இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தட்சிணாயண புண்ணிய காலத்திலும், உத்ராயண புண்ணிய காலத்திலும் சூரியன் , சுயம்புத் திருமேனியின்
மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது சிறப்பு. கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக
அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.நவக்கிரக தலங்களில் சூரியனின் ஸ்தலமான இங்கு சூரியபகவான் தனிச்சன்னதியில் அமைந்திருந்து ஆட்சி செய்கிறார்.
தட்சிணாயணபுண்ணிய காலத்திலும், உத்ராயணபுண்ணிய காலத்திலும் அவர், சுயம்பு சுவாமியின் புண்ணிய திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி
அவரை அர்ச்சிப்பது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது. பிரம்மனின் பேரனுக்கு தோஷம் நீக்கிய சிவன் வீற்றிருக்கும் தலம் அமைந்த ஊர் என்பதால்
இவ்வூர் "பிரம்மதோஷம்' என்று அழைக்கப்பட்டு பின்னர் பிரம்மதேசம் ஆனது. "அயனீஸ்வரம்' என்றும், பிற்காலத்தில் நான்மறை ஓதிய அந்தணர்களுக்கு
இவ்வூரை ராஜராஜசோழமன்னர் தானமாக வழங்கியதால் "ராஜராஜசதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்படுகிறது. பிரமாண்டமான கோபுரம் கொண்டு சிறப்புற
திகழும் இத்தலத்தில் ராஜகோபுரம், மத்தியகோபுரம், மேலகோபுரம் என முக்கோபுரங்களுடன் ஆறு விமானங்களும் அமைந்துள்ளன.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தட்சிணாயண புண்ணிய காலத்திலும், உத்ராயண புண்ணிய காலத்திலும் சூரியன் சுயம்புத் திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது சிறப்பு. கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. நவக்கிரக தலங்களில் சூரியனின் ஸ்தலமான இங்கு சூரியபகவான் தனிச்சன்னதியில் அமைந்திருந்து ஆட்சி செய்கிறார்.
தட்சிணாயணபுண்ணிய காலத்திலும், உத்ராயணபுண்ணிய காலத்திலும் அவர், சுயம்பு சுவாமியின் புண்ணிய திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது. பிரம்மனின் பேரனுக்கு தோஷம் நீக்கிய சிவன் வீற்றிருக்கும் தலம் அமைந்த ஊர் என்பதால் இவ்வூர் "பிரம்மதோஷம்' என்று அழைக்கப்பட்டு பின்னர் பிரம்மதேசம் ஆனது.
"அயனீஸ்வரம்' என்றும், பிற்காலத்தில் நான்மறை ஓதிய அந்தணர்களுக்கு இவ்வூரை ராஜராஜசோழமன்னர் தானமாக வழங்கியதால் "ராஜராஜசதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்படுகிறது. பிரமாண்டமான கோபுரம் கொண்டு சிறப்புற திகழும் இத்தலத்தில் ராஜகோபுரம், மத்தியகோபுரம், மேலகோபுரம் என முக்கோபுரங்களுடன் ஆறு விமானங்களும் அமைந்துள்ளன. |