LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

சிறுபறைப்பருவம்

 

918 விரைவீசு தாமரைப் பூவொத்த செங்கரம் விளங்குமொரு தமருகத்தை -
      மேவத் திரித்துவடி வொடுநிறமு மொத்தலான் மேதினி யெலாம்பரந்து,
நுரைவீசு கங்கையொடு நட்புற் றுறும்பிறையை நோன்மையரு ளிற்றிரித்து -
      நுவலுமிப் பறைகுணி லெனக்கொண் டுளாய்கொலென நோக்கியுல கேத்தெடுப்ப,
வரைவீசு வெள்ளொளிய வயிரமும் பாசொளிய மரகதமும் வாரிவாரி -
      வண்குலைப் படுகரிடை மேயும்வளை கோட்டெருமை வாய்வெரீஇ யோட்டெடுப்பத்,
திரைவீசு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(1)
919 அறிவிலே மிந்திரிய மாவேட்ட மாடுதற் கமைகுறிஞ் சிப்பறையுமா -
      யடங்காத மனமென்னு மிமிலேறு கோடற் கடுத்தமுல் லைப்பறையுமாய்,
முறிவிலுடல் பொருளாவி கொள்ளைகோ டற்குற முழக்குபா லைப்பறையுமாய் -
      மூதுணர் வெனும்புன லறாதுற வொழுக்கற்கு மொய்த்தமரு தப்பறையுமாய்,
மறிவிலெம ரொடுமாறு கொண்டபர சமயர்கோண் மாய்க்குநெய் தற்பறையுமாய்,
      மாறாது பொலியவரை நின்றிழிந் தெஞ்ஞான்றும் வற்றுத லிலாதுவெப்பச்,
செறிவிலுயர் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(2)
920 ஓங்குபல புவனத் திளைப்பாற்று முன்னி· தொலிப்பதெவ னென்றுகருதி -
      யுணர்வுடைய ருண்மயங் கினுமயங் குகபின் புணர்ந்தி· தெனத்தெளிவரால்,
வீங்குபே ரறிவுடைப் பாணினியு முன்போல் வியாகரண வாஞ்சையுற்று -
      மேவிடினு மவனுமி· திற்றெனத் தேர்குவன் விளங்குகுணில் கைப்பற்றியே,
வாங்குதிரை மால்யானை பற்பல வெடுத்துநால் வாயரற் றிடவெறிந்து
      வரைபல வுருட்டிக் கடுத்துப் புகுந்துவரு மறிதிரைக் கடல்கலக்கித்,
தேங்குநீர்ப் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(3)
921 இருளின்விழி போற்கேவ லத்திற் கிடந்தநுமை யின்னருளி னுடல்விளக்க - 
      மேய்ப்பவது வாய்வினை வயிற்படர்ந் தீர்பின்னு மெய்த்துமெய் யாதுநாளும்,
பொருளற முஞற்றப் புரிந்திரு தளைச்செறிவு பூணாது கீழ்ப்படுத்தப் -
      புகறத்து வத்துருக் காட்சிசுத் தியுமுறப் பொலிதரு நுமைக்கண்டுநீர்,
மருளமை செருக்குறுதன் மாற்றவரு ணோக்கிவினை மற்றைந்தி னெழுதறவிர -
      மன்னுமருண் முதலெனக் கண்டொன் றுறாதொன்ற வம்மினென் றறிவித்தல்போற்,
றெருள்விரவு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(4)
922 மதிசெயுஞ் சித்தாந்த சைவவசு ணங்கட்கு வரியாழ் முழக்கமெனவும் -
      வளமருவு சுத்தசை வப்பயிர் களுக்குநெடு மாமழை முழக்கமெனவும்,
விதிசெயுங் கிரியா குருக்களர வங்கட்கு விழைமயின் முழக்கமெனவும் -
      வெய்யபர சமயப் பருத்திப் பொதிக்கழலும் வெவ்வழன் முழக்கமெனவு,
நிதிசெயு மணிக்குவை களுஞ்சந் தனக்குறடு நீளகிற் றுணியும்யானை -
      நிகரில்வெண் கோடுகளும் வரைநின்று வாருபு நிலந்தொறு மெறிந்தியாரையுந்,
திதிசெயும் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே. 
(5)
வேறு.
923 புத்தமு தோவென மெய்த்துதி பாடிப் புந்தி விரும்புநரும்
      புகரற வோரறு காலமு மெண்ணிப் போற்றி வணங்கநரும்
சித்த மிருத்தி விடாம லருச்சனை செய்து மதிப்பவருஞ்
      செங்கை குவித்தரு கெய்தி யடிப்பணி செய்யும் விருப்பினரும்
மத்த வருட்கண் வழங்கென நின்றெதி ராடி வழுத்துநரு
      மாகிய பற்பல செந்தா மரைக ளலர்த்து மிளங்கதிரே
முத்தமிழ் தேர்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(6)
924 மருவிய வாசைப் பேயை யொழித்திட மந்திர வாதியுமாய்
      மாறாப் புண்ணிய மகவு வளர்த்திட வாய்ப்புறு மன்னையுமாய்ப்
பொருவி லிடும்பைச் சேறு புலர்த்தப் பொலிதரு பருதியுமாய்ப்
      போர்த்திடு பரசம யக்களி றொழியப் போதரு சிங்கமுமாய்
வெருவரு வெய்ய வினைக்கா டொழிதர வெய்தெழு வன்னியுமாய்
      விடாத பவக்கட் செவியொழி யப்புள் வேந்தனு மாய்ப்பொலிவாய்
முருகலர் நீர்த்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. 
(7)
925 மன்னிய நாமே பரசிவ மென்றும் வயங்கும் மடியாரை
      வழிபடு மதுவே நம்மடி யடைதரு வழியென் றுங்கருணை
துன்னிய நந்திரு நாமம தேயரு டொகுமந் திரமென்றுந்
      துயரம் வருத்து மவாமுத லடலே தோலா வலியென்றும்
பின்னிய நந்திரு வருளர னம்மொடு பெயரா தொன்றுதலே
      பேரின் பென்று மெமக்கரு ளிப்பணி பேணிக் கொண்டருள்வோய்
முன்னிய வண்டுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. 
(8)
926 பெய்வள மாரி யெழுங்குமி ழிக்கிணை பெற்ற வுடற்கணறாப்
      பெட்பினர் வெய்ய சினக்கனல் பொங்கப் பெறுகொடு மனமுருடர்
பொய்வள நாடுபு செந்நில நீரிற் போர்த்த மயக்கமுளார்
      பொல்லா ரிவர்தமை யாளுத லாலாம் புகழென வுட்கொண்டு
மெய்வள மார்கரு ணைத்திறம் யாரும் வெளிப்படை யாலுணர்வான்
      வெய்யே மையுமினி தாண்டருள் குரவா மேலோர் பலர்சூழு
மொய்வள மார்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. 
(9)
927 வாரி யுடுத்த புலிக்கண் விபூதி வயக்குத லிலராயு
      மன்னிய புண்ணிய மேய்க்குங் கண்மணி வாஞ்சை யுறாராயுஞ்
சீரிய வக்கர மைந்து நவிற்றுத றேறா தொழிவாருந்
      திகழ்தரு நின்னடி யார்த மடிப்பணி செய்யா தகல்வாரு
மாரியர் கோவென நின்னடி சார்ந்துநி னருண்முக மேலாரு
      மாகிய முருடர் கவுட்புடை யொப்ப வலங்குபொ னாலாய
மூரி மதிற்றுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. 
(10)

