LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்

சித்த மருத்துவ மறுமலர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் -01 : அறிமுகம்

 

சித்த மருத்துவர் அருள் அமுதன், BSMS,MD(siddha),MSc.(Medical Pharmacology),MSc(Yoga and Naturopathy)
உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education

சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(siddha), MSc.(Medical Pharmacology), MSc(Yoga and Naturopathy)

உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education

 

 

“மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்” – திருக்குறள் 457

இந்த குறளின்படி, மன நலம் நல்ல நிலையில் பேணப்பட்டால், உயிர்கள் ஆக்கமாக இருக்கும். அதுபோல, ஒரு இனத்தின் நலம் நல்ல நிலையில் பேணப்பட்டால், அவ்வினத்துக்கு எல்லா புகழும் கிடைத்து, உலகின் உயர்ந்த இனமாக கருதப்படும். இந்த ஆழமான சிந்தனையில் அடிப்படையில் தான் மனித இனம் தன்னுடைய நலத்தை பேணுவதற்காக, அக்காலத்தின் அறிவியல் அறிஞர்கள் நமக்கு அளித்த கொடைதான் சித்த மருத்துவம். இந்தியாவில், அதிலும் தமிழ் இனத்தில் அறிவியல் அறிஞர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்மவர்களே இன்று அதை நம்பும் நிலையில் இல்லாத அளவுக்கு நாம் நமது பாரம்பரியத்தை தொலைத்திருக்கிறோம். சித்தர் பெருமக்களை தான் நான் அறிவியல் அறிஞர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன்.

"கடவுள் தன்மையை (கடவுளை) அடைய முயற்சிப்பவன் பக்தன்

கடவுள் தன்மையை (கடவுளை) அடைந்து விட்டவன் சித்தன்"
 

சித்தர்கள் என்போர்கள் அறிவில் உயர்ந்தவர்கள், சிறந்த முற்போக்கு சிந்தனை வாதிகள், சமுதாயத்துக்கு தேவையான பல விடயங்களை உருவாக்கியவர்கள். படைக்கும் திறன் படைத்தவரே கடவுள், என்பது போல அறிவியல் நுட்பங்களை படைக்கும் திறத்தை சித்தர்கள் பெற்றிருந்தனர்.  அவர்கள் உருவாக்கிய ஆயக்கலைகள் அறுபத்தி நான்கில், பாரம்பரிய சித்த வைத்தியம் இன்னமும் அழிந்து போகாமல், மக்களோடு மக்களாக, மக்களுக்காக, பயன்பாட்டில் இருக்கும் ஒன்றாகும். பாரம்பரிய மருத்துவத் துறையில், தமிழர்கள்  நிச்சயமாக முன்னோடிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். சித்த மருத்துவம் என்பது தமிழர்  அறிவியலின்  உச்ச கட்டம் என்றால் அது மிகையில்லை. தமிழ் பரம்பரை இன்றுவரை வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறது என்றால், அதிலிருந்து சித்த மருத்துவத்தின் பங்களிப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

பல்லாயிரம் ஆண்டுகளிக்கு முன்பே தமிழ் மண்ணில் பகுத்தறிவு சிந்தனை ஓங்கி இருந்தது. அவனவன் முன் ஜென்ம பாவத்தால் தான் நோய்கள் தோன்றுகின்றன, அதை அனுபவிக்கத்தான் பிறவி எடுக்கிறான், அதை தீர்க்க முடியாது என்றும் நம்பி கொண்டிருந்த காலத்திலே, சில விஞ்ஞானிகள் அறிவை பயன்படுத்தி, நோய்களை தீர்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்தனர். அந்த விஞ்ஞானிகள் சித்தர்கள் எனவும், அறிவுப் பூர்வமான மருத்துவத்தை படைத்ததால், அது சித்த மருத்துவம் எனவும் அழைக்கபட்டது. சித்தம் என்றால் தெளிந்த அறிவு பூர்வமான என்று பொருள், நாம் கூட சிலர் அறிவு பூர்வமான கேள்விகள் கேட்டவுடன் அவர்களுடன் சித்தாந்தம் பேசுகிறான் என்று கூறுவது வழக்கம். 

