|
||||||||
சிற்றிற்பருவம் |
||||||||
908 உருவார் மதிய மிளங்காலை யுதிப்ப தெவனென் றுன்னிமயங்
குற்றுக் கணப்போ திருந்தனம்பி னுணர்ந்தோம் வேடப் பொலிவதன்பின்
மருவா ராத்த மாலைதுயல் வருதோ ளொருநீ யெனத்தெளிந்தோ
மற்றப் பொழுதே விரைந்தெழுந்து மகிழ்ந்து பணிந்தோ நீறளித்தாய்
வெருவார் கண்ட வுடனெழுதன் மேவா ரென்று திருவுளத்து
மிக்க சினங்கொண் டிதுசெய்தன் மேலாம் பெருமைக் கழகேயோ
திருவார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(1)
909 ஒளிசா னினது வருகையுளத் துவந்தோம் யாங்கள் வகுத்தவறை
யொன்று ளிருத்தி யெனமுகம னுரைத்தோ மதனுக் கெங்கள்சித்த
ரளிசா லருளின் வகுத்தவறை யன்றென் றொழித்தா யடுமணற்சோ
றைய வுண்க வெனநமக்கிங் காகா தாநம் விடைக்கென்றாய்
களிசால் யாங்க ளினிச்செய்யக் கடவதொன்று மிலையடிகள்
கருத்தி லென்னோ நினைந்தீது கருதின் யாங்கள் செயலென்னே
தெளிசா றுறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(2)
910 ஆரும் புழுதி யறப்புனல்கொண் டாட்டித் திருவொற் றாடையிடற்
கடியார் பலரு ளாரெனின்வே றளைந்து சென்றா லாகாதோ
பேருங் சிறியோ மியற்றுவது பேணாச் சிறுவீ டாதலினாற்
பெரியோ யொருநீ யியற்றுவது பேணும் பெருவீ டாகியதா
லோரு மிதுவு நின்னடிம ணுரிš மதனாற் கன்றுவது
மொருங்கி யாங்கள் வருந்துவது முணரா திருத்த லருளன்றே
தேருந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(3)
911 அருந்து பதம்பார்த் தோருவேட னமைத்துக் கொடுத்த வூனெச்சி
லடங்க நுகர்ந்து முடியிலவ னடிசூட் டிடவு மமைதரவேற்
றிருந்த துரையா தினையவனுண் டிட்ட சேட மெடுத்துதவி
யெல்லார் முடிக்கு மடிசூட்டு மென்று புகன்றோ மிதுபிழையோ
வருந்து மெமது விண்ணப்ப மறாம லேற்க வேலாயேன்
மன்னு மருளி லானெனநின் மாணாக் கருக்கெல் லாமுரைப்போந்
திருந்து துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(4)
912 ஐய முன்னைப் பழக்கநினைந் தழிப்பே னென்னி லுலகுயிர்கட்
கமைந்த மலமா தியமூன்று மடங்க வழித்தி யடுகாமம்
வெய்ய குரோத முதலாறும் வீட வழித்தி நினையன்றி
வேறும் பொருளுண் டென்றுரைக்கும் வீணர் மதமு மறவழித்தி -
வைய முவக்கு மிவையன்றி மதியா யாங்க ளாடிடத்து
வந்து வகுப்ப தழித்தனையேல் வருவ தறமோ மாப்புகழோ
செய்ய துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(5)
913 எல்லார் தமக்கு மனுக்கிரக மியற்று லோமென் றொருபெயரிட்
டிங்கு மேவி யெங்களிடத் தென்னோ வழித்தற் றெழில்பூண்டாய்
வல்லா ரெதுசெய் யினுஞ்செயலா மறுப்பா ரொருவ ரின்மையினால்
வல்லார் லாளா விருப்பதலால் வாய்பே சுதற்கும் வழக்குண்டோ
வில்லார் மணிமா ளிகைகடொறும் விளங்கா நின்ற நலநோக்கி
விண்ணோர் கண்ணே றுறாவண்ணம் விரித்துப் பொருத்து முறையே போற்
செல்லார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(6)
914 கூறு முலகர் விரும்புபெருங் குரவர் பெருமா னீயென்னிற்
குலவ நினைக்காண் டொறும்யாங்கள் கும்பிட் டிடுவோ மதுவன்றி
வேறு தனித்து மொழிந்திடினும் விரும்பிக் கேட்போ மினிதியற்றும்
வீட்டை யழிப்பான் றொடங்கினையேல் விதியா காது பொறுத்திருத்த