 

918 விரைவீசு தாமரைப் பூவொத்த செங்கரம் விளங்குமொரு தமருகத்தை -

      மேவத் திரித்துவடி வொடுநிறமு மொத்தலான் மேதினி யெலாம்பரந்து,

நுரைவீசு கங்கையொடு நட்புற் றுறும்பிறையை நோன்மையரு ளிற்றிரித்து -

      நுவலுமிப் பறைகுணி லெனக்கொண் டுளாய்கொலென நோக்கியுல கேத்தெடுப்ப,

வரைவீசு வெள்ளொளிய வயிரமும் பாசொளிய மரகதமும் வாரிவாரி -

      வண்குலைப் படுகரிடை மேயும்வளை கோட்டெருமை வாய்வெரீஇ யோட்டெடுப்பத்,

திரைவீசு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -

      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.

(1)

919 அறிவிலே மிந்திரிய மாவேட்ட மாடுதற் கமைகுறிஞ் சிப்பறையுமா -

      யடங்காத மனமென்னு மிமிலேறு கோடற் கடுத்தமுல் லைப்பறையுமாய்,

முறிவிலுடல் பொருளாவி கொள்ளைகோ டற்குற முழக்குபா லைப்பறையுமாய் -

      மூதுணர் வெனும்புன லறாதுற வொழுக்கற்கு மொய்த்தமரு தப்பறையுமாய்,

மறிவிலெம ரொடுமாறு கொண்டபர சமயர்கோண் மாய்க்குநெய் தற்பறையுமாய்,

      மாறாது பொலியவரை நின்றிழிந் தெஞ்ஞான்றும் வற்றுத லிலாதுவெப்பச்,

செறிவிலுயர் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -

      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.

(2)

920 ஓங்குபல புவனத் திளைப்பாற்று முன்னி· தொலிப்பதெவ னென்றுகருதி -

      யுணர்வுடைய ருண்மயங் கினுமயங் குகபின் புணர்ந்தி· தெனத்தெளிவரால்,

வீங்குபே ரறிவுடைப் பாணினியு முன்போல் வியாகரண வாஞ்சையுற்று -

      மேவிடினு மவனுமி· திற்றெனத் தேர்குவன் விளங்குகுணில் கைப்பற்றியே,

வாங்குதிரை மால்யானை பற்பல வெடுத்துநால் வாயரற் றிடவெறிந்து

      வரைபல வுருட்டிக் கடுத்துப் புகுந்துவரு மறிதிரைக் கடல்கலக்கித்,

தேங்குநீர்ப் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -

      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.

