|
||||||||
சிறப்பிலசை |
||||||||
இறுதிச் சீர்களின் இறுதி மொழிந்த
இடங்களில் ஈரசை யாய்வரும் குறிலசை,
சீர்முதற் குறிலசை சிறப்பி லசையாகும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் அடியிறுதி, அரையடி இறுதி ஒழிந்த இடங்களில் இரண்டசை நீளம் ஒலித்து வரும் குறிலசைகளும், சீரின் தொடக்கங்களில் வரும் குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகும்.
விளக்கம்: சிந்துப் பாடல்களில் குறிலசைகள் ஒலிக்கும் அளவு ஓரசையாகும். (இக்குறிலசைகள் அரையடி இறுதி, அடியிறுதிகளில் நீட்டம் பெற்று ஒலிக்கலாம்)
சிந்துப் பாடல்களில் அரையடி இறுதிச் சீர், அடியிறுதிச் சீர் ஒழிந்த சீர்களில் இக்குறுலசைகள் சில இடங்களில் நீட்டம் பெற்று இரண்டசையாகவும் ஒலித்து வருகின்றன. அவ்வாறு ஒலித்து வரும் இடங்களில் பாடலின் ஓசை சிறப்பாக இராது. ஆகவே அவ்வாறு வரும் குறிலசைகள் சிறப்பில்லாத அசைகளாகக் கருதப் படும்.
காட்டு : ‘பொன்னுலவு சென்னிகுள’ என்ற பாடலில் ஒன்பதாவது, பதினோராவது வரியில் வரும் து, து என்ற குறிலசைகள் நீட்டம் பெற்று வந்தன. அவை சிறப்பிலசைகள். (பாடலைப் பின் இணைப்பில் பார்க்கவும்)
அதே போன்று ஒரு சீரின் தொடக்கத்தில் குறில் ஒற்று, நெடில், நெடிலொற்று வரும்போது பாடலோசை சிறந்திருப்பது போலக் குறிலசை வரும்போது சிறப்பதில்லை. ஆகவே அவ்வாறு சீர்முதலில் வருகின்ற குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகக் கொள்ளப்படும்.
காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலில் சீர் முதலில் வருகின்ற
க-ன-ரு என்ற குறிலசைகள் சிறப்பிலசைகளாம்.
ஆறுமு கவடி வேலவ னேகலி
வெள்ளைத்த னமாகத் துள்ளுகி றாய்நெஞ்சில்
தங்கும்மு ருகோனே
இறுதிச் சீர்களின் இறுதி மொழிந்த இடங்களில் ஈரசை யாய்வரும் குறிலசை, சீர்முதற் குறிலசை சிறப்பி லசையாகும். கருத்து : சிந்துப் பாடல்களில் அடியிறுதி, அரையடி இறுதி ஒழிந்த இடங்களில் இரண்டசை நீளம் ஒலித்து வரும் குறிலசைகளும், சீரின் தொடக்கங்களில் வரும் குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகும்.
விளக்கம்: சிந்துப் பாடல்களில் குறிலசைகள் ஒலிக்கும் அளவு ஓரசையாகும். (இக்குறிலசைகள் அரையடி இறுதி, அடியிறுதிகளில் நீட்டம் பெற்று ஒலிக்கலாம்)
சிந்துப் பாடல்களில் அரையடி இறுதிச் சீர், அடியிறுதிச் சீர் ஒழிந்த சீர்களில் இக்குறுலசைகள் சில இடங்களில் நீட்டம் பெற்று இரண்டசையாகவும் ஒலித்து வருகின்றன. அவ்வாறு ஒலித்து வரும் இடங்களில் பாடலின் ஓசை சிறப்பாக இராது. ஆகவே அவ்வாறு வரும் குறிலசைகள் சிறப்பில்லாத அசைகளாகக் கருதப் படும்.
காட்டு : ‘பொன்னுலவு சென்னிகுள’ என்ற பாடலில் ஒன்பதாவது, பதினோராவது வரியில் வரும் து, து என்ற குறிலசைகள் நீட்டம் பெற்று வந்தன. அவை சிறப்பிலசைகள். (பாடலைப் பின் இணைப்பில் பார்க்கவும்)
அதே போன்று ஒரு சீரின் தொடக்கத்தில் குறில் ஒற்று, நெடில், நெடிலொற்று வரும்போது பாடலோசை சிறந்திருப்பது போலக் குறிலசை வரும்போது சிறப்பதில்லை. ஆகவே அவ்வாறு சீர்முதலில் வருகின்ற குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகக் கொள்ளப்படும்.
காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலில் சீர் முதலில் வருகின்ற க-ன-ரு என்ற குறிலசைகள் சிறப்பிலசைகளாம். ஆறுமு கவடி வேலவ னேகலி வெள்ளைத்த னமாகத் துள்ளுகி றாய்நெஞ்சில் தங்கும்மு ருகோனே
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|