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழ் குடிகள் வாளோடும் வேலோடும் புறப்பட்டு உலகெங்கும் வணிகம் முலம் கோலோச்சி விளங்கினர். பல நாடுகளை ஆண்டும் வந்தனர். இன்றும் தமிழ் குடிகளே (Tamil Diaspora) உலகெங்கும் பரந்து விரிந்த பெருங்குடிகள். தனது பாரமரிய கலை, இலக்கியம், சினிமா, கடவுளர்கள், உணவு எல்லாவற்றையும் எடுத்து சென்ற தமிழன் தனது அறிவியலின் உச்சமான சித்த மருத்துவத்தை சுமந்து செல்ல மறந்து விட்டான். அதன் விளைவு, தமிழன்னையின் அறிவியல் முகம் (scientific domain of Tamil culture) புதைந்து கிடக்கிறது. சித்த வைத்தியத்தை உலகளவில் மனித குலத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றால், கண்டிப்பாக தமிழனின் அறிவு மெச்சப்படும். தமிழ் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உலக மக்களால்  உணரப்பதுவதற்கு சித்த மருத்துவத்தை உலகளாவ செய்வது ஒன்றே வழியாகும்.    

கடந்த சில ஆண்டுகளாகத்தான் அமெரிக்காவில் “தமிழ் பேசும் மேடைகளிலெல்லாம், சித்தமருத்துவமும் பேசுவோம், அது நம் மரபு மருத்துவம், மருத்துவ அறிவியல்” என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது தமிழக சித்த மருத்துவர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் விடயமாகும்.

இந்தியாவில் 1652 மொழிகள் பேசப்பட்டாலும், 150 மொழிகள் அதிக மக்கள் பேசப்படும் மொழியாக சொல்லப்படுகிறது. அவற்றில்  22  மொழிகள் அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக இருந்தாலும், அதில் தமிழ் என்ற ஒரு மொழிக்குதான் மருத்துவ அறிவியல் சித்தர் பாடல்களுடன் இருக்கிறது என்பதும், அதையொட்டி ஆயுர்வேதம் உருவாகியுள்ளது என்பதும் நாம் பெருமைப்படவேண்டிய ஒன்றாகும். இந்தியாவின் மருத்துவங்களாக ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் தூக்கிக் கொண்டாடவேண்டிய மரபு மருத்துவம் சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேதமாகும். 

முதல் மனிதன் தோன்றிய உடனேயே, நோயும் மருத்துவமும் தோன்றியது என்பது ஏற்றுகொள்ள வேண்டிய எதார்த்தம் ஆகும். நச்சு பூச்சிகள் கடித்தல், வேட்டையாடிய காயங்கள், அடிபடுத்தல், இனக்குழுக்களுக்குள் மோதல்கள் போன்ற அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்த அந்த வைத்திய முறைதான் பிற்காலத்தில், தமிழனின் மரபு வைத்திய முறையான சித்த மருத்துமாகியது. புதிய உணவுகளை உண்ண முயற்சித்த போதும், நச்சு கடிகளால் ஏற்படும் அசவுரியங்களை சரி செய்ய ஆரம்பித்த தேடல்தான், பின்பு சித்த மருத்துவத்தில், நஞ்சு முறிவு என்ற துறை உருவாகியது. போர்கள், இனக்குழுக்களுக்குள் சண்டைகள், சிலம்பம் போன்ற  விளையாட்டுகளில் அடிபடுதல், பனை மற்றும் தென்னை மரமேறி விழும்போது ஏற்பட்ட விளைவுகளை புரிந்து கொள்ள முயற்சித்து அதன் விளைவாக கண்ட தீர்வே வர்ம மருத்துவம் ஆகும். இதை போல, குழந்தை மருத்துவம், மகளிர் மருத்துவம், சூல் மருத்துவம், ஆண்கள் மருத்துவம், வயிறு நோய்கள் மருத்தவம், இரண (புண்கள்)  மருத்துவம்  என சித்த மருத்துவ துறை பல விழுதுகளை பரப்பி இருக்கிறது. 

இன்று தமிழக, இந்திய மற்றும் உலக தமிழர்களின் அரங்கில், ஏற்படும் பொருளாதார தாக்கம், சித்த மருத்துவ வளர்ச்சியிலும் பிரதி பலிக்கிறது. உடல் ஆரோக்கியத்தை தருவதோடு மட்டுமல்லாமல், பல லட்சம் மக்களுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் வேலை வாய்ப்பை அள்ளி தருகிறது சித்த மருத்துவம்.  

