LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- சமூகப் பங்களிப்பு

எதிர்ப்புகளை எதிர்கொண்டு பயணிக்கும் இந்தியன் தாத்தா “டிராபிக் ராமசாமி (Traffic Ramaswamy)

டிராபிக் ராமசாமி தமிழக மக்களுக்கு அறிமுகமான ஒரு சிறந்த பொதுநலசேவகர். இவர் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்தை சரிசெய்ய தானே களத்தில் இறங்கி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினார். எனவே போலிசார் இவருக்கு அடையாள அட்டை வழங்கினர். பின்னர் பல்வேறு முக்கியமான பொதுநல வழக்குகளை தொடுத்து அதில் வெற்றிபெற்றுள்ளார். இருப்பினும்  பலமுறை இவருடைய வழக்குகளால் பாதிக்கப்பட்டோர் இவரை தாக்கியுள்ளனர். இருப்பினும் பயமின்றி தொடர்ந்து மக்கள் சேவை செய்துவருகிறார். பெரும்பாலான வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடும் நடைமுறையை கடைபிடிக்கிறார். அவர் தொடுத்து வெற்றிபெற்ற ஒரு சில வழக்குகள்: 

 

 

  • 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுபாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர்.
  • சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குக் கட்டிடங்களை கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்கள் செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது.
  • சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் கார் நிறுத்த வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுக்க பரவலாக அமல் செய்யப்படுகிறது.


அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி இவர்மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. பலமுறை கைதும் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இரும்பு மனம் படைத்த இந்தியன் தாத்தாவாக வலம் வருகிறார். ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களை முன்னின்று நடத்திவருகிறார். 

 

 

 

by Swathi   on 11 Apr 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.