|
||||||||
ஆறாம் திருமுறை-42 |
||||||||
6.042.திருநெய்த்தானம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
2503 மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்
இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்
இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.1
அறிவில்லாத நெஞ்சமே! யான் கூற நீ கேட்பாயாக. உடம்பாகிய இடத்தின் உட்புறத்தில், ஐம்பொறிகள் பரு உடம்பாய் நின்று, விரும்பிய இன்றியமையாத பொருள்களைத் தந்து நிரப்பி, வினைகளுக்குத் தங்கும் இடமாகிய இந்த உடம்பில் இருந்து, ஐம்புல நுகர்ச்சி நுகர்ந்து கொண்டே தப்பித்துப் போகலாம் என்ற எண்ணத்தை விட்டுவிடு. நீண்ட கருங்கண்ணியாகிய பார்வதி பாகனாய்க் கப்பல்கள் இயங்கும் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய நீலகண்டன் விரும்பி உறையும் திருநெய்த்தானத் திருக் கோயிலைத் துதித்துத் தியானிக்க வேண்டும் என்பதனை விருப்புற்று நினைத்து நீ செயற்பட்டால் பிறவிப் பிணியிலிருந்து தப்பலாம்.
2504 ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை
இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ
விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை
ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த
அம்மானை அரி அயனுங் காணா வண்ணம்
நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.2
நெஞ்சமே! நான் கூறுவதனைக் கேள்! பிறப்புக்கள் பலவற்றிற்கு ஏதுவாகி நீங்காத இவ்வுடல் தொடர்பிலிருந்து விரைவாக நீங்குதற்குரிய வழி உள்ளது என்பதனை யான் நினக்குக் கூறல் வேண்டா. தேவர்கள் தலைவராய், இவ்வுலகிலே என்னை அடிமை கொண்டவராய், மலையை வில்லாகக் கொண்டு மும்மதில் களையும் அழித்த பெருமானாராய்த் திருமாலும் பிரமனும் காணா வண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவராய் உள்ளவர் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்ற தலத்தைத் தியானிக்கும் வழியை விரும்பி நினைப்பாயானால் பிறவிப்பிணியிலிருந்து தப்பித்தல் கூடும்.
2505 பரவிப் பலபலவுந் தேடி யோடிப்
பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா
குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக்
குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ
இரவிக் குலமுதலா வானோர் கூடி
யெண்ணிறந்த கோடி யமர ராயம்
நிரவிக் கரியவன் நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.3
நெஞ்சே! நான் கூறுவதைக் கேள். உலகெங்கும் தேவை என்று கருதிப்பல பொருள்களையும் தேடித் திரிந்து பாழான இவ்வுடம்பிலே கிடந்து பின்விளைவை நோக்காது, உற்றார் உறவினரோடு கூடி வாழும் குடும்ப வாழ்க்கையை வாழ எண்ணி உடைந்து போதலை நீக்கு. பன்னிரு ஆதித்தர் முதலாகிய வானவர் இனத்தைச் சேர்ந்த கணக்கற்ற தேவர் கூட்டத்தார் ஒன்று சேர்ந்தாலும் தன் புகழை முழுமையாகச் சொல்ல முடியாத சிவபெருமானுடைய நெய்த்தானத்தை நினையுமா நினைத்தக்கால் உய்யலாம்.
2506 அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே
யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து
தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள்
இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும்
நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.4
நெஞ்சமே! அலைகள் போல ஓயாது செயற்படும் வினைக் கூறுகளுக்குச் சார்பாகிய இவ்வுடம்பில் அகப்பட்டு, ஆசை என்னும் கயிற்றால் சுருக்கிடப்படுமாறு தலையைக் கொடுத்து, கீழான இந்த உலக வாழ்வில் முழுகி மிகத் தளர்ந்து, நீ அஞ்சுதல் வேண்டா. இலைகளிடையே தோன்றும் கொன்றைப் பூ, கங்கை, பிறை இவற்றைப் பெரிய சடையிலே வைத்து மகிழ்ந்தவனாய்த் தேவர்கள் போற்றும் மேம்பட்ட நிலையிலுள்ளவனாகிய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும்.
2507 தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
ஆங்காரந் தவிர்நெஞ்சே யமரர்க் காக
முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று
முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.5
நெஞ்சே! உரிய காலம் முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதிநம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு. தேவர்களுக்காகப் பகைத்து வந்த மதில்கள் மூன்றும் அழியுமாறு முன்னொரு காலத்தில் விரைவாகத் தூக்கிய வில்லை வளைத்து அம்மதில்களைத் தீக்கு இரையாக்க நினைத்துச் செயற்பட்ட பெரிய கருணையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும்.
