|
|||||
சமூக வலைத்தளங்கள் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்க ஒழுங்கு விதிகளை ஏற்படுத்த வேண்டும்- ஆப்பிள் நிறுவன தலைவர் பேட்டி! |
|||||
சமூக வலைத்தள நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனிநபர்களின் விவரங்களைப் பாதுகாக்க புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் வகுக்க வேண்டியது அவசியம் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கூறி உள்ளார். இது குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், சமீப காலங்களில் நடந்த தொழில்நுட்ப முறைகேடுகளால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எனக்கு திறந்த சந்தையின் மீது பெரிய நம்பிக்கை உண்டு. ஆனால், திறந்தசந்தை என்பது பல வகைகளில் சிக்கலானது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். Face book நிறுவனமும் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா கன்சல்டன்சி நிறுவனமும் சேர்ந்து பல லட்சக்கணக்கான ஃபேஸ்புக் பய னாளர்களின் விவரங்களை வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனை நினைவுகூர்ந்து பேசிய டிம் குக், மேற்கண்டதை போன்று பல விவகாரங்களில் நிகழ்ந்த விளைவைப் பார்த்தால், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவுகோலில் எடுக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளதாக கூறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஃபேஸ்புக் நிறுவனர் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் மீது பல முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அந்நிறுவன முதலீட்டாளர்களே அவரைப் பதவி விலகக் கோரி போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Mani Bharathi on 21 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|