LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சமூக வலைத்தளங்கள் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்க ஒழுங்கு விதிகளை ஏற்படுத்த வேண்டும்- ஆப்பிள் நிறுவன தலைவர் பேட்டி!

சமூக வலைத்தள நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனிநபர்களின் விவரங்களைப் பாதுகாக்க புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் வகுக்க வேண்டியது அவசியம் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கூறி உள்ளார்.

இது குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது:

ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், சமீப காலங்களில் நடந்த தொழில்நுட்ப முறைகேடுகளால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

எனக்கு திறந்த சந்தையின் மீது பெரிய நம்பிக்கை உண்டு. ஆனால், திறந்தசந்தை என்பது பல வகைகளில் சிக்கலானது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Face book நிறுவனமும் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா கன்சல்டன்சி நிறுவனமும் சேர்ந்து பல லட்சக்கணக்கான ஃபேஸ்புக் பய னாளர்களின் விவரங்களை வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதனை நினைவுகூர்ந்து பேசிய டிம் குக், மேற்கண்டதை போன்று பல விவகாரங்களில் நிகழ்ந்த விளைவைப் பார்த்தால், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவுகோலில் எடுக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளதாக கூறினார். 

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஃபேஸ்புக் நிறுவனர் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் மீது பல முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அந்நிறுவன முதலீட்டாளர்களே அவரைப் பதவி விலகக் கோரி போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது. 

by Mani Bharathi   on 21 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.