LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

சிறப்பிலசை

 

இறுதிச் சீர்களின் இறுதி மொழிந்த
இடங்களில் ஈரசை யாய்வரும் குறிலசை,
சீர்முதற் குறிலசை சிறப்பி லசையாகும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் அடியிறுதி, அரையடி இறுதி ஒழிந்த இடங்களில் இரண்டசை நீளம் ஒலித்து வரும் குறிலசைகளும், சீரின் தொடக்கங்களில் வரும் குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகும்.
விளக்கம்: சிந்துப் பாடல்களில் குறிலசைகள் ஒலிக்கும் அளவு ஓரசையாகும். (இக்குறிலசைகள் அரையடி இறுதி, அடியிறுதிகளில் நீட்டம் பெற்று ஒலிக்கலாம்)
சிந்துப் பாடல்களில் அரையடி இறுதிச் சீர், அடியிறுதிச் சீர் ஒழிந்த சீர்களில் இக்குறுலசைகள் சில இடங்களில் நீட்டம் பெற்று இரண்டசையாகவும் ஒலித்து வருகின்றன. அவ்வாறு ஒலித்து வரும் இடங்களில் பாடலின் ஓசை சிறப்பாக இராது. ஆகவே அவ்வாறு வரும் குறிலசைகள் சிறப்பில்லாத அசைகளாகக் கருதப் படும்.
காட்டு : ‘பொன்னுலவு சென்னிகுள’ என்ற பாடலில் ஒன்பதாவது, பதினோராவது வரியில் வரும் து, து என்ற குறிலசைகள் நீட்டம் பெற்று வந்தன. அவை சிறப்பிலசைகள். (பாடலைப் பின் இணைப்பில் பார்க்கவும்)
அதே போன்று ஒரு சீரின் தொடக்கத்தில் குறில் ஒற்று, நெடில், நெடிலொற்று வரும்போது பாடலோசை சிறந்திருப்பது போலக் குறிலசை வரும்போது சிறப்பதில்லை. ஆகவே அவ்வாறு சீர்முதலில் வருகின்ற குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகக் கொள்ளப்படும்.
காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலில் சீர் முதலில் வருகின்ற 
க-ன-ரு என்ற குறிலசைகள் சிறப்பிலசைகளாம்.
ஆறுமு கவடி வேலவ னேகலி
வெள்ளைத்த னமாகத் துள்ளுகி றாய்நெஞ்சில்
தங்கும்மு ருகோனே

 

இறுதிச் சீர்களின் இறுதி மொழிந்த

இடங்களில் ஈரசை யாய்வரும் குறிலசை,

சீர்முதற் குறிலசை சிறப்பி லசையாகும்.

கருத்து : சிந்துப் பாடல்களில் அடியிறுதி, அரையடி இறுதி ஒழிந்த இடங்களில் இரண்டசை நீளம் ஒலித்து வரும் குறிலசைகளும், சீரின் தொடக்கங்களில் வரும் குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகும்.

 

விளக்கம்: சிந்துப் பாடல்களில் குறிலசைகள் ஒலிக்கும் அளவு ஓரசையாகும். (இக்குறிலசைகள் அரையடி இறுதி, அடியிறுதிகளில் நீட்டம் பெற்று ஒலிக்கலாம்)

 

சிந்துப் பாடல்களில் அரையடி இறுதிச் சீர், அடியிறுதிச் சீர் ஒழிந்த சீர்களில் இக்குறுலசைகள் சில இடங்களில் நீட்டம் பெற்று இரண்டசையாகவும் ஒலித்து வருகின்றன. அவ்வாறு ஒலித்து வரும் இடங்களில் பாடலின் ஓசை சிறப்பாக இராது. ஆகவே அவ்வாறு வரும் குறிலசைகள் சிறப்பில்லாத அசைகளாகக் கருதப் படும்.

 

காட்டு : ‘பொன்னுலவு சென்னிகுள’ என்ற பாடலில் ஒன்பதாவது, பதினோராவது வரியில் வரும் து, து என்ற குறிலசைகள் நீட்டம் பெற்று வந்தன. அவை சிறப்பிலசைகள். (பாடலைப் பின் இணைப்பில் பார்க்கவும்)

 

அதே போன்று ஒரு சீரின் தொடக்கத்தில் குறில் ஒற்று, நெடில், நெடிலொற்று வரும்போது பாடலோசை சிறந்திருப்பது போலக் குறிலசை வரும்போது சிறப்பதில்லை. ஆகவே அவ்வாறு சீர்முதலில் வருகின்ற குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகக் கொள்ளப்படும்.

 

காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலில் சீர் முதலில் வருகின்ற 

க-ன-ரு என்ற குறிலசைகள் சிறப்பிலசைகளாம்.

ஆறுமு கவடி வேலவ னேகலி

வெள்ளைத்த னமாகத் துள்ளுகி றாய்நெஞ்சில்

தங்கும்மு ருகோனே

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.