LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

சிற்றிற்பருவம்

 

908 உருவார் மதிய மிளங்காலை யுதிப்ப தெவனென் றுன்னிமயங்
      குற்றுக் கணப்போ திருந்தனம்பி னுணர்ந்தோம் வேடப் பொலிவதன்பின்
மருவா ராத்த மாலைதுயல் வருதோ ளொருநீ யெனத்தெளிந்தோ
      மற்றப் பொழுதே விரைந்தெழுந்து மகிழ்ந்து பணிந்தோ நீறளித்தாய்
வெருவார் கண்ட வுடனெழுதன் மேவா ரென்று திருவுளத்து
      மிக்க சினங்கொண் டிதுசெய்தன் மேலாம் பெருமைக் கழகேயோ
திருவார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(1)
909 ஒளிசா னினது வருகையுளத் துவந்தோம் யாங்கள் வகுத்தவறை
      யொன்று ளிருத்தி யெனமுகம னுரைத்தோ மதனுக் கெங்கள்சித்த
ரளிசா லருளின் வகுத்தவறை யன்றென் றொழித்தா யடுமணற்சோ
      றைய வுண்க வெனநமக்கிங் காகா தாநம் விடைக்கென்றாய் 
களிசால் யாங்க ளினிச்செய்யக் கடவதொன்று மிலையடிகள்
      கருத்தி லென்னோ நினைந்தீது கருதின் யாங்கள் செயலென்னே
தெளிசா றுறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(2)
910 ஆரும் புழுதி யறப்புனல்கொண் டாட்டித் திருவொற் றாடையிடற்
      கடியார் பலரு ளாரெனின்வே றளைந்து சென்றா லாகாதோ
பேருங் சிறியோ மியற்றுவது பேணாச் சிறுவீ டாதலினாற்
      பெரியோ யொருநீ யியற்றுவது பேணும் பெருவீ டாகியதா
லோரு மிதுவு நின்னடிம ணுரிš மதனாற் கன்றுவது
      மொருங்கி யாங்கள் வருந்துவது முணரா திருத்த லருளன்றே
தேருந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே 
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(3)
911 அருந்து பதம்பார்த் தோருவேட னமைத்துக் கொடுத்த வூனெச்சி
      லடங்க நுகர்ந்து முடியிலவ னடிசூட் டிடவு மமைதரவேற்
றிருந்த துரையா தினையவனுண் டிட்ட சேட மெடுத்துதவி
      யெல்லார் முடிக்கு மடிசூட்டு மென்று புகன்றோ மிதுபிழையோ
வருந்து மெமது விண்ணப்ப மறாம லேற்க வேலாயேன்
      மன்னு மருளி லானெனநின் மாணாக் கருக்கெல் லாமுரைப்போந்
திருந்து துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(4)
912 ஐய முன்னைப் பழக்கநினைந் தழிப்பே னென்னி லுலகுயிர்கட்
      கமைந்த மலமா தியமூன்று மடங்க வழித்தி யடுகாமம்
வெய்ய குரோத முதலாறும் வீட வழித்தி நினையன்றி
      வேறும் பொருளுண் டென்றுரைக்கும் வீணர் மதமு மறவழித்தி -
வைய முவக்கு மிவையன்றி மதியா யாங்க ளாடிடத்து
      வந்து வகுப்ப தழித்தனையேல் வருவ தறமோ மாப்புகழோ
செய்ய துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. 
(5)
913 எல்லார் தமக்கு மனுக்கிரக மியற்று லோமென் றொருபெயரிட்
      டிங்கு மேவி யெங்களிடத் தென்னோ வழித்தற் றெழில்பூண்டாய்
வல்லா ரெதுசெய் யினுஞ்செயலா மறுப்பா ரொருவ ரின்மையினால்
      வல்லார் லாளா விருப்பதலால் வாய்பே சுதற்கும் வழக்குண்டோ
வில்லார் மணிமா ளிகைகடொறும் விளங்கா நின்ற நலநோக்கி
      விண்ணோர் கண்ணே றுறாவண்ணம் விரித்துப் பொருத்து முறையே போற்
செல்லார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(6)
914 கூறு முலகர் விரும்புபெருங் குரவர் பெருமா னீயென்னிற்
      குலவ நினைக்காண் டொறும்யாங்கள் கும்பிட் டிடுவோ மதுவன்றி
வேறு தனித்து மொழிந்திடினும் விரும்பிக் கேட்போ மினிதியற்றும்
      வீட்டை யழிப்பான் றொடங்கினையேல் விதியா காது பொறுத்திருத்த
னாறு மலர்ப்பைம் பொழிறோறு நகுபைங் கிளியா கமங்கூற
      நச்சு பூவை யுணர்ந்துகற்ப நண்ணுங் குயில்கட் கினிதோதத்
தேறுந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(7)
915 கோணார் பிறையுங் கழிதலையுங் கொன்றைத் தொடையும் புலித்தோலுங்
      குலவு நுதற்க ணொடுபிறவுங் கூடா தொழித்துச் சுவேச்சையினோ
ரேணா ருருக்கொண் டிங்கடைந்த திறைஞ்சு மவர்கட் கருள்வதற்கோ
      வெங்கள் சிறுவீ டழிப்பதற்கோ வியம்பல் வேண்டு மிறையோனே
பூணார் முலைநன் மடமாதர் புணர்மா ளிகையிற் சூளிகையிற்
      பொருத்து மணிச்செங் கதிரெழுந்து போய்வெங் கதிர்க்கு மாறாகச்
சேணார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. 
(8)
916 மாலா ரிளைய மகனாய மதவே ளுடம்போ கற்பகஞ்சால்
      வான்கூட் டுண்ணுந் திறலவுணர் வாழ்ந்த கொடிய முப்புரமோ
பாலா ரயன்மா லொடுங்கவரும் படர்பே ரூழிப் புவனமோ
      பரவு மடிகள் பொருளாகப் பற்றி யழித்தல் செய்வதற்குக்
கோலார் வளைக்கை மடவார்யாங் குழுமி யியற்று மிதுகுளிர்பூங்
      கோலப் பொழில்சூழ் வாவியினுங் குளிரோ டையினுந் தாயெழுந்து
சேலார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. 
(9)
917 வீங்கும் விருப்பின் யாங்களணி வீதி யிடத்தி லியற்றுமிதின்
      மேவுஞ் சுவரச் சிறுவிதிசெய் வேள்விக் களமே கலையன்று
தாங்கு மிதனுட் செம்மணிக டயங்கு மதனுட் டழலன்று
      தழையா நின்ற வெங்குழுவத் தக்கன் மகத்திற் குழுவன்றே
பாங்கு பெறவா லடிக்குரவு பயின்றாற் போல வடுதொழில்யாம்
      பயில்வோ நினையாந் தடுத்திலமிப் பண்பு தகவோ பலவளமுந்
தேங்குத் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. 
(10)

