ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை "இரட்யைப்பன் கோயில்' என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில்
இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம்
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து
சென்றார். திரும்ப வந்து லிங்கத்தை எடுத்த போது லிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி லிங்கத்தை பூஜித்து வந்தார்.
இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும்.
பூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் "பூரு வனம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் "பெருவனம்' ஆனது
ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை "இரட்யைப்பன் கோயில்' என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து சென்றார். திரும்ப வந்து லிங்கத்தை எடுத்த போது லிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி லிங்கத்தை பூஜித்து வந்தார்.
இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும்.பூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் "பூரு வனம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் "பெருவனம்' ஆனது. |