அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்திருப்பதும், அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவதும் சிறப்பாகும். மூலவரின்
கோஷ்டத்தில் நர்த்தனகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை அருள்கின்றனர். பிராகாரம் வலம் வருகையில் ஸ்ரீதேவி, பூதேவி
சமேத வரதராஜப் பெருமாள், வள்ளி-தெய்வானை சமேத முருகன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் தரிசனம் தருகிறார்கள்.கோயில் நுழைவு வாயிலின்
முகப்பில் ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் சுவாமியும் அம்பாளும்; அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகனும் காட்சி தருகின்றனர்.
முன்மண்டபத்தில் பலிபீடம், நந்திகேஸ்வரரும், அர்த்த மண்டபத்தின் இருபுறமும் விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் உள்ளனர். அர்த்த மண்டபத்தில்
ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் - சிவகாமி அம்மையாரின் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன. அதையடுத்து கருங்கல்லாலான
கருவறையின் உள்ளே மூலவர் விஜயநாதகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் இறைவி விஜயநாயகி அம்மன் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி
தரிசனம் அளிக்கிறாள். அவளுக்கு முன்பாக பலிபீடமும் சிம்மவாகனமும் உள்ளன. கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி அருள்கின்றனர். அக்னி
மூலையில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது. அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவது தனிச் சிறப்பாகும். ஈசான்ய மூலையில்
கால பைரவருக்கும் தனிச் சன்னதி உள்ளது
அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்திருப்பதும், அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவதும் சிறப்பாகும். மூலவரின் கோஷ்டத்தில் நர்த்தனகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை அருள்கின்றனர். பிராகாரம் வலம் வருகையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் தரிசனம் தருகிறார்கள்.
கோயில் நுழைவு வாயிலின் முகப்பில் ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் சுவாமியும் அம்பாளும், அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகனும் காட்சி தருகின்றனர். முன்மண்டபத்தில் பலிபீடம், நந்திகேஸ்வரரும், அர்த்த மண்டபத்தின் இருபுறமும் விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி, சிவகாமி அம்மையாரின் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன.
அதையடுத்து கருங்கல்லாலான கருவறையின் உள்ளே மூலவர் விஜயநாதகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் இறைவி விஜயநாயகி அம்மன் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறாள். அவளுக்கு முன்பாக பலிபீடமும் சிம்மவாகனமும் உள்ளன. கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி அருள்கின்றனர். அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது. |