இந்தக் கோயிலை திறக்கும்போது, ஒரு வித்தியாசமான வழக்கம் பின்பற்றப்படுகிறது. கோயில் திறக்கும் முன் கோயில் மணி அடிக்கப்படும்.
அதன்பிறகே சிறிது நேரத்திற்கு நடை திறப்பர் என்பது தலத்தின் சிறப்பு.தைப்பூசத்தன்று சத்தியவாகீஸ்வரர் மற்றும் கோமதிக்கு கரமனை
ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது. பின் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. அப்போது, பக்தர்கள் நெற்பறை எனப்படும் காணிக்கை
அளிக்கின்றனர். நெல் அல்லது அரிசியை பத்து படி (15 கிலோ) அளிப்பது வழக்கம். இந்த அரிசியை வாங்க கோயிலிலேயே செம்பால் ஆன பறை
என்னும் பாத்திரம் வைத்துள்ளனர். இந்த அரிசி அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. சுவாமிக்கு காணிக்கை செலுத்துவதன் மூலம்
விளைநிலங்களில் விளைச்சல் அதிகரிப்பதாக நம்பிக்கையுள்ளது.கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க தைப்பூசநாளில் இங்குள்ள நந்திக்கு வெள்ளை
மாகாப்பு சாத்தப்படுகிறது. வெப்ப நோய் நீங்க சுவாமிக்கு ஜலதாரை வழிபாடு செய்கின்றனர். லிங்கத்தின் மேல் தாரா பாத்திரம் கட்டப்பட்டு அதில்
புனித நீர் நிரப்பப்பட்டு சொட்டு சொட்டாக சுவாமி மீது விழும் வழிபாடே ஜலதாரையாகும்.
இந்தக் கோயிலை திறக்கும்போது, ஒரு வித்தியாசமான வழக்கம் பின்பற்றப்படுகிறது. கோயில் திறக்கும் முன் கோயில் மணி அடிக்கப்படும். அதன்பிறகே சிறிது நேரத்திற்கு நடை திறப்பர் என்பது தலத்தின் சிறப்பு. தைப்பூசத்தன்று சத்தியவாகீஸ்வரர் மற்றும் கோமதிக்கு கரமனை ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது. பின் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. அப்போது, பக்தர்கள் நெற்பறை எனப்படும் காணிக்கை அளிக்கின்றனர்.
நெல் அல்லது அரிசியை பத்து படி அளிப்பது வழக்கம். இந்த அரிசியை வாங்க கோயிலிலேயே செம்பால் ஆன பறை என்னும் பாத்திரம் வைத்துள்ளனர். இந்த அரிசி அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. சுவாமிக்கு காணிக்கை செலுத்துவதன் மூலம் விளைநிலங்களில் விளைச்சல் அதிகரிப்பதாக நம்பிக்கையுள்ளது. கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்க தைப்பூசநாளில் இங்குள்ள நந்திக்கு வெள்ளை மாகாப்பு சாத்தப்படுகிறது.
வெப்ப நோய் நீங்க சுவாமிக்கு ஜலதாரை வழிபாடு செய்கின்றனர். லிங்கத்தின் மேல் தாரா பாத்திரம் கட்டப்பட்டு அதில் புனித நீர் நிரப்பப்பட்டு சொட்டு சொட்டாக சுவாமி மீது விழும் வழிபாடே ஜலதாரையாகும். |