நாம் ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் ஏற்பட்டால், சிவபூஜையில் கரடி புகுந்ததைப் போல என்று சொல்வோம். ஆனால், சிவபூஜையில்
காளை புகுந்து பக்தர்களை ஆசிர்வதிப்பதை, இக் கோயிலில் காணலாம். சிவபெருமானின் ஜடாமுடி பரந்து கிடக்கிறது என்பதாலும், சுவாமிக்கு செய்யும்
அபிஷேக புனித நீரை தாண்டி செல்லக்கூடாது என்பதாலும் சந்நிதியை சுற்றி வரும் வழக்கம் இங்கு இல்லை.ஒன்பது கண்களுடன் உள்ள பெரிய குத்து
விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனை நந்தா தீபம் என்கின்றனர். இந்த தீபம் 365 நாட்களும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். இந்த தீபத்தில்
பக்தர்கள் எண்ணெய் ஊற்றுகின்றனர். இதனால் கிரக தோஷம் விலகும். இரவு எட்டு மணியளவில் ரெங்காபூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பங்கேற்கும்
பக்தர்கள் கோயிலில் தீபங்களை வரிசையாக ஏற்றுகின்றனர். இங்குள்ள நாகப்புற்றுக்கு பால் அபிஷேகம் செய்வதால், குறைவில்லா செல்வம்
கிடைப்பதாக நம்புகின்றனர்.
நாம் ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் ஏற்பட்டால், சிவபூஜையில் கரடி புகுந்ததைப் போல என்று சொல்வோம். ஆனால், சிவபூஜையில் காளை புகுந்து பக்தர்களை ஆசிர்வதிப்பதை, இக் கோயிலில் காணலாம். சிவபெருமானின் ஜடாமுடி பரந்து கிடக்கிறது என்பதாலும், சுவாமிக்கு செய்யும் அபிஷேக புனித நீரை தாண்டி செல்லக்கூடாது என்பதாலும் சந்நிதியை சுற்றி வரும் வழக்கம் இங்கு இல்லை.
ஒன்பது கண்களுடன் உள்ள பெரிய குத்து விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனை நந்தா தீபம் என்கின்றனர். இந்த தீபம் 365 நாட்களும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். இந்த தீபத்தில் பக்தர்கள் எண்ணெய் ஊற்றுகின்றனர். இதனால் கிரக தோஷம் விலகும். இரவு எட்டு மணியளவில் ரெங்காபூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள் கோயிலில் தீபங்களை வரிசையாக ஏற்றுகின்றனர். இங்குள்ள நாகப்புற்றுக்கு பால் அபிஷேகம் செய்வதால், குறைவில்லா செல்வம் கிடைப்பதாக நம்புகின்றனர். |