னாறு மலர்ப்பைம் பொழிறோறு நகுபைங் கிளியா கமங்கூற
நச்சு பூவை யுணர்ந்துகற்ப நண்ணுங் குயில்கட் கினிதோதத்
தேறுந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(7)
915 கோணார் பிறையுங் கழிதலையுங் கொன்றைத் தொடையும் புலித்தோலுங்
குலவு நுதற்க ணொடுபிறவுங் கூடா தொழித்துச் சுவேச்சையினோ
ரேணா ருருக்கொண் டிங்கடைந்த திறைஞ்சு மவர்கட் கருள்வதற்கோ
வெங்கள் சிறுவீ டழிப்பதற்கோ வியம்பல் வேண்டு மிறையோனே
பூணார் முலைநன் மடமாதர் புணர்மா ளிகையிற் சூளிகையிற்
பொருத்து மணிச்செங் கதிரெழுந்து போய்வெங் கதிர்க்கு மாறாகச்
சேணார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(8)
916 மாலா ரிளைய மகனாய மதவே ளுடம்போ கற்பகஞ்சால்
வான்கூட் டுண்ணுந் திறலவுணர் வாழ்ந்த கொடிய முப்புரமோ
பாலா ரயன்மா லொடுங்கவரும் படர்பே ரூழிப் புவனமோ
பரவு மடிகள் பொருளாகப் பற்றி யழித்தல் செய்வதற்குக்
கோலார் வளைக்கை மடவார்யாங் குழுமி யியற்று மிதுகுளிர்பூங்
கோலப் பொழில்சூழ் வாவியினுங் குளிரோ டையினுந் தாயெழுந்து
சேலார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(9)
917 வீங்கும் விருப்பின் யாங்களணி வீதி யிடத்தி லியற்றுமிதின்
மேவுஞ் சுவரச் சிறுவிதிசெய் வேள்விக் களமே கலையன்று
தாங்கு மிதனுட் செம்மணிக டயங்கு மதனுட் டழலன்று
தழையா நின்ற வெங்குழுவத் தக்கன் மகத்திற் குழுவன்றே
பாங்கு பெறவா லடிக்குரவு பயின்றாற் போல வடுதொழில்யாம்
பயில்வோ நினையாந் தடுத்திலமிப் பண்பு தகவோ பலவளமுந்
தேங்குத் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(10)
908 உருவார் மதிய மிளங்காலை யுதிப்ப தெவனென் றுன்னிமயங் குற்றுக் கணப்போ திருந்தனம்பி னுணர்ந்தோம் வேடப் பொலிவதன்பின் மருவா ராத்த மாலைதுயல் வருதோ ளொருநீ யெனத்தெளிந்தோ மற்றப் பொழுதே விரைந்தெழுந்து மகிழ்ந்து பணிந்தோ நீறளித்தாய் வெருவார் கண்ட வுடனெழுதன் மேவா ரென்று திருவுளத்து மிக்க சினங்கொண் டிதுசெய்தன் மேலாம் பெருமைக் கழகேயோ திருவார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (1) 909 ஒளிசா னினது வருகையுளத் துவந்தோம் யாங்கள் வகுத்தவறை யொன்று ளிருத்தி யெனமுகம னுரைத்தோ மதனுக் கெங்கள்சித்த ரளிசா லருளின் வகுத்தவறை யன்றென் றொழித்தா யடுமணற்சோ றைய வுண்க வெனநமக்கிங் காகா தாநம் விடைக்கென்றாய் களிசால் யாங்க ளினிச்செய்யக் கடவதொன்று மிலையடிகள் கருத்தி லென்னோ நினைந்தீது கருதின் யாங்கள் செயலென்னே தெளிசா றுறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (2) 910 ஆரும் புழுதி யறப்புனல்கொண் டாட்டித் திருவொற் றாடையிடற் கடியார் பலரு ளாரெனின்வே றளைந்து சென்றா லாகாதோ பேருங் சிறியோ மியற்றுவது பேணாச் சிறுவீ டாதலினாற் பெரியோ யொருநீ யியற்றுவது பேணும் பெருவீ டாகியதா லோரு மிதுவு நின்னடிம ணுரிš மதனாற் கன்றுவது மொருங்கி யாங்கள் வருந்துவது முணரா திருத்த லருளன்றே தேருந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (3) 911 அருந்து பதம்பார்த் தோருவேட னமைத்துக் கொடுத்த வூனெச்சி லடங்க நுகர்ந்து முடியிலவ னடிசூட் டிடவு மமைதரவேற் றிருந்த துரையா