LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் - தொடர் அறிமுகம்

“அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது”


     இது வாழ்க்கைத் தத்துவத்தை மிகவும் நுட்பமாக ஆராய்ந்து கூறப்பட்ட தமிழ்ச் சான்றோரின் வாக்காகும். அரிதாகக் கிடைத்த இப்பிறப்பில் நாம் எண்ணிய உயரிய குறிக்கோளை அடைவதற்கு அடிப்படையாக இருப்பது நலமான உடல். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’.எல்லோரும் நோயில்லா வாழ்வு வாழவே ஆசைப்படுகிறோம். அதற்காக நாம் என்னென்ன முயற்சிகள் செய்கின்றோம்? அவை நம் நோயில்லா வாழ்விற்கு அடிப்படையாக அமைகின்றனவா? என்பது போன்ற கேள்விகள் நம் எல்லோர் மனதிலும் எழும்.


     பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் உலக மக்கள் அனைவரும் நலமான வாழ்வு வாழ்ந்து பேரின்பத்தில் திளைத்திருப்பதற்கு மிகச் சிறந்த வாழ்வியல் முறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அவை தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருந்த வரையிலும் நலமான வாழ்வு நீடித்தது.நவீன பண்பாட்டுப் படையெடுப்பால் சித்தர் வாழ்வியல் புறக்கணிக்கப்பட்டபோது நலவாழ்வு கேள்விக் குறியாகிவிட்டது.                    

 

இக்காலத்தில் சித்தர்கள் கூறிய வாழ்வினை வாழ இயலுமா? என்கிற ஐயம் (சந்தேகம்) பலர் மனதில் தோன்றும். சித்தர்கள் கூறிய அடிப்படைக் கருத்து மாறாமல் எக்காலத்திற்கும் ஏற்றாற்போல நம் வாழ்வினை திருத்தி அமைத்துக் கொள்ள முடியும். சிறிய முயற்சிகளை மேற்கொண்டால் போதும். உதாரணத்திற்கு 


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது                    

அற்றது போற்றி யுணின்”. (குறள்-942).  



    என்கிற வள்ளுவரின் வாக்கினை எடுத்துக் கொள்வோம். உண்ட உணவு செரித்துப் போனது தெரிந்த பின்பு அடுத்த வேளை உணவினை உண்ண வேண்டும்.அதாவது நன்றகாகப் பசி எடுத்த பின்பு உணவு உண்டால் மருந்தே தேவையில்லை என வள்ளுவர் உறுதிபடக் கூறுகின்றார். இதனை நாம் கடைபிடிப்பதில் என்ன இடையூறு உள்ளது?    

         

            முதனாளிற் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்

            உண்பதிரு பொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்

            அடர் நான்கு மதிக்கொருகால் பேதியுறை நுகர்வோம்

 

    முதல் நாளில் சமைத்த உணவு அமுது போன்றதாயிருந்தாலும் உண்ணக் கூடாது. ஒரு நாளிற்கு இருவேளை உணவு போதுமானது. நான்கு மாதத்திற்கு ஒரு முறை உடம்பினை சுத்தம் செய்யும் பொருட்டு பேதி மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும் என்பவை மேற்கூறப்பட்ட சித்தர் பாடல்களின் விளக்கமாகும். இது போன்ற ஏராளமான சித்தர் கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்துபவைகளாக உள்ளன.                  

 

மருத்துவ மாமேதை செ.நெ.தெய்வநாயகம் அவர்களால் 2002ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட இந்திய நலவாழ்வு நல்லறம் (HEALTH INDIA FOUNDATION) என்கிற அரசு சாராத (NGO) தொண்டு நிறுவனத்தின் கீழ் இம்மருத்துவமனை செயல்படுகிறது.அங்கு சித்தர்களால் கூறப்பட்ட வாழ்வியல் முறைகளை நோயளிகளுக்குச் சொல்லித் தருகிறோம்.அவர்களின் அனுபவக் கருத்துக்கள் மற்றும் இக்கால அறிவியலோடு தொடர்புபடுத்திய சித்தர் வாழ்வியல் கருத்துக்களைக் வலைத்தமிழ் வழியாக இந்த கட்டுரைகள் வாயிலாக உங்களோடு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். மானிடத்தின் நோயற்ற நலமான வாழ்வு ஒன்றே இப்பணியின் நோக்கமாகும். ஒவ்வொரு வாரமும் வரும் தொடர் சம்பந்தமான  உங்கள் ஐயங்களுக்கு நான் விளக்கமளிக்க அணியமாயுள்ளேன். உங்கள் கருத்துக்கள் எனக்கு வந்து சேரும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தமைக்கும் , உலகத் தமிழர்களுடன் நம் தமிழ் அறிவான சித்தமருத்துவத்தை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கும், சித்த மருத்துவம் குறித்த விளக்கங்களை கட்டுரையாகவும், காணொலியாகவும் பதிவு செய்து மக்களிடம் கொண்டு செல்ல காண்பித்த தமிழ் உணர்வுக்கும் வலைத்தமிழ் ஆசரியர் குழுவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. 

 

(இத்தொடர் வரும் செப்டம்பர் 16 முதல் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் வெளிவரும்) 

 

                            மருத்துவர் ப.செல்வ சண்முகம்

                       சித்த மருத்துவ ஆலோசகர்

                       செயலர்- இந்திய நலவாழ்வு நல்லறம்

                       சென்னை.

                       கைபேசி: 91 - 9894828968 

                        siddhaselva@yahoo.co.in  

by Swathi   on 29 Aug 2014  0 Comments
Tags: Siddha Maruthuvam   Nalam Kaakkum Siddha Maruthuvam   Selva Shunmugam   நலம் காக்கும் சித்தமருத்துவம்   செல்வ சண்முகம்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கொட்டாவியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 42
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.