2508 மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி
வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை
கூத்தாடுங் குணமுடையான்கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப
அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.6
நெஞ்சே! துன்பமே விளைக்கின்ற இந்த உடலில் வாழும் வாழ்வு நிலையானது என்று கருதி வினைப்பயனிலே கிடந்து ஈடுபட்டு மகிழாதே. தம்மைப் பற்றித் தாழ்வாகக் கருதுபவர் மனத்து இருப்பவனாய், முருகனுக்குத் தந்தையாய், கூத்தாடுதலைப் பண்பாக உடையவனாய், கொல்லும் முத்தலை வேல் ஏந்தியகையனாய்த் திருவடிகளில், கழலும், சிலம்பும் ஒலிக்க இவ்வுலகமே பெயருமாறு ஆடும் ஊழிக் கூத்தில் மனநிறையுடையவனாகிய சிவபெருமானுடைய திருத்தலமாகிய நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாம்.
2509 பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு
வாசக் குழல்மடவார் போக மென்னும்
வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்
துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா
நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.7
நெஞ்சே! வருக. பேசுதற்கு ஏற்ற உயர்ந்த பொருள் அல்லாத இப்பிறவியைக் கிட்டுதற்கு அரிய பொருளாக உன் அற்பப்புத்தியில் கருதி நறுமணம் கமழும் கூந்தலையுடைய மகளிர் இன்பம் என்னும் வலையில் அகப்பட்டு அழியாமல், யானைத்தோலை உரித்துப் போர்த்துத்தூய திருநீறு பூசிப் பூணூல் அணிந்து, தன்னை அணுகாத கீழ்மக்களுக்கு அரியவனாயுள்ள சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
2510 அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண்
டருநோய்க் கிடமாய வுடலின் தன்மை
தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே
தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா
மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும்
நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.8
நெஞ்சே! ஐம்புலன்களால் நினைத்தவாறு செயற்படுத்தப்பட்டுக் கொடிய நோய்களுக்கு இருப்பிடமாகிய இவ்வுடலில் நிலையாமையை உனக்குப்புகலிடம் என்று கருதி ஐம்புல இன்பத்தில் ஆழ்ந்து போகாதே. தன்னைப் பற்றுக் கோடாக அடையாத வஞ்சமனத்தவர் காண முடியாத நீலகண்டனாய்த் தேவர்கள் தலைவன் என்று போற்றப்படும் மனத்துக்கினிய சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
2511 பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி
போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி
இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே
யிமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்
கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங்
கண்ணுதல்கண் டமராடிக் கருதார் வேள்வி
நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.9
நெஞ்சே! தகுதியற்ற இவ்வுடலில் வினைவயத்தால் புகுந்த உயிர் இதனை எந்த நேரத்திலும் விடுத்து நீங்கிவிடும் என்பதனை அறிந்தும் கீழான ஐம்புல நுகர்ச்சி வாழ்வினையே கருதிக் கொண்டிருந்து துயர்ப்படல் வேண்டா. தேவர்கள் தலைவனாய், ஒருகாலத்தில் பார்வதி அஞ்சுமாறு, கரிய அடிகளை உடையமதயானை அஞ்ச அதனை வெகுண்டவனாய், நெற்றிக் கண்ணனாய், தன்னைப் பரம்பொருளாகக் கருதாதவர் கூடி நிகழ்த்திய வேள்வியைப் போரிட்டு அழித்தவனாய், நிலையாக உகந்தருளியிருக்கும் நெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
2512 உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை
உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்
தரிந்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே
தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்
எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே
யெம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
6.042.10
விரதங்களை எல்லாம் மேற்கொண்டு தவ வாழ்வு வாழ முயன்று வாழாத நெஞ்சே! நிலையாமையை உடைய இவ்வுடல் என்றும் உள்ள உயிரைப்பற்ற வேண்டிய உனக்கு உரிய பொருள் அன்று. உண்மையை உனக்குக் கூறிவிட்டேன். தம்மிடத்துப் பொருளில்லாத வறியவர்களுக்கு ஒன்றும் ஈயாதவர்களுக்குத் தானும் எதுவும் ஈயாதவனாய்த் திரிபுரங்களை எரித்தவனாய்க் கையில் தீயை உடையவனாய் எட்டுத் தோள்களை உடைய எம்பெருமானே என்று தன்னைத் துதிக்காத இலங்கை மன்னனான இராவணனை நெரித்த, நெய்த்தானம் என்ற திருத்தலத்தை உகந்தருளி உறைகின்ற பெருமானை நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
திருச்சிற்றம்பலம்
6.042.திருநெய்த்தானம் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நெய்யாடியப்பர். தேவியார் - வாலாம்பிகையம்மை.
