|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் - தொடர் அறிமுகம் |
||||||||
“அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது”
இக்காலத்தில் சித்தர்கள் கூறிய வாழ்வினை வாழ இயலுமா? என்கிற ஐயம் (சந்தேகம்) பலர் மனதில் தோன்றும். சித்தர்கள் கூறிய அடிப்படைக் கருத்து மாறாமல் எக்காலத்திற்கும் ஏற்றாற்போல நம் வாழ்வினை திருத்தி அமைத்துக் கொள்ள முடியும். சிறிய முயற்சிகளை மேற்கொண்டால் போதும். உதாரணத்திற்கு
அற்றது போற்றி யுணின்”. (குறள்-942).
முதனாளிற் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம் உண்பதிரு பொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம் அடர் நான்கு மதிக்கொருகால் பேதியுறை நுகர்வோம்
முதல் நாளில் சமைத்த உணவு அமுது போன்றதாயிருந்தாலும் உண்ணக் கூடாது. ஒரு நாளிற்கு இருவேளை உணவு போதுமானது. நான்கு மாதத்திற்கு ஒரு முறை உடம்பினை சுத்தம் செய்யும் பொருட்டு பேதி மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும் என்பவை மேற்கூறப்பட்ட சித்தர் பாடல்களின் விளக்கமாகும். இது போன்ற ஏராளமான சித்தர் கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்துபவைகளாக உள்ளன.
மருத்துவ மாமேதை செ.நெ.தெய்வநாயகம் அவர்களால் 2002ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட இந்திய நலவாழ்வு நல்லறம் (HEALTH INDIA FOUNDATION) என்கிற அரசு சாராத (NGO) தொண்டு நிறுவனத்தின் கீழ் இம்மருத்துவமனை செயல்படுகிறது.அங்கு சித்தர்களால் கூறப்பட்ட வாழ்வியல் முறைகளை நோயளிகளுக்குச் சொல்லித் தருகிறோம்.அவர்களின் அனுபவக் கருத்துக்கள் மற்றும் இக்கால அறிவியலோடு தொடர்புபடுத்திய சித்தர் வாழ்வியல் கருத்துக்களைக் வலைத்தமிழ் வழியாக இந்த கட்டுரைகள் வாயிலாக உங்களோடு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். மானிடத்தின் நோயற்ற நலமான வாழ்வு ஒன்றே இப்பணியின் நோக்கமாகும். ஒவ்வொரு வாரமும் வரும் தொடர் சம்பந்தமான உங்கள் ஐயங்களுக்கு நான் விளக்கமளிக்க அணியமாயுள்ளேன். உங்கள் கருத்துக்கள் எனக்கு வந்து சேரும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தமைக்கும் , உலகத் தமிழர்களுடன் நம் தமிழ் அறிவான சித்தமருத்துவத்தை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கும், சித்த மருத்துவம் குறித்த விளக்கங்களை கட்டுரையாகவும், காணொலியாகவும் பதிவு செய்து மக்களிடம் கொண்டு செல்ல காண்பித்த தமிழ் உணர்வுக்கும் வலைத்தமிழ் ஆசரியர் குழுவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
(இத்தொடர் வரும் செப்டம்பர் 16 முதல் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் வெளிவரும்)
மருத்துவர் ப.செல்வ சண்முகம் சித்த மருத்துவ ஆலோசகர் செயலர்- இந்திய நலவாழ்வு நல்லறம் சென்னை. கைபேசி: 91 - 9894828968 siddhaselva@yahoo.co.in |
||||||||
by Swathi on 29 Aug 2014 0 Comments | ||||||||
Tags: Siddha Maruthuvam Nalam Kaakkum Siddha Maruthuvam Selva Shunmugam நலம் காக்கும் சித்தமருத்துவம் செல்வ சண்முகம் | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|