நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். தென்னிந்திய
ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்பகிரகம் இங்கு இல்லை. சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திசிலை அமைந்துள்ளது. தமிழக
கோயில்களில் உலோகத்தால் ஆன நந்தி சிலையைக் காண்பது அரிது. இந்த சிவபெருமானுக்கு தமிழர்கள் தான் பூஜை செய்கின்றனர் என்பது மற்றொரு
சிறப்புபசுபதிநாதர் கோயிலின் அருகில் அமைந்துள்ளது புத்தநீல கண்ட ஆலயம். இங்கு திருமால் பாம்பு படுக்கையில் சங்கு சக்ரதாரியாக, சயனநிலையில்
புத்தநீல கண்ட் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார், படுக்கையின் கீழே ஒரு தடாகம் நீர்வற்றாத நிலையில் உள்ளது. பூஜை செய்து தர பண்டாக்கள்
உள்ளனர். சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நான்கு கதவுகள் கொண்ட நுழைவாயில் உள்ளது. ஒவ்வொன்றின் அருகிலும் பூஜை செய்யும்
பண்டாக்கள் உள்ளனர்.
நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். தென்னிந்திய ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்பகிரகம் இங்கு இல்லை. சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திசிலை அமைந்துள்ளது. தமிழக கோயில்களில் உலோகத்தால் ஆன நந்தி சிலையைக் காண்பது அரிது.
இந்த சிவபெருமானுக்கு தமிழர்கள் தான் பூஜை செய்கின்றனர் என்பது மற்றொரு சிறப்புபசுபதிநாதர் கோயிலின் அருகில் அமைந்துள்ளது புத்தநீல கண்ட ஆலயம். இங்கு திருமால் பாம்பு படுக்கையில் சங்கு சக்ரதாரியாக, சயனநிலையில் புத்தநீல கண்ட் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார், படுக்கையின் கீழே ஒரு தடாகம் நீர்வற்றாத நிலையில் உள்ளது.
பூஜை செய்து தர பண்டாக்கள் உள்ளனர். சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நான்கு கதவுகள் கொண்ட நுழைவாயில் உள்ளது. ஒவ்வொன்றின் அருகிலும் பூஜை செய்யும் பண்டாக்கள் உள்ளனர். |