நாய்கள் ஜாக்கிரதை படத்தை தொடர்ந்து நடிகர் சிபிராஜ், தரணிதரன் இயக்கத்தில், ஜாக்சன் துரை என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை, ஸ்ரீ க்ரீன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, விபின் சித்தார்த் இசை அமைக்கிறார். சிபிராஜ்க்கு ஜோடி யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சத்யராஜ் மற்றும் கருணாகரன் நடிக்கின்றனர். 100 வருடமாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமத்தை காப்பாற்ற ஒரு போலிஸ் அதிகாரி அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதை. யார் அந்த பேய், முடிவு என்ன என்பதை திகில் கலந்த காமெடியாக எடுக்க உள்ளனர்.
விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு துவங்க உள்ளது
|