கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தியாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன்
உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது.பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். தினசரி பூஜையின்போது சாதம்
நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.மாம்பால் நைவேத்யம்: வைகாசி விசாகத் தன்று சாஸ்தா மற்றும் யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும். அப்போது
மாம்பழம், பலாப்பழம், பச்சரிசி மாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து சாறு தயாரிக்கப்படும். "மாம்பால்' எனப்படும் இந்த கலவையை சுவாமிக்கு
படைத்து வழிபடுகிறார்கள்.பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம், அவரது சிலையும் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று மட்டும் இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால், "புற்றேரி' எனப்பட்ட
இவ்வூர் "புத்தேரி' என மருவியது.
கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தியாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது. பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். தினசரி பூஜையின்போது சாதம் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.மாம்பால் நைவேத்யம், காசி விசாகத் தன்று சாஸ்தா மற்றும் யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
அப்போது மாம்பழம், பலாப்பழம், பச்சரிசி மாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து சாறு தயாரிக்கப்படும். "மாம்பால்' எனப்படும் இந்த கலவையை சுவாமிக்கு படைத்து வழிபடுகிறார்கள். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம், அவரது சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று மட்டும் இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால், "புற்றேரி' எனப்பட்ட இவ்வூர் "புத்தேரி' என மருவியது. |