இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சித்திரை மற்றும் ஆடி மாத பிரதோஷ தினங்களில் கருவறைக்கு நேரே சூரியனின்
ஒளிபடுவது, சூரியபகவானே நேரடியாக வந்து அபிஷேகிப்பது போன்ற சிறப்பினைப் பெற்றுள்ளதுஇத்தலத்தில் உள்ள சிற்பங்கள் மன்னர்காலக் கட்டடக்கலைக்கு
நற்சான்று போற்றுபவையாக அமைந்துள்ளன. துர்வாச முனிவர், தான் சிவபூஜை செய்ததின் பலனாகக் கிடைத்த மலர் ஒன்றினை, இந்திரனிடம் கொடுக்க
அவனோ அம்மலரை அலட்சியமாகப் பெற்று அதனை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைத்தான். ஐராவதம் அம்மலரினை தனது தும்பிக்கையால்
எடுத்து கீழே வீசியது. சிவபூஜையினால் கிடைத்த மலரினை இந்திரனும், அவனது ஐராவதமும் அலட்சியப்படுத்தியதைக் கண்டு ஆத்திரம் அடைந்த துர்வாச
முனிவர், இந்திரன் தேவர் தலைவர் பதவியை இழப்பான் எனவும், ஐராவதம் காட்டு யானையாக வாழும் என்றும் சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் பலனை
அனுபவித்த ஐராவதம் இத்தலத்தில் பாவ விமோசனம் பெற்றதால் இங்கு வீற்றிருக்கும் சுயம்புலிங்கம் ஐராவதீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சித்திரை மற்றும் ஆடி மாத பிரதோஷ தினங்களில் கருவறைக்கு நேரே சூரியனின் ஒளிபடுவது, சூரியபகவானே நேரடியாக வந்து அபிஷேகிப்பது போன்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள சிற்பங்கள் மன்னர்காலக் கட்டடக்கலைக்கு நற்சான்று போற்றுபவையாக அமைந்துள்ளன. துர்வாச முனிவர், தான் சிவபூஜை செய்ததின் பலனாகக் கிடைத்த மலர் ஒன்றினை, இந்திரனிடம் கொடுக்க அவனோ அம்மலரை அலட்சியமாகப் பெற்று அதனை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைத்தான்.
ஐராவதம் அம்மலரினை தனது தும்பிக்கையால் எடுத்து கீழே வீசியது. சிவபூஜையினால் கிடைத்த மலரினை இந்திரனும், அவனது ஐராவதமும் அலட்சியப்படுத்தியதைக் கண்டு ஆத்திரம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தேவர் தலைவர் பதவியை இழப்பான் எனவும், ஐராவதம் காட்டு யானையாக வாழும் என்றும் சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம் இத்தலத்தில் பாவ விமோசனம் பெற்றதால் இங்கு வீற்றிருக்கும் சுயம்புலிங்கம் ஐராவதீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். |