கேரள மாநிலத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் மூலஸ்தானத்தில் சிவன் மட்டும் இருப்பார். அம்மன் இருக்க மாட்டார். இதனாலேயே கர்ப்பகிரகத்தை
இடமிருந்து சுற்றும் போது கோமுகி வரையிலும் சென்று, பின் அதே வழி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, பின் வலப்புறம் சென்று கோமுகியை வணங்கி
விட்டு பின் வெளி வருவார்கள். ஏனென்றால் சிவன் அம்பாளுடன் இல்லாமல் தனியாக கர்ப்பகிரகத்தில் இருக்கும் போது சிவனது சடையில் கங்கை இருப்பாள்.
அபிஷேக தீர்த்தம் எல்லாம் கங்கா தீர்த்தமாக கோமுகி வழியாக வரும். கோமுகியை தாண்டினால் கங்கையை தாண்டிய தவறு ஏற்படும். எனவே கோமுகியை
தாண்ட மாட்டார்கள். ஆனால் கோட்டயத்திற்கு அருகே பழமையான கடுத்துருத்தி மகாதேவர் கோயில் மூலஸ்தானத்தில் சிவன் அம்மனுடன் தம்பதி சமேதராக
அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.வைக்கம் கோயிலில் ஞானம் கொடுக்கும் தெட்சிணாமூர்த்தியாகவும், கடுத்துருத்தி கோயிலில் சகல
சவுபாக்கியங்களை கொடுக்கும் தம்பதிசமேதராக அனுக்கிர மூர்த்தியாகவும், ஏற்றமானூரில் வெற்றி கொடுக்கும் காட்டாளன் ரூபத்திலும் சிவன்
அருள்பாலிக்கிறார்.
கேரள மாநிலத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் மூலஸ்தானத்தில் சிவன் மட்டும் இருப்பார். அம்மன் இருக்க மாட்டார். இதனாலேயே கர்ப்பகிரகத்தை இடமிருந்து சுற்றும் போது கோமுகி வரையிலும் சென்று, பின் அதே வழி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, பின் வலப்புறம் சென்று கோமுகியை வணங்கி விட்டு பின் வெளி வருவார்கள். ஏனென்றால் சிவன் அம்பாளுடன் இல்லாமல் தனியாக கர்ப்பகிரகத்தில் இருக்கும் போது சிவனது சடையில் கங்கை இருப்பாள். அபிஷேக தீர்த்தம் எல்லாம் கங்கா தீர்த்தமாக கோமுகி வழியாக வரும்.
கோமுகியை தாண்டினால் கங்கையை தாண்டிய தவறு ஏற்படும். எனவே கோமுகியை தாண்ட மாட்டார்கள். ஆனால் கோட்டயத்திற்கு அருகே பழமையான கடுத்துருத்தி மகாதேவர் கோயில் மூலஸ்தானத்தில் சிவன் அம்மனுடன் தம்பதி சமேதராக அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வைக்கம் கோயிலில் ஞானம் கொடுக்கும் தெட்சிணாமூர்த்தியாகவும், கடுத்துருத்தி கோயிலில் சகல சவுபாக்கியங்களை கொடுக்கும் தம்பதிசமேதராக அனுக்கிர மூர்த்தியாகவும், ஏற்றமானூரில் வெற்றி கொடுக்கும் காட்டாளன் ரூபத்திலும் சிவன் அருள்பாலிக்கிறார். |