பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன், பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமே "பீமேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது.திருமணிமுத்தாறு சேலத்தில் உருவாகி
பரமத்திவேலூர் நஞ்சை இடையாறு கிராமத்தில் காவிரியோடு சேர்கிறது. இந்த ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்),
வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால்
பூஜிக்கப்பட்டவை.இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.பஞ்ச காலத்தில்
பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை. இங்கு சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சனீஸ்வரர்,
பிரம்மா, நவக்கிரக சந்நிதிகள் தனித்தனியே உண்டு.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன், பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமே "பீமேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது. திருமணிமுத்தாறு சேலத்தில் உருவாகி பரமத்திவேலூர் நஞ்சை இடையாறு கிராமத்தில் காவிரியோடு சேர்கிறது. இந்த ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர், கரபுரநாதர், வீரட்டீஸ்வரர், பீமேஸ்வரர், திருவேணீஸ்வரர் ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை.
இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை. இங்கு சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சனீஸ்வரர், பிரம்மா, நவக்கிரக சந்நிதிகள் தனித்தனியே உண்டு. |