ஐப்பசி பவுர்ணயியில் இங்கு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர்.தாமிரபரணி
நதியின் வடகரையில் இக்கோயில் உள்ளது. தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. அம்பாள் மரகதாம்பிகை, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறாள்.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இவளது சன்னதியில் தொட்டில் கட்டியும், வளையல் அணிவித்தும் வேண்டிக்கொள்கிறார்கள். இவள் சமுத்திரம் போல
அருளை வாரி வழங்குபவளாக அருளுகிறாள். எனவே இவளது பெயரால் இவ்வூருக்கு "அம்பாள் சமுத்திரம்' என்ற பெயர் உண்டானது. பிற்காலத்தில் இதுவே,
"அம்பாசமுத்திரமாக' மருவியது.பொய் சத்தியம் செய்து ஏமாற்றிய அர்ச்சகரை எரித்த சிவன், இங்கு உக்கிரமாகவே இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி பார்வதி,
பெருமாளிடம் வேண்டினாள். அவர், சிவனை சாந்தப்படுத்தினார். இந்த பெருமாள், எரித்தாண்ட மூர்த்தி சன்னதிக்கு நேரே, தனிச்சன்னதியில் இருக்கிறார்.
இத்தலத்திலுள்ள நடராஜர், புனுகு சபாபதி என்றழைக்கப்படுகிறார். வியாழக்கிழமையுடன் கூடிய தைப்பூசம் வரும் நாளில் மட்டுமே இவருக்கு விசேஷ அபிஷேக,
பூஜை செய்யப்பட்டு, சந்தனம் மற்றும் புனுகு சாத்தி வழிபடுகிறார்கள்.
ஐப்பசி பவுர்ணயியில் இங்கு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர். தாமிரபரணி நதியின் வடகரையில் இக்கோயில் உள்ளது. தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. அம்பாள் மரகதாம்பிகை, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறாள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இவளது சன்னதியில் தொட்டில் கட்டியும், வளையல் அணிவித்தும் வேண்டிக்கொள்கிறார்கள். இவள் சமுத்திரம் போல அருளை வாரி வழங்குபவளாக அருளுகிறாள்.
எனவே இவளது பெயரால் இவ்வூருக்கு "அம்பாள் சமுத்திரம்' என்ற பெயர் உண்டானது. பிற்காலத்தில் இதுவே, "அம்பாசமுத்திரமாக' மருவியது. பொய் சத்தியம் செய்து ஏமாற்றிய அர்ச்சகரை எரித்த சிவன், இங்கு உக்கிரமாகவே இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி பார்வதி, பெருமாளிடம் வேண்டினாள். அவர், சிவனை சாந்தப்படுத்தினார். இந்த பெருமாள், எரித்தாண்ட மூர்த்தி சன்னதிக்கு நேரே, தனிச்சன்னதியில் இருக்கிறார்.
இத்தலத்திலுள்ள நடராஜர், புனுகு சபாபதி என்றழைக்கப்படுகிறார். வியாழக்கிழமையுடன் கூடிய தைப்பூசம் வரும் நாளில் மட்டுமே இவருக்கு விசேஷ அபிஷேக, பூஜை செய்யப்பட்டு, சந்தனம் மற்றும் புனுகு சாத்தி வழிபடுகிறார்கள். |