இங்கு சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவதும், திருமணக் கோலத்தில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருவதும்
சிறப்பு.பார்வதிதேவியால் உருவாகி, அவளது வேண்டுதலுக்கு இணங்க இடப் பக்கத்தை வழங்கியதால், இந்தத் தலத்தின் ஈசனுக்கு பார்வதீஸ்வரர் என்றும்,
அம்பாள் தவக்கோல நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். உக்கிர கோலம் கொண்டு, பிறகு சாந்தம் அடைந்ததால், சாந்த நாயகி என்றும் போற்றுவர். மேலும்
இவளுக்கு லலிதாம்பிகை என்ற ஒரு பெயரும் உண்டு. பெருமாளும் ஸ்ரீ ஆதிகேசவம் எனும் திருநாமத்துடன் தலத்தின் மேற்கில் தனிச் சந்நிதி
கொண்டுள்ளார்.குலோத்துங்க சோழனுக்கு நீண்ட காலமாக பிள்ளைச் செல்வம் இல்லையாம். இந்தத் தலத்து அம்பிகையின் அருளால் குழந்தை வரம் கிடைக்க,
அம்மனுக்கு கொலுசு அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றினானாம் மன்னன். இன்றும் கால்களில் கொலுசுகளுடன் விசேஷ தரிசனம் தருகிறாள் அம்பிகை.
இங்கு சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவதும், திருமணக் கோலத்தில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருவதும் சிறப்பு.பார்வதிதேவியால் உருவாகி, அவளது வேண்டுதலுக்கு இணங்க இடப் பக்கத்தை வழங்கியதால், இந்தத் தலத்தின் ஈசனுக்கு பார்வதீஸ்வரர் என்றும், அம்பாள் தவக்கோல நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். உக்கிர கோலம் கொண்டு, பிறகு சாந்தம் அடைந்ததால், சாந்த நாயகி என்றும் போற்றுவர்.
மேலும் இவளுக்கு லலிதாம்பிகை என்ற ஒரு பெயரும் உண்டு. பெருமாளும் ஸ்ரீ ஆதிகேசவம் எனும் திருநாமத்துடன் தலத்தின் மேற்கில் தனிச் சந்நிதி கொண்டுள்ளார். குலோத்துங்க சோழனுக்கு நீண்ட காலமாக பிள்ளைச் செல்வம் இல்லையாம். இந்தத் தலத்து அம்பிகையின் அருளால் குழந்தை வரம் கிடைக்க, அம்மனுக்கு கொலுசு அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றினானாம் மன்னன். இன்றும் கால்களில் கொலுசுகளுடன் விசேஷ தரிசனம் தருகிறாள் அம்பிகை. |