தினையவனுண் டிட்ட சேட மெடுத்துதவி யெல்லார் முடிக்கு மடிசூட்டு மென்று புகன்றோ மிதுபிழையோ வருந்து மெமது விண்ணப்ப மறாம லேற்க வேலாயேன் மன்னு மருளி லானெனநின் மாணாக் கருக்கெல் லாமுரைப்போந் திருந்து துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (4) 912 ஐய முன்னைப் பழக்கநினைந் தழிப்பே னென்னி லுலகுயிர்கட் கமைந்த மலமா தியமூன்று மடங்க வழித்தி யடுகாமம் வெய்ய குரோத முதலாறும் வீட வழித்தி நினையன்றி வேறும் பொருளுண் டென்றுரைக்கும் வீணர் மதமு மறவழித்தி - வைய முவக்கு மிவையன்றி மதியா யாங்க ளாடிடத்து வந்து வகுப்ப தழித்தனையேல் வருவ தறமோ மாப்புகழோ செய்ய துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (5) 913 எல்லார் தமக்கு மனுக்கிரக மியற்று லோமென் றொருபெயரிட் டிங்கு மேவி யெங்களிடத் தென்னோ வழித்தற் றெழில்பூண்டாய் வல்லா ரெதுசெய் யினுஞ்செயலா மறுப்பா ரொருவ ரின்மையினால் வல்லார் லாளா விருப்பதலால் வாய்பே சுதற்கும் வழக்குண்டோ வில்லார் மணிமா ளிகைகடொறும் விளங்கா நின்ற நலநோக்கி விண்ணோர் கண்ணே றுறாவண்ணம் விரித்துப் பொருத்து முறையே போற் செல்லார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (6) 914 கூறு முலகர் விரும்புபெருங் குரவர் பெருமா னீயென்னிற் குலவ நினைக்காண் டொறும்யாங்கள் கும்பிட் டிடுவோ மதுவன்றி வேறு தனித்து மொழிந்திடினும் விரும்பிக் கேட்போ மினிதியற்றும் வீட்டை யழிப்பான் றொடங்கினையேல் விதியா காது பொறுத்திருத்த னாறு மலர்ப்பைம் பொழிறோறு நகுபைங் கிளியா கமங்கூற நச்சு பூவை யுணர்ந்துகற்ப நண்ணுங் குயில்கட் கினிதோதத் தேறுந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (7) 915 கோணார் பிறையுங் கழிதலையுங் கொன்றைத் தொடையும் புலித்தோலுங் குலவு நுதற்க ணொடுபிறவுங் கூடா தொழித்துச் சுவேச்சையினோ ரேணா ருருக்கொண் டிங்கடைந்த திறைஞ்சு மவர்கட் கருள்வதற்கோ வெங்கள் சிறுவீ டழிப்பதற்கோ வியம்பல் வேண்டு மிறையோனே பூணார் முலைநன் மடமாதர் புணர்மா ளிகையிற் சூளிகையிற் பொருத்து மணிச்செங் கதிரெழுந்து போய்வெங் கதிர்க்கு மாறாகச் சேணார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (8) 916 மாலா ரிளைய மகனாய மதவே ளுடம்போ கற்பகஞ்சால் வான்கூட் டுண்ணுந் திறலவுணர் வாழ்ந்த கொடிய முப்புரமோ பாலா ரயன்மா லொடுங்கவரும் படர்பே ரூழிப் புவனமோ பரவு மடிகள் பொருளாகப் பற்றி யழித்தல் செய்வதற்குக் கோலார் வளைக்கை மடவார்யாங் குழுமி யியற்று மிதுகுளிர்பூங் கோலப் பொழில்சூழ் வாவியினுங் குளிரோ டையினுந் தாயெழுந்து சேலார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (9) 917 வீங்கும் விருப்பின் யாங்களணி வீதி யிடத்தி லியற்றுமிதின் மேவுஞ் சுவரச் சிறுவிதிசெய் வேள்விக் களமே கலையன்று தாங்கு மிதனுட் செம்மணிக டயங்கு மதனுட் டழலன்று தழையா நின்ற வெங்குழுவத் தக்கன் மகத்திற் குழுவன்றே பாங்கு பெறவா லடிக்குரவு பயின்றாற் போல வடுதொழில்யாம் பயில்வோ நினையாந் தடுத்திலமிப் பண்பு தகவோ பலவளமுந் தேங்குத் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|