LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சிந்தனை செய் மனமே !

நான்

புத்தனை  நினைத்தாலும்

சித்த வேதம் படித்தாலும்  

நித்தம் என் உள்ளம்

சித்தமும் கலங்குதடா !

 

என்

தூக்கம் கெட்டு

துக்கம் சூழ இரவில்

வாட்டும் சிந்தனைகள்

வந்து வந்து போகுதடா !

 

நான்

நிம்மதி கிடைக்கும்  

சத்தியத்தை நினைத்து

தினம் கடைபிடித்தாலும்

துன்பம் வந்து சூழுதடா!

 

நான்

அல்லலை நீக்க

அறிவோடு போராடியும்

தெளிவு பிறக்காமல்

உள்ளம் கலங்குதடா !

 

நான்

சினம் கூடாது

நினைத்து நின்றாலும்

வாழ்வில்

சினம் வந்து

குழப்பம் உண்டாகுதடா !

 

 

கதிரவன் உதிக்க மறந்தாலும்

கடவுளை மறக்காமல்

வழிபட்டு வந்தாலும்

துன்பம் வந்து மிரட்டுதடா !

 

பெற்ற தாயை

பிள்ளை மறந்தாலும்

உற்ற துணை நீயென்று

துதித்து நின்றாலும்

துயரம் விலக மறுக்குதடா! 

 

எளிமையில் வாழ்ந்து

தனிமையில் இருந்து

சிந்தித்துப் பார்த்தாலும்

சித்தமும் கலங்குதடா !

 

குருவைத் தேடித்தேடி

மனம்

உருக்குலைந்து

நின்ற வேளையில்

வள்ளலாரைக் கண்டு

வணங்கி மகிழ்ந்ததடா!

 

பூ.சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

 

 

 

 

 

by Subramanian   on 11 Sep 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.