சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம்
முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர
சக்திகளெல்லாம், சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அது ஓர் இலுப்பை மரம்.இக்கோயிலின் தல விருட்சமும் இதுதான்.
இலுப்பை மரத்திலிருந்து உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. பின்னர், இங்கு
ஒரு இலுப்பை மரக் கட்டையே உருவாக்கினார். தினம் தினம் மாமுனி அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்ப எண்ணெயால் கோடி அகல் தீபங்கள் ஏற்றி
ஸ்ரீ சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியாவேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம்.
மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியன் இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றாராம். இந்த புராண வரலாறு
நடைபெற்ற தலம், கீழச் சூரிய மூலை. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சூரிய கோடீஸ்வரர். இறைவி பவளக்கொடியம்மன். இறைவனின் சன்னதி கிழக்கு
நோக்கியும், அம்மனின் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.
சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம், சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அது ஓர் இலுப்பை மரம்.இக்கோயிலின் தல விருட்சமும் இதுதான்.
இலுப்பை மரத்திலிருந்து உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. பின்னர், இங்கு ஒரு இலுப்பை மரக் கட்டையே உருவாக்கினார். தினம் தினம் மாமுனி அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்ப எண்ணெயால் கோடி அகல் தீபங்கள் ஏற்றி ஸ்ரீ சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியாவேளையில் இந்த வழிபாடு நடந்தது.
அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம். மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியன் இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றாராம். இந்த புராண வரலாறு நடைபெற்ற தலம், கீழச் சூரிய மூலை. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சூரிய கோடீஸ்வரர். இறைவி பவளக்கொடியம்மன். இறைவனின் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. |