|
|||||
சிறுதானிய காய்கறி இட்லி |
|||||
தேவையானவை 1. வரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) - ஒரு கப் 2. பயத்தம் பருப்பு - கால் கப் 3. உளுத்தம் பருப்பு - அரை கப் 4. இஞ்சி, பச்சைமிளகாய் - 3 5. கேரட், பட்டாணி, கொத்துமல்லித்தலை, பெருங்காயத்தூள், உப்பு, நெய் - தேவையான அளவு செய்முறை 1. சிறுதானிய குருணைகளை அரை மணி நேரம் ஊறவிடவும்.
2. பயத்தம் பருப்பு, உளுந்தும் பருப்பு இரண்டையும் மூன்று மணி நேரம் ஊறவிட்டு, பின் தண்ணீரை வடித்து விட்டு, பச்சைமிளகாய், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும். கேரட்டை பொடியாக நறுக்கவும்.
3. அகலமான பாத்திரத்தில் கொத்துமல்லித்தலை, கேரட், அரைத்த கலவை, ஊற வைத்த சிறுதானிய குருணை, பட்டாணி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.(தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் சேர்க்கவும்)
4. பின்னர் இட்லி தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். இந்த இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்த இட்லி. |
|||||
by Swathi on 16 Jul 2014 1 Comments | |||||
Tags: Siruthaniya Kaikari Idli Small Grains Vegetable Idli சிறுதானிய காய்கறி இட்லி | |||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|