தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் கதாநயகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த, மெரினா, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இவர் லட்சங்களை தாண்டி தற்போது கோடிகளில் சம்பாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் நடித்து கொண்டிருந்த போதே, தனது மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியாக இருந்த ஆர்த்தி மதுரையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றிருந்தார். சிவகார்த்திகேயன் மான் கராத்தே படப்பிடிப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று காலை ஆர்த்தி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து அப்பாவாகியுள்ள சிவகார்த்திகேயனுக்கு, திரையுலகில் இருந்தும், நட்பு வட்டாரங்களில் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருகின்றன.
|