LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46

வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் :

வாந்தி என்பது இரைபையில்  உள்ள உணவுகள் மற்றும் சீரண   நீர்கள் வயிற்றின் அழுத்து விசையினால் வாய் மூலமும் சில வேளை மூக்கின் மூலமும் வெளித்தள்ளப்படுதல் ஆகும். தமாக வெளித்தள்ளபடுவதும் (involuntary) நம் முயற்சியால் நிகழ்வதும் உண்டு(voluntaryvoluntary).

உடலில் வாந்தி ஏற்படுத்தும் சில முக்கிய காரணங்கள்  

1. வயிற்றின் உள்ளடுக்கு அழற்சி (Gastritis) 

2. வயிற்றுள் ஒவ்வாத உணவுகள்( food allergies), நச்சு கலந்த உணவுகள்,  ( food poisons – stomach flu) , விடக்கிருமிகள் கலந்த உணவுகள் (Food contaminated with microbes) 

3. வயிற்று உணவுக்குழல் பின்னோட்டம் (Gastro gastro esophageal reflexophageal reflux), அளவிற்கு அதிகமாக உண்ணுதல். 

4.ஒற்றைத் தலைவலி. 

5. வயிறு குடல் பாதைகளில் ஏற்படும் புண்கள் (Peptic Ulcers). 

6. வயிற்று இயக்கம் மெதுவாக நிகழ்தல் (Gastro paresis = Slow stomach emptying) 

7. கல்லீரல், பித்தப்பை கோளாறுகள் – கல்லீரல் சீரண நீர்க் குறைபாடு. 

8. மன அழுத்தம் (Emotional  Stress), பயம், கோபம், தூக்கம், படபடப்பு, போன்ற பிற மனநிலை மாறுபாடுகள். 

9. உடல் உறுப்புகளில் ஏற்படும் அதிக வலி வந்தியை உண்டாக்கும்.  காட்டாக. சிறுநீரகக் கல். 

10. கருவுற்றிருக்கும் காலம். (Morning sickness during pregnancy). 

11. பயண வாந்தி  (Sea sickness, Motion sickness). 

12. சில நோய் நிலைகள்.

மாரடைப்பு, மூளைக்கட்டி, புற்று நோய்கள், தீவிரக்காய்ச்சல், குடல்வால் நோய் (Appendicitis), குடல் அடைப்பு நோய்கள் (Blockage in the intestine)  போன்ற பல நோய்கள் வாந்தியினை உண்டாக்கும். 

13. மருந்துகள்.

புற்று நோக்கான மருந்துகள் (chemotherapy), மற்றும் கதிர்வீச்சு மருத்துவம் (Radio therapy),  போன்றவை.


பொதுவாக வாந்தி என்பது உடல் இயங்கியலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைச் சீர் செய்வதற்காக உடலில் தாமாகவே ஏற்படும் நிகழ்வேயாகும்.  இந்த நிகழ்வின் போது வழக்கமாக உடலில் நன்மைகளே நிகழும். காட்டாக உணவோடு நச்சுக்கிருமிகள் வயிற்றிக்குள் சென்றால் வாந்தி நிகழும்.  இது ஒரு வகையான உடலின் எதிர்ப்பாற்றலாகும் (INNATE IMMUNITY).   இதனால் கிருமிகள் உடலுக்குள் சென்று கேடுகள் விளையாமல் தடுக்கப்படும்.   இது போன்றே நச்சுப் பொருட்களும் ஒவ்வாத பொருட்களும் வாந்தியின் மூலம் வெளியேற்றப்படும்.

     இது போன்ற நிலைகளில் வாந்தியைத் தடுக்க முற்பட்டால் பல கேடுகள் உடலில் நிகழும்.  வாந்தியை அடக்கினால் உண்டாகும் துன்பங்களைக் கீழ்க்கண்ட சித்தர் பாடல் நம்மக்கு தெரிவிக்கின்றது.  

 

           “சத்தியை யடக்கி னக்கால்  

                தடித்திட கடிகுட் டங்கள்

           மெத்தவுந் தினவு பாண்டு

                மேவு கண் ரோக முண்டாம்;

           பித்தத்தின் விட பாகங்கள்

                பெருகிடும் சுவாசம் காய்ச்சல்

           பற்றிய காசமாகும்

                பகர்ந்த இக் குணங்கள் உண்டே.

 

சத்தி -  வாந்தி

     வந்தியினை ஒருவன் தன் முயற்சியால் அடக்கினால் உடலில் நச்சுத்தன்மையுண்டாகி  விடக்கடியினால்  (Poisoning)  ஏற்படுவது போன்ற தோல் அரிப்பும் தடிப்பும் ஏற்படும்.

இரத்த சோகை உண்டாகும்.  கண் நோய்கள் உண்டாகும்.

     வாந்தியின் மூலமாக உடலின் அழல் (பித்தம்) என்கிற உயிராற்றல் சீர்படும் என்று நமக்கு தெரியும்.  இதனை அடக்குவதால் அழல் என்கிற சூடு உடலில் கூடும்.  பின்பு உடல் வீக்கமும் காய்ச்சலும் மூச்சு விட சிரமும் இருமலும் தொடரும் என்று இப்பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.

     கீழ்க்கண்ட நிலைகளில் உடனடி மருத்துவ ஆலோசனை தேவை. 

1. நச்சு உள்ளே சென்றுவிட்டது என்ற ஐயம் (சந்தேகம்) இருந்தால் (Poisoning) 

2. இரத்தம் வாந்தியுடன் கலந்திருந்தால் 

3. வித்தியாசனமான நிறங்கள் (Brown, Black) வாந்தியில் தோன்றினால். 

4. 24 மணி நேரத்திற்கு மேல் வாந்தி தொடர்ந்தால். 

5. 8 மணி நேரம் வயிற்றுள் எதுவும் தங்கவில்லை எனில் (நீர் குடித்தாலும் உடனே வாந்தியானால்) 

6. அதிக தலைவலி, கழுத்து இறுக்கம் இருந்தால் 

7. 6 மணி நேரம் சிறுநீர் கழியவில்லை எனில் 

8. அதிகமாக வயிற்று வலி, அடி வயிற்றில் திருகு வலி ஏற்பட்டால். 

9. உடலில் நீர்ச்சத்து குறைந்தால்  (Dehydration).

நீர்ச்சத்து குறைந்ததை சில அறிகுறிகளால் அறியலாம்.  அவை வாய் வறட்சி, அதி தாகம், தோல் சுருக்கம், கண் சுருக்கம், அழுகை வரும் போதும் கண்ணீர் வராமலிருத்தல் மிகவும் குறைவாக சிறுநீர் கழிதல் அதுவும் அடர் மஞ்சள் நிறமாக இருத்தல்.

வாந்தியை தன் முயற்சியால் அடக்கக் கூடாது.  அதே போல் காரணம் தெரியாமல் மருத்துவ ஆலோசனை இன்றி வாந்தியை நிறுத்தும் மருந்துகள் உபயோகிக்ககூடது.  

by Swathi   on 27 Jul 2015  0 Comments
Tags: வாந்தி   சித்த மருத்துவம்   Vomit   Siddha Maruthuvam           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை  அடக்கினால் வரும் துன்பங்கள் - 46 நலம் காக்கும் சித்த மருத்துவம் : வாந்தியை அடக்கினால் வரும் துன்பங்கள் - 46
நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44 நலம் காக்கும் சித்த மருத்துவம் : இருமலை அடக்கினால் வரும் துன்பங்கள் – 44
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.