஷ்டமி' விழா நடக்கிறது. சம்பகசஷ்டியின்போது ஆறு நாட்கள் ஹோமம் நடக்கிறது. நவக்கிரக மண்டபம் உள்ளது.
காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, நால்வர் மற்றும் அறுபத்துமூவர் உள்ளனர். காவல் தெய்வமான முனீஸ்வரர், வட்டமான பீட வடிவில் இருக்கிறார். சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர்.
ஆனால், இக்கோயிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் இவரது தலையில் கிரீடம் அணிந்துள்ளது வித்தியாசமான அம்சம். தினமும் இக்கோயிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, அதன்பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள். |