தமிழர்களின் மொழிக்கு BA, MA, MPhil, PhD போன்ற பல்கலை கழக அங்கீகாரம் பெற்ற படிப்புகள் உள்ளன. ஆனால், நம்முடைய பாரம்பரிய வேளாண்மை, உணவு, கட்டடக் கலை, சிற்ப கலை போன்ற இன்னும் எத்தனையோ விடயங்களுக்கு அரசின் பல்கலைகழக அங்கீகாரம் போதிய அளவு இல்லை. இதில் சிறப்பம்சமாக, சித்த மருத்துவத்துக்கு என்று BSMS, MD, MPhil, PhD போன்ற பல்கலை கழக அங்கீகாரம் பெற்ற படிப்புகள் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ளன. இவ்வளவு பின் புலம் இருந்தும் ஏன் நமது சித்த மருத்துவம் இன்றளவும் லேகியம் என்றும் கஷாயம் என்றும், midnight masala (தொலைகாட்சி மூலம்) என்றும் கேலிக்கு உள்ளாகிறது. ஏன் சீன மருத்துவத்தை போல நோபல் பரிசு பெறும் நிலைக்கு உயர்வாக பார்க்கப்படவில்லை?  இந்திய அளவில் ஏன் இதற்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கவில்லை? இந்தியா இதை தன் பெருமையாக உயர்த்திப்பிடித்து உலக அரங்கில் சீனாவிற்கு இணையான மரபு மருத்துவத்தை நாங்களும் கொண்டுள்ளோம் என்று ஏன் உயர்த்திப்பிடிக்கவில்லை? ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக இதை ஆராய்வதும், பரந்துபட்ட சிந்தனையுடன்,  உலகப்பார்வையுடன், அமெரிக்கா, சீனா, கொரியா, மலேசியா, ஹாங்காங்  உள்ளிட்ட பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவம் குறித்த ஆராய்ச்சி மாநாடுகள் தொடர்பாக சுற்றிவந்துள்ள அனுபவத்தைக் கொண்டு நமக்கு கொட்டிக்கிடக்கும் பொருளாதார,  வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமாக வாய்ப்புகளை விவாதிப்பதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.  

உலகில் ஒவ்வொரு இனமும் தமது அடையாளங்களான பாரம்பரியத்தை தேடி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், நமது சித்த மருத்துவ முறைகள் நமக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நம் சமூகம் மருத்துவ அறிவியலில் வளர்ச்சி கண்ட சமூகம் என்று மார்தட்டி கொள்ள வாய்ப்பு இருந்தால் மறுப்பார் யார்? சக்கரத்தின் கணித சூத்திரம் தெரியாமலே, சக்கரம் செய்து மாட்டு வண்டி ஓட்டி கொண்டுருந்தோம். இதை போலதான் என்னவென்றே தெரியாமலே நமது வாழ்க்கை முறைகள் அறிவியலால் பொதிந்து உருண்டு ஓடுகிறது. உணவு பழக்கம், மருத்துவம், உளவியல் கூறுகள் அனைத்தும் சமுக அளவில் (Public Health Practice) புழக்கத்தில் கொண்டு வரப்பட்டு, அதை நடை முறைப்படுத்தும் பொழுது ஆன்மிக மற்றும் சமையத்தை மையமாக வைத்து நமது பண்டைய ஆரோக்கிய வாழ்வு முறை சுழன்று கொண்டிருந்தது. ஆனால், இன்று எல்லாமே அறிவியலை மையமாக வைத்தே இயங்குகிறது. இக்கால கட்டத்தில், நமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் நலவாழ்வு முறைகள் எல்லாம், அறிவியலை மையமாக வைத்து சுழற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

பல கால கட்டத்தில் பல தன்னார்வ அமைப்புகள், வைத்திய பெருங்குடிகள், அரசுகள், என்று எல்லோரும் எடுத்த முயற்சிகள் ஏன் இன்று அதன் பலனை தரவில்லை? சித்த மருத்துவம் வளர்வதால் தமிழக பொருளாதாரம் வளரும்; தமிழகப் பொருளாதாரம் வளர்வதால் இந்தியப் பொருளாதாரம் வளரும். சித்த மருத்துவம் கடந்து வந்த பாதைகள், சித்த மருத்துவம் எந்த இடத்தில் இருக்கிறது, அது எவ்வாறு நமது தமிழக பொருளாதாரத்தை வலுப்படுத்தும், என்ன திட்டங்கள் தேவை, சித்த மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், சித்த மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளுடன் போட்டி போட முடியுமா, வெளி நாடு வாழ் தமிழர்கள் என்ன செய்யலாம், எப்படி சித்த மருத்துவத்தை சந்தை படுத்துவது, எப்படி மற்ற நாடுகளுக்கு எடுத்து செல்வது,  எப்படி வேலை வாய்ப்புகளை பெருக்குவது என்பன போன்ற பல்வேறு கோணங்களில் இந்த தொடர் கட்டுரை அலசி ஆராய போகிறது.

 -  சித்தம் தெளியும்  (சித்தம் வளரும்)   

by Swathi   on 28 Apr 2018  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்
மனித உடல் என்கிற அதிசயம்... மனித உடல் என்கிற அதிசயம்...
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.