(3)

921 இருளின்விழி போற்கேவ லத்திற் கிடந்தநுமை யின்னருளி னுடல்விளக்க - 

      மேய்ப்பவது வாய்வினை வயிற்படர்ந் தீர்பின்னு மெய்த்துமெய் யாதுநாளும்,

பொருளற முஞற்றப் புரிந்திரு தளைச்செறிவு பூணாது கீழ்ப்படுத்தப் -

      புகறத்து வத்துருக் காட்சிசுத் தியுமுறப் பொலிதரு நுமைக்கண்டுநீர்,

மருளமை செருக்குறுதன் மாற்றவரு ணோக்கிவினை மற்றைந்தி னெழுதறவிர -

      மன்னுமருண் முதலெனக் கண்டொன் றுறாதொன்ற வம்மினென் றறிவித்தல்போற்,

றெருள்விரவு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -

      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.

(4)

922 மதிசெயுஞ் சித்தாந்த சைவவசு ணங்கட்கு வரியாழ் முழக்கமெனவும் -

      வளமருவு சுத்தசை வப்பயிர் களுக்குநெடு மாமழை முழக்கமெனவும்,

விதிசெயுங் கிரியா குருக்களர வங்கட்கு விழைமயின் முழக்கமெனவும் -

      வெய்யபர சமயப் பருத்திப் பொதிக்கழலும் வெவ்வழன் முழக்கமெனவு,

நிதிசெயு மணிக்குவை களுஞ்சந் தனக்குறடு நீளகிற் றுணியும்யானை -

      நிகரில்வெண் கோடுகளும் வரைநின்று வாருபு நிலந்தொறு மெறிந்தியாரையுந்,

திதிசெயும் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -

      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே. 

(5)

 

வேறு.

923 புத்தமு தோவென மெய்த்துதி பாடிப் புந்தி விரும்புநரும்

      புகரற வோரறு காலமு மெண்ணிப் போற்றி வணங்கநரும்

சித்த மிருத்தி விடாம லருச்சனை செய்து மதிப்பவருஞ்

      செங்கை குவித்தரு கெய்தி யடிப்பணி செய்யும் விருப்பினரும்

மத்த வருட்கண் வழங்கென நின்றெதி ராடி வழுத்துநரு

      மாகிய பற்பல செந்தா மரைக ளலர்த்து மிளங்கதிரே

முத்தமிழ் தேர்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே

      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.

(6)

924 மருவிய வாசைப் பேயை யொழித்திட மந்திர வாதியுமாய்

      மாறாப் புண்ணிய மகவு வளர்த்திட வாய்ப்புறு மன்னையுமாய்ப்

பொருவி லிடும்பைச் சேறு புலர்த்தப் பொலிதரு பருதியுமாய்ப்

      போர்த்திடு பரசம யக்களி றொழியப் போதரு சிங்கமுமாய்

வெருவரு வெய்ய வினைக்கா டொழிதர வெய்தெழு வன்னியுமாய்

      விடாத பவக்கட் செவியொழி யப்புள் வேந்தனு மாய்ப்பொலிவாய்

முருகலர் நீர்த்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே

      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. 

(7)

925 மன்னிய நாமே பரசிவ மென்றும் வயங்கும் மடியாரை

      வழிபடு மதுவே நம்மடி யடைதரு வழியென் றுங்கருணை

துன்னிய நந்திரு நாமம தேயரு டொகுமந் திரமென்றுந்

      துயரம் வருத்து மவாமுத லடலே தோலா வலியென்றும்

பின்னிய நந்திரு வருளர னம்மொடு பெயரா தொன்றுதலே

      பேரின் பென்று மெமக்கரு ளிப்பணி பேணிக் கொண்டருள்வோய்

முன்னிய வண்டுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே

      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. 

(8)

926 பெய்வள மாரி யெழுங்குமி ழிக்கிணை பெற்ற வுடற்கணறாப்

      பெட்பினர் வெய்ய சினக்கனல் பொங்கப் பெறுகொடு மனமுருடர்

பொய்வள நாடுபு செந்நில நீரிற் போர்த்த மயக்கமுளார்

      பொல்லா ரிவர்தமை யாளுத லாலாம் புகழென வுட்கொண்டு

மெய்வள மார்கரு ணைத்திறம் யாரும் வெளிப்படை யாலுணர்வான்

      வெய்யே மையுமினி தாண்டருள் குரவா மேலோர் பலர்சூழு

மொய்வள மார்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே

      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. 

(9)

927 வாரி யுடுத்த புலிக்கண் விபூதி வயக்குத லிலராயு

      மன்னிய புண்ணிய மேய்க்குங் கண்மணி வாஞ்சை யுறாராயுஞ்

சீரிய வக்கர மைந்து நவிற்றுத றேறா தொழிவாருந்

      திகழ்தரு நின்னடி யார்த மடிப்பணி செய்யா தகல்வாரு

மாரியர் கோவென நின்னடி சார்ந்துநி னருண்முக மேலாரு

      மாகிய முருடர் கவுட்புடை யொப்ப வலங்குபொ னாலாய

மூரி மதிற்றுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே

      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே. 

(10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.