LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

லிட்டில் இந்தியா கலவரம் : 52 இந்தியர் நாடு திரும்பும் அவலம்

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 8ம் தேதி சாலை விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார். இதையடுத்து, அங்கு வசிக்கும் இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர், கலவரத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் ஏராளமான பொதுச் சொத்துகள் நாசப்படுத்தினர். சிங்கப்பூர் போலீசார் கலவரத்தை ஒடுக்கி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, கைது செய்தனர். இது தொடர்பாக, தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த, ஏழு இந்தியர்களை போலீசார் விடுதலை செய்துள்ளனர். 28 இந்தியர்கள் மீது, பொதுச் சொத்துகளை நாசம் செய்தல், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையான செயல்களில் ஈடுபடுதல், போன்ற ஏராளமான குற்றப் பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த, 52 பேர், வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் உட்பட, 53 பேரை, சிங்கப்பூர் அரசு, அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப, உத்தரவிட்டு உள்ளது. மேலும் கலவரத்தில் ஈடுபட்ட, 200 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 17 Dec 2013  0 Comments
Tags: லிட்டில் இந்தியா   சிங்கப்பூர்   லிட்டில் இந்தியா கலவரம்   Little India   Singapore   Singapore Indians   Singapore Government  
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !! சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !!
தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் !
சிங்கப்பூர் தமிழ் மாதம் நிகழ்வுகளில் ஒன்றான உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தின் சிங்கப்பூர் தமிழ் மாதம் நிகழ்வுகளில் ஒன்றான உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தின்
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !! சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
லிட்டில் இந்தியா கலவரம் : 52 இந்தியர் நாடு திரும்பும் அவலம் லிட்டில் இந்தியா கலவரம் : 52 இந்தியர் நாடு திரும்பும் அவலம்
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை : சிங்கப்பூர் பிரதமர் !! வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை : சிங்கப்பூர் பிரதமர் !!
நாட்டு மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை - சிங்கப்பூர் அரசின் வேலைவாய்ப்பு விதிமுறை !! நாட்டு மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை - சிங்கப்பூர் அரசின் வேலைவாய்ப்பு விதிமுறை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.