பொதுவாக எல்லாத் தலங்களிலும் காக வாகனத்தில் காட்சி தரும் சனீஸ்வரன் இங்கு கழுகு வாகனத்தில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு.பிரகாரத்தில்
தட்சிணாமூர்த்தி, துர்கை, விநாயகர், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, நவகிரக நாயகர்கள் சன்னதியோடு சனீஸ்வரர், பைரவர் ஆகியோரும் தனித்தனி
சன்னதிகளில் உள்ளனர்.இங்குள்ள அம்மன் சன்னதியும், சிவனின் சன்னதியும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. அம்மன் சிவகாமசுந்தரி
மேலிரு கரங்களில் தாமரை மலரையும், அட்சர மாலையையும் தாங்கி, கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரம்மா, சரஸ்வதியரின் மணநாளில் வந்து அவர்களுக்கு ஆசி புரிந்து பின் இங்கமர்ந்த
இத்தலத்து இறைவனும், இறைவியும் தம்பதியரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து அருள்புரிகின்றனர்.மணல்கால் நம்பி வாழ்ந்த ஊர் என்பதால் இவ்வூருக்கும்
மணல்கால் என்ற பெயர் பெறும் பாக்கியம் கிட்டியது.
பொதுவாக எல்லாத் தலங்களிலும் காக வாகனத்தில் காட்சி தரும் சனீஸ்வரன் இங்கு கழுகு வாகனத்தில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு. பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, துர்கை, விநாயகர், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, நவகிரக நாயகர்கள் சன்னதியோடு சனீஸ்வரர், பைரவர் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இங்குள்ள அம்மன் சன்னதியும், சிவனின் சன்னதியும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு.
அம்மன் சிவகாமசுந்தரி மேலிரு கரங்களில் தாமரை மலரையும், அட்சர மாலையையும் தாங்கி, கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரம்மா, சரஸ்வதியரின் மணநாளில் வந்து அவர்களுக்கு ஆசி புரிந்து பின் இங்கமர்ந்த இத்தலத்து இறைவனும், இறைவியும் தம்பதியரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து அருள்புரிகின்றனர். மணல்கால் நம்பி வாழ்ந்த ஊர் என்பதால் இவ்வூருக்கும் மணல்கால் என்ற பெயர் பெறும் பாக்கியம் கிட்டியது. |