LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

மந்திரம்

 

மனம் ஓர்மை நிலையில் எப்பொருளைத் தீவிரமாக நினைத்தாலும் அப்பொருளாகவே மாறிவிடுகிறது. The mind gets attuned to the ...level of that thing. இதையே உயிர்க் கலப்பு என்று சொல்கிறோம். அந்நிலையில் நாம் அப்பொருளை மதிக்கிறோம். அதனோடு நட்பை வளர்த்துக் கொள்கிறோம். அப்பொருளின் ஆற்றலை நம் உயர்வுக்குப் பயன் படுத்திக் கொள்கிறோம். இந்த தத்துவந்தான் தெய்வ வணக்கத்திலும் இருக்கிறது. இந்து நாகரிகத்தில் இதை 'மந்திரம், யந்திரம், தந்திரம்' என்பார்கள்.
நுட்பமும் வேகமும் பெறுமாறு தன் உயிரினது ஆற்றலை [மனோ சக்தியை] பெருக்கிக் கொள்ளல் - மனதின் திறனை உச்சபட்சமாக உயர்த்திக் கொள்ளல் - மந்திரமாகும். நாம் தவத்தினால் இதைச் சாதிக்கிறோம். மனமாக விரிதலை ஒழித்துத் தன்னில் தானாகவே நிற்கும் உயிர், பின்னால் தன் மூல நிலையையும் எய்தி மீளும் போது அதற்கு தூய்மையோடு வலிமையும், வலிமையோடு தூய்மையும் கிடைக்கின்றன. மெய்ப் பொருளிடம் எந்த மாசும் இல்லை. அதனினும் வலிமைமிக்கது எதுவும் இல்லை. அதனிடம் சென்று அதனுடன் மீளும் உயிருக்குத் தூய்மையும் ஆற்றல் மிகுதியும் இயல்பாகின்றன. இதுவே மந்திரம்.
எழுத்துக்களின் உச்சரிப்பில் அதிர்வியக்கம் ஏற்படுகின்றன. ஒவ்வொரு அதிர்வியக்கமும் உயிரினிடத்தில் ஒவ்வொரு மாறுதலை உண்டு பண்ணுகின்றன. எனவே ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. இதை துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றில் பீஜாட்சரம் - வீரிய எழுத்துக்கள் என்று சில இருக்கின்றன. அவற்றின் துணை கொண்டு உயிராற்றலை வளர்த்துச் சக்தி மிகுந்ததாகச் செய்து கொள்ளல் மட்டும் இக்காலத்தில் மந்திரம் என்று வழங்கப்படுகின்றது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். ஆம். மனமது செம்மையானால் மனமே மந்திரம். செபிக்க வேண்டியதில்லை. மனதிற்குச் செம்மை ஊட்டுவதே மனவளக்கலை.    
 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

மனம் ஓர்மை நிலையில் எப்பொருளைத் தீவிரமாக நினைத்தாலும் அப்பொருளாகவே மாறிவிடுகிறது. The mind gets attuned to the ...level of that thing. இதையே உயிர்க் கலப்பு என்று சொல்கிறோம். அந்நிலையில் நாம் அப்பொருளை மதிக்கிறோம். அதனோடு நட்பை வளர்த்துக் கொள்கிறோம். அப்பொருளின் ஆற்றலை நம் உயர்வுக்குப் பயன் படுத்திக் கொள்கிறோம். இந்த தத்துவந்தான் தெய்வ வணக்கத்திலும் இருக்கிறது. இந்து நாகரிகத்தில் இதை 'மந்திரம், யந்திரம், தந்திரம்' என்பார்கள்.

 

நுட்பமும் வேகமும் பெறுமாறு தன் உயிரினது ஆற்றலை [மனோ சக்தியை] பெருக்கிக் கொள்ளல் - மனதின் திறனை உச்சபட்சமாக உயர்த்திக் கொள்ளல் - மந்திரமாகும். நாம் தவத்தினால் இதைச் சாதிக்கிறோம். மனமாக விரிதலை ஒழித்துத் தன்னில் தானாகவே நிற்கும் உயிர், பின்னால் தன் மூல நிலையையும் எய்தி மீளும் போது அதற்கு தூய்மையோடு வலிமையும், வலிமையோடு தூய்மையும் கிடைக்கின்றன. மெய்ப் பொருளிடம் எந்த மாசும் இல்லை. அதனினும் வலிமைமிக்கது எதுவும் இல்லை. அதனிடம் சென்று அதனுடன் மீளும் உயிருக்குத் தூய்மையும் ஆற்றல் மிகுதியும் இயல்பாகின்றன. இதுவே மந்திரம்.

 

எழுத்துக்களின் உச்சரிப்பில் அதிர்வியக்கம் ஏற்படுகின்றன. ஒவ்வொரு அதிர்வியக்கமும் உயிரினிடத்தில் ஒவ்வொரு மாறுதலை உண்டு பண்ணுகின்றன. எனவே ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. இதை துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றில் பீஜாட்சரம் - வீரிய எழுத்துக்கள் என்று சில இருக்கின்றன. அவற்றின் துணை கொண்டு உயிராற்றலை வளர்த்துச் சக்தி மிகுந்ததாகச் செய்து கொள்ளல் மட்டும் இக்காலத்தில் மந்திரம் என்று வழங்கப்படுகின்றது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். ஆம். மனமது செம்மையானால் மனமே மந்திரம். செபிக்க வேண்டியதில்லை. மனதிற்குச் செம்மை ஊட்டுவதே மனவளக்கலை.    

 

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

by Swathi   on 17 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.