2503 மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம் இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும் இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம் வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.1
அறிவில்லாத நெஞ்சமே! யான் கூற நீ கேட்பாயாக. உடம்பாகிய இடத்தின் உட்புறத்தில், ஐம்பொறிகள் பரு உடம்பாய் நின்று, விரும்பிய இன்றியமையாத பொருள்களைத் தந்து நிரப்பி, வினைகளுக்குத் தங்கும் இடமாகிய இந்த உடம்பில் இருந்து, ஐம்புல நுகர்ச்சி நுகர்ந்து கொண்டே தப்பித்துப் போகலாம் என்ற எண்ணத்தை விட்டுவிடு. நீண்ட கருங்கண்ணியாகிய பார்வதி பாகனாய்க் கப்பல்கள் இயங்கும் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய நீலகண்டன் விரும்பி உறையும் திருநெய்த்தானத் திருக் கோயிலைத் துதித்துத் தியானிக்க வேண்டும் என்பதனை விருப்புற்று நினைத்து நீ செயற்பட்டால் பிறவிப் பிணியிலிருந்து தப்பலாம்.
2504 ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த அம்மானை அரி அயனுங் காணா வண்ணம் நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.2
நெஞ்சமே! நான் கூறுவதனைக் கேள்! பிறப்புக்கள் பலவற்றிற்கு ஏதுவாகி நீங்காத இவ்வுடல் தொடர்பிலிருந்து விரைவாக நீங்குதற்குரிய வழி உள்ளது என்பதனை யான் நினக்குக் கூறல் வேண்டா. தேவர்கள் தலைவராய், இவ்வுலகிலே என்னை அடிமை கொண்டவராய், மலையை வில்லாகக் கொண்டு மும்மதில் களையும் அழித்த பெருமானாராய்த் திருமாலும் பிரமனும் காணா வண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவராய் உள்ளவர் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்ற தலத்தைத் தியானிக்கும் வழியை விரும்பி நினைப்பாயானால் பிறவிப்பிணியிலிருந்து தப்பித்தல் கூடும்.
2505 பரவிப் பலபலவுந் தேடி யோடிப் பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக் குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ இரவிக் குலமுதலா வானோர் கூடி யெண்ணிறந்த கோடி யமர ராயம் நிரவிக் கரியவன் நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.3
நெஞ்சே! நான் கூறுவதைக் கேள். உலகெங்கும் தேவை என்று கருதிப்பல பொருள்களையும் தேடித் திரிந்து பாழான இவ்வுடம்பிலே கிடந்து பின்விளைவை நோக்காது, உற்றார் உறவினரோடு கூடி வாழும் குடும்ப வாழ்க்கையை வாழ எண்ணி உடைந்து போதலை நீக்கு. பன்னிரு ஆதித்தர் முதலாகிய வானவர் இனத்தைச் சேர்ந்த கணக்கற்ற தேவர் கூட்டத்தார் ஒன்று சேர்ந்தாலும் தன் புகழை முழுமையாகச் சொல்ல முடியாத சிவபெருமானுடைய நெய்த்தானத்தை நினையுமா நினைத்தக்கால் உய்யலாம்.
2506 அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள் தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள் இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும் நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.4
நெஞ்சமே! அலைகள் போல ஓயாது செயற்படும் வினைக் கூறுகளுக்குச் சார்பாகிய இவ்வுடம்பில் அகப்பட்டு, ஆசை என்னும் கயிற்றால் சுருக்கிடப்படுமாறு தலையைக் கொடுத்து, கீழான இந்த உலக வாழ்வில் முழுகி மிகத் தளர்ந்து, நீ அஞ்சுதல் வேண்டா. இலைகளிடையே தோன்றும் கொன்றைப் பூ, கங்கை, பிறை இவற்றைப் பெரிய சடையிலே வைத்து மகிழ்ந்தவனாய்த் தேவர்கள் போற்றும் மேம்பட்ட நிலையிலுள்ளவனாகிய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும்.
2507 தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப் பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த அனைத்துலகும் ஆளலா மென்று பேசும் ஆங்காரந் தவிர்நெஞ்சே யமரர்க் காக முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க நினைத்த பெருங் கருணையன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.5
நெஞ்சே! உரிய காலம் முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதிநம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு. தேவர்களுக்காகப் பகைத்து வந்த மதில்கள் மூன்றும் அழியுமாறு முன்னொரு காலத்தில் விரைவாகத் தூக்கிய வில்லை வளைத்து அம்மதில்களைத் தீக்கு இரையாக்க நினைத்துச் செயற்பட்ட பெரிய கருணையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும்.
2508 மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடுங் குணமுடையான்கொலைவேற் கையான் அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.6
நெஞ்சே! துன்பமே விளைக்கின்ற இந்த உடலில் வாழும் வாழ்வு நிலையானது என்று கருதி வினைப்பயனிலே கிடந்து ஈடுபட்டு மகிழாதே. தம்மைப் பற்றித் தாழ்வாகக் கருதுபவர் மனத்து இருப்பவனாய், முருகனுக்குத் தந்தையாய், கூத்தாடுதலைப் பண்பாக உடையவனாய், கொல்லும் முத்தலை வேல் ஏந்தியகையனாய்த் திருவடிகளில், கழலும், சிலம்பும் ஒலிக்க இவ்வுலகமே பெயருமாறு ஆடும் ஊழிக் கூத்தில் மனநிறையுடையவனாகிய சிவபெருமானுடைய திருத்தலமாகிய நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாம்.
2509 பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு வாசக் குழல்மடவார் போக மென்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே தூசக் கரியுரித்தான் தூநீ றாடித் துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.7
நெஞ்சே! வருக. பேசுதற்கு ஏற்ற உயர்ந்த பொருள் அல்லாத இப்பிறவியைக் கிட்டுதற்கு அரிய பொருளாக உன் அற்பப்புத்தியில் கருதி நறுமணம் கமழும் கூந்தலையுடைய மகளிர் இன்பம் என்னும் வலையில் அகப்பட்டு அழியாமல், யானைத்தோலை உரித்துப் போர்த்துத்தூய திருநீறு பூசிப் பூணூல் அணிந்து, தன்னை அணுகாத கீழ்மக்களுக்கு அரியவனாயுள்ள சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
2510 அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண் டருநோய்க் கிடமாய வுடலின் தன்மை தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே தாழக் கருதுதியே தன்னைச் சேரா வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும் நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.8
நெஞ்சே! ஐம்புலன்களால் நினைத்தவாறு செயற்படுத்தப்பட்டுக் கொடிய நோய்களுக்கு இருப்பிடமாகிய இவ்வுடலில் நிலையாமையை உனக்குப்புகலிடம் என்று கருதி ஐம்புல இன்பத்தில் ஆழ்ந்து போகாதே. தன்னைப் பற்றுக் கோடாக அடையாத வஞ்சமனத்தவர் காண முடியாத நீலகண்டனாய்த் தேவர்கள் தலைவன் என்று போற்றப்படும் மனத்துக்கினிய சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
2511 பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே யிமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக் கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங் கண்ணுதல்கண் டமராடிக் கருதார் வேள்வி நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.9
நெஞ்சே! தகுதியற்ற இவ்வுடலில் வினைவயத்தால் புகுந்த உயிர் இதனை எந்த நேரத்திலும் விடுத்து நீங்கிவிடும் என்பதனை அறிந்தும் கீழான ஐம்புல நுகர்ச்சி வாழ்வினையே கருதிக் கொண்டிருந்து துயர்ப்படல் வேண்டா. தேவர்கள் தலைவனாய், ஒருகாலத்தில் பார்வதி அஞ்சுமாறு, கரிய அடிகளை உடையமதயானை அஞ்ச அதனை வெகுண்டவனாய், நெற்றிக் கண்ணனாய், தன்னைப் பரம்பொருளாகக் கருதாதவர் கூடி நிகழ்த்திய வேள்வியைப் போரிட்டு அழித்தவனாய், நிலையாக உகந்தருளியிருக்கும் நெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
2512 உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந் தரிந்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன் எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே யெம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6.042.10
விரதங்களை எல்லாம் மேற்கொண்டு தவ வாழ்வு வாழ முயன்று வாழாத நெஞ்சே! நிலையாமையை உடைய இவ்வுடல் என்றும் உள்ள உயிரைப்பற்ற வேண்டிய உனக்கு உரிய பொருள் அன்று. உண்மையை உனக்குக் கூறிவிட்டேன். தம்மிடத்துப் பொருளில்லாத வறியவர்களுக்கு ஒன்றும் ஈயாதவர்களுக்குத் தானும் எதுவும் ஈயாதவனாய்த் திரிபுரங்களை எரித்தவனாய்க் கையில் தீயை உடையவனாய் எட்டுத் தோள்களை உடைய எம்பெருமானே என்று தன்னைத் துதிக்காத இலங்கை மன்னனான இராவணனை நெரித்த, நெய்த்தானம் என்ற திருத்தலத்தை உகந்தருளி உறைகின்ற பெருமானை நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|