வாலு படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு, பாண்டிராஜ் இயக்கத்தில், இது நம்ம ஆளு என்ற படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில், அச்சம் என்பது மடமையடா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்விரு படங்களும் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், சிம்பு செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையில் நடிக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகின. இதை, சிம்புவும் உறுதி செய்தார்.
இந்நிலையில், வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், சிம்பு ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் எனவும், நாதன் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்பது இன்னும் முடிவாக வில்லையாம்.
அனேகமாக, அச்சம் என்பது மடமையடா படபிடிப்பு முடிவடைந்ததும், சிம்பு, செல்வராகவன் படத்திலும், கிருத்திகா உதயநிதி படத்திலும் ஒரே சமயத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
|