 

908 உருவார் மதிய மிளங்காலை யுதிப்ப தெவனென் றுன்னிமயங்

      குற்றுக் கணப்போ திருந்தனம்பி னுணர்ந்தோம் வேடப் பொலிவதன்பின்

மருவா ராத்த மாலைதுயல் வருதோ ளொருநீ யெனத்தெளிந்தோ

      மற்றப் பொழுதே விரைந்தெழுந்து மகிழ்ந்து பணிந்தோ நீறளித்தாய்

வெருவார் கண்ட வுடனெழுதன் மேவா ரென்று திருவுளத்து

      மிக்க சினங்கொண் டிதுசெய்தன் மேலாம் பெருமைக் கழகேயோ

திருவார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.

(1)

909 ஒளிசா னினது வருகையுளத் துவந்தோம் யாங்கள் வகுத்தவறை

      யொன்று ளிருத்தி யெனமுகம னுரைத்தோ மதனுக் கெங்கள்சித்த

ரளிசா லருளின் வகுத்தவறை யன்றென் றொழித்தா யடுமணற்சோ

      றைய வுண்க வெனநமக்கிங் காகா தாநம் விடைக்கென்றாய் 

களிசால் யாங்க ளினிச்செய்யக் கடவதொன்று மிலையடிகள்

      கருத்தி லென்னோ நினைந்தீது கருதின் யாங்கள் செயலென்னே

தெளிசா றுறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.

(2)

910 ஆரும் புழுதி யறப்புனல்கொண் டாட்டித் திருவொற் றாடையிடற்

      கடியார் பலரு ளாரெனின்வே றளைந்து சென்றா லாகாதோ

பேருங் சிறியோ மியற்றுவது பேணாச் சிறுவீ டாதலினாற்

      பெரியோ யொருநீ யியற்றுவது பேணும் பெருவீ டாகியதா

லோரு மிதுவு நின்னடிம ணுரிš மதனாற் கன்றுவது

      மொருங்கி யாங்கள் வருந்துவது முணரா திருத்த லருளன்றே

தேருந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே 

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.

(3)

911 அருந்து பதம்பார்த் தோருவேட னமைத்துக் கொடுத்த வூனெச்சி

      லடங்க நுகர்ந்து முடியிலவ னடிசூட் டிடவு மமைதரவேற்

றிருந்த துரையா தினையவனுண் டிட்ட சேட மெடுத்துதவி

      யெல்லார் முடிக்கு மடிசூட்டு மென்று புகன்றோ மிதுபிழையோ

வருந்து மெமது விண்ணப்ப மறாம லேற்க வேலாயேன்

      மன்னு மருளி லானெனநின் மாணாக் கருக்கெல் லாமுரைப்போந்

திருந்து துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.

(4)

912 ஐய முன்னைப் பழக்கநினைந் தழிப்பே னென்னி லுலகுயிர்கட்

      கமைந்த மலமா தியமூன்று மடங்க வழித்தி யடுகாமம்

வெய்ய குரோத முதலாறும் வீட வழித்தி நினையன்றி

      வேறும் பொருளுண் டென்றுரைக்கும் வீணர் மதமு மறவழித்தி -

வைய முவக்கு மிவையன்றி மதியா யாங்க ளாடிடத்து

      வந்து வகுப்ப தழித்தனையேல் வருவ தறமோ மாப்புகழோ

செய்ய துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. 

(5)

913 எல்லார் தமக்கு மனுக்கிரக மியற்று லோமென் றொருபெயரிட்

      டிங்கு மேவி யெங்களிடத் தென்னோ வழித்தற் றெழில்பூண்டாய்

வல்லா ரெதுசெய் யினுஞ்செயலா மறுப்பா ரொருவ ரின்மையினால்

      வல்லார் லாளா விருப்பதலால் வாய்பே சுதற்கும் வழக்குண்டோ

வில்லார் மணிமா ளிகைகடொறும் விளங்கா நின்ற நலநோக்கி

      விண்ணோர் கண்ணே றுறாவண்ணம் விரித்துப் பொருத்து முறையே போற்

செல்லார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.

(6)

914 கூறு முலகர் விரும்புபெருங் குரவர் பெருமா னீயென்னிற்

      குலவ நினைக்காண் டொறும்யாங்கள் கும்பிட் டிடுவோ மதுவன்றி

வேறு தனித்து மொழிந்திடினும் விரும்பிக் கேட்போ மினிதியற்றும்

      வீட்டை யழிப்பான் றொடங்கினையேல் விதியா காது பொறுத்திருத்த

னாறு மலர்ப்பைம் பொழிறோறு நகுபைங் கிளியா கமங்கூற

      நச்சு பூவை யுணர்ந்துகற்ப நண்ணுங் குயில்கட் கினிதோதத்

தேறுந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.

(7)

915 கோணார் பிறையுங் கழிதலையுங் கொன்றைத் தொடையும் புலித்தோலுங்

      குலவு நுதற்க ணொடுபிறவுங் கூடா தொழித்துச் சுவேச்சையினோ

ரேணா ருருக்கொண் டிங்கடைந்த திறைஞ்சு மவர்கட் கருள்வதற்கோ

      வெங்கள் சிறுவீ டழிப்பதற்கோ வியம்பல் வேண்டு மிறையோனே

பூணார் முலைநன் மடமாதர் புணர்மா ளிகையிற் சூளிகையிற்

      பொருத்து மணிச்செங் கதிரெழுந்து போய்வெங் கதிர்க்கு மாறாகச்

சேணார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. 

(8)

916 மாலா ரிளைய மகனாய மதவே ளுடம்போ கற்பகஞ்சால்

      வான்கூட் டுண்ணுந் திறலவுணர் வாழ்ந்த கொடிய முப்புரமோ

பாலா ரயன்மா லொடுங்கவரும் படர்பே ரூழிப் புவனமோ

      பரவு மடிகள் பொருளாகப் பற்றி யழித்தல் செய்வதற்குக்

கோலார் வளைக்கை மடவார்யாங் குழுமி யியற்று மிதுகுளிர்பூங்

      கோலப் பொழில்சூழ் வாவியினுங் குளிரோ டையினுந் தாயெழுந்து

சேலார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. 

(9)

917 வீங்கும் விருப்பின் யாங்களணி வீதி யிடத்தி லியற்றுமிதின்

      மேவுஞ் சுவரச் சிறுவிதிசெய் வேள்விக் களமே கலையன்று

தாங்கு மிதனுட் செம்மணிக டயங்கு மதனுட் டழலன்று

      தழையா நின்ற வெங்குழுவத் தக்கன் மகத்திற் குழுவன்றே

பாங்கு பெறவா லடிக்குரவு பயின்றாற் போல வடுதொழில்யாம்

      பயில்வோ நினையாந் தடுத்திலமிப் பண்பு தகவோ பலவளமுந்

தேங்குத் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே

      